இந்து மதம்

சுட்டிக் காட்டும் சில கிறிஸ்தவ நம்பிக்கைகள் 

கடவுள் பற்றி:                                                                                      English
   "கடவுள் ஒருவரே. அவருக்கு உருவம் இல்லை. அவருக்கு நிகராக எதுவுமில்லை. அவரே தொடக்கமும் முடிவுமாக இருக்கிறார்" -கிறிஸ்தவம்.
   "கடவுள் ஒருவரே" -ரிக் வேதம்.
   "கடவுளுக்கு உருவம் இல்லை" -யஜூர் வேதம்.
   "கடவுளுக்கு நிகராக எதுவுமில்லை" -ஸ்வேதாஸ்வர உபநிஷத்.

   "தந்தை, மகன், தூய ஆவியார் என்ற மூன்று ஆட்களில் கடவுள் தம்மை வெளிப் படுத்தி இருக்கிறார். இந்த ஆட்கள் ஒரே கடவுளாக இணைந்திருக்கிறனர். இவர் களுக்கு ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை உள்ளது. எனவே, அவர்களை மூன்று தனித்தனி கடவுளராக நாம் வேறுபடுத்த முடியாது. கடவுளின் இந்த இயல்பே அதிபுனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது" -கிறிஸ்தவம்.
   "மும்மூர்த்திகளும் ஒரே கடவுளின் மூன்று வடிவங்களே. அவர்கள் மூவராக காணப்பட்டாலும், உண்மையில் அவர்கள் ஒன்றே" -ஓஷோ.

படைப்பு பற்றி:
   "தந்தையாகிய கடவுள் தனது வார்த்தையால் (மகன்) இந்த பிரபஞ்சத்தை படைத்து, தனது அன்பின் ஞானத்தால் (தூய ஆவியார்) அவற்றுக்கு உயிர் இயக்கங்கள் அளித்தார். தம்மை அறிந்து, அன்பு செய்து, தமது மாட்சியில் பங்குபெற அவர் மனிதரைப் படைத்தார். காலங்களின் முடிவில் படைப்புகள் அனைத்தும் அழிவுற்று, புதிய விண்ணகமும் மண்ணகமும் தோன்றும்" -கிறிஸ்தவம்.
   "கடவுள் தனது வார்த்தையால் படைப்புகளை உருவாக்கி, உயிர் இயக்கங்கள் அளிக்கிறார். இறுதியில், அவர் அனைத்தையும் பிரளயத்தின் வழியாக அழித்து தன்னுள் ஒடுங்கச் செய்வார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப புதிய படைப்புகள் தோன்றும்" -இந்து மதம்.

   "தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி யிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. அப் பொழுது கடவுள் 'ஒளி தோன்றுக' என்றார்; ஒளி தோன்றிற்று" -தொடக்க நூல் 1:1-3.
   "அப்பொழுது, பகலுக்கும் இரவுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. முதலில் அங்கு இருள் இருளில் மறைந்திருந்தது. உலகம் நீரால் சூழப்பட்டு இருந்தது. கடவுள் வெறுமையிலும் வெற்றிடத்திலும் மறைந்து அமர்ந்திருந்தார். பின்பு அவர் படைக்கத் தொடங்கினார்" -யஜூர் வேதம்.

அவதாரம் பற்றி:
   "கடவுள் மனிதரைப் பாவங்களில் இருந்து மீட்க, ஒரே ஒருமுறை அவதாரம் எடுத்தார். கடவுளின் வாக்கு (இயேசு) மனித உடலெடுத்து சிலுவை மரணத்தின் மூலம் நமக்கு மீட்பு அளித்தார்" -கிறிஸ்தவம்.
   "உலகில் தீமைகள் பெருகும் போதெல்லாம் கடவுள் அவதாரம் எடுப்பார்" -இந்து மதம்.

கடவுளின் பலி பற்றி:
   "உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங் களைப் போக்குவதற்காக இயேசு ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்" -எபிரேயர் 9:26, 10:10.
   "மனிதத்தன்மையும் இறைத்தன்மையும் தன்னிலே கொண்ட இயேசு கிறிஸ்துவின் பலியின் அடையாளமாக திருப்பலி இருக்கிறது" -கிறிஸ்தவம்.
   "பிரஜாபதி சாவுக்குரிய மனிதத்தன்மையும், சாவாத இறைத்தன்மையும் கொண்ட வர். அவர் மக்களுக்காக தன்னையே பலியாக கையளித்தப்பின், பலி செலுத்துதலை தனக்கு ஓர் அடையாளமாக வைத்தார்" -சதப்பத பிராமணம்.

சில முரண்பாடுகள்:
   "கிரகங்களும் ராசிகளும் மனித வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கிரகங்கள் உண்டாக்கும் பாதிப்பை தவிர்க்க அவற்றை வணங்க வேண்டும்" -இந்து மதம்.
   "வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத் துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தி யுள்ளார்" -இணைச்சட்டம் 4:19.

   "மக்கள் எந்த உருவில் வேண்டுமானாலும் கடவுளுக்கு சிலைகளை உருவாக்கி, அவற்றுக்கு முன்பாக தலை வணங்கலாம்" -இந்து மதம்.
   "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள், மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவொரு உருவத்திலும் உங்களுக்கெனச் சிலையைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்ற வர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்" -இணைச்சட்டம் 4:23-24.

   "கடவுளை எந்த உருவிலும், சிலையிலும் கண்டு தியானிக்கலாம்" -இந்து மதம்.
   "கடவுள் தன்னை இயேசு கிறிஸ்துவின் உருவில் மட்டுமே வெளிப்படுத்தி இருக் கிறார். எனவே நாம் கடவுளை வெவ்வேறு உருவங்களில் கற்பனை செய்யக்கூடாது" -கிறிஸ்தவம்.
   "இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப் பேறு. ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புல னாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத் தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன" -கொலோசையர் 1:15-16.

   "மக்கள் விதி, சகுனம், சோதிடம் மற்றும் அவை சார்ந்தவற்றை நம்ப வேண்டும்" -இந்து மதம்.
   "நாம் உண்மை கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும், விதியையோ மற்ற மூடநம்பிக்கைகளையோ நம்பக்கூடாது" -கிறிஸ்தவம்.
   "தன் புதல்வனை அல்லது புதல்வியைத் தீ மிதிக்கச் செய்கிறவனும், குறி சொல் கிறவனும், நாள் பார்க்கிறவனும், சகுனங்களை நம்புகிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், ஏவிவிடுகிறவனும், மாயவித்தைக்காரனும், இறந்தவர்களிடம் குறி கேட்கிறவனும் உங்களிடையே இருத்தலாகாது. ஏனெனில், இவற்றையெல்லாம் செய்கிறவன் ஆண்டவருக்கு அருவருப்பானவன்" -இணைச்சட்டம் 18:10-12.

இறுதியாக...                                                                   இந்து மதம் ஒரு தவறான நெறி
   "கடவுள் வடிவில் விளங்கிய இயேசு, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக இயேசு கிறிஸ்து ஆண்டவர் என எல்லா நாவுமே அறிக்கையிடும்." -பிலிப்பியர் 2:6-11.
   "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் (விண்ண கத்தையும் மண்ணகத்தையும் படைத்தவரும், உலகை மீட்க இஸ்ரயேலரோடு உடன் படிக்கை செய்து கொண்டவருமான) உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து" -மத்தேயு 22:37.