Monday, October 31, 2011

அக்டோபர் 30, 2011

இயேசுவின் எடுத்துக்காட்டான வாழ்வு 
நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மறைநூல் அறிஞரும் பரிசேயரும் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகின்றார்களோ அவற்றைக் கடை பிடித்து நடந்து வாருங்கள், ஆனால் அவர்கள் செய்வது போல் செய்யாதீர்கள் என்று இயேசு கூறும் ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து எடுத்து கூறினார்.
   சொல்வதைச் செயலில் காட்டாத மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயர்கள் போலல்லாமல் அன்பெனும் முதற்கட்டளையைத் தன் வாழ்வில் கடைப்பிடித்த பின்னரே இயேசு மற்றவர்களுக்கு போதித்தார். தந்தை யின் விருப்பத்திற்கு விசுவாசமாக நடந்த இயேசுவின் பாதையை பின்பற்றி செல்ல வேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம் என்றார் பாப்பிறை.
   தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்த்துப் புகழவேண்டும் என்பதற்காகவே செய்யும் தலைவர்கள் குறித்து தன் கண்டனத்தை வெளியிடும் இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டனாக இருக்கட்டும்' எனக் கூறியதையும் எடுத் துரைத்து, இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்கு வழிகாட்டுதலாய் இருக்கட்டும் என மேலும் உரைத்தார்.
   தன் மூவேளை செப உரையின் இறுதியில், தாய்லாந்து மற்றும் இத்தாலியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் செப உறுதிகளை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்தாலி நாட்டின் லிகூரியா மற்றும் தொஸ்கானா பகுதிகளில் இடம்பெற்ற மழையால் பாதிக்கப்பட்ட மக்க ளையும், தாய்லாந்தின் பெருமழையால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்களையும் நினைவு கூர்ந்து அவர்களுக்கு தன் ஆழ்ந்த செபங்களை வழங்குவதாகத் தெரிவித்தார் பாப்பிறை.

Friday, October 28, 2011

அக்டோபர் 27, 2011

அசிசி உலக அமைதி நாள் கூட்டம்: நாம் அனைவரும் உண்மையைத் தேடும் பயணிகளே - திருத்தந்தை

   1986ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இத்தாலியின் அசிசி நகரில் உலக அமைதிக்காக பிறசமயத் தலைவர்களைச் செபிக்கும்படி அழைத்தார்.
   உலக அமைதி வேண்டி நடத்தப்பட்ட அந்த செப நாளின் 25ம் ஆண்டு நிறைவையொட்டி அதே அக்டோபர் 27ந்தேதி, வியாழனன்று அசிசி நகரில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகின் பல நாடு களிலிருந்தும் அழைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற் பட்ட பல்சமயத் தலைவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர்களுடன் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். வத்திக்கானில் ருந்து காலை 8 மணிக்கு இரயிலில் புறப்பட்ட திருத்தந்தை, 9.45 மணி அளவில் அசிசி நகர் சென்றடைந்தார். 10.30 மணி அளவில் விண்ணகத் தூதர்களின் புனித மரியா பேராலயத்தில் பல்சமயத் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் திருத்தந்தை பின்வருமாறு உரையாற்றினார்:
   25 ஆண்டுகளுக்கு முன் 1986ம் ஆண்டு, அக்டோபர் 27ம் தேதி அருளாளர் இரண்டாம் ஜான்பால் இந்நகரில் உலக அமைதிக்காக பிற சமயத் தலைவர்களைச் செபிக்கும்படி அழைத்திருந்தார்.
    மூன்று ஆண்டுகள் பின்பு, 1989ம் ஆண்டு ஜெர்மனியைப் பிரித்திருந்த பெர்லின் சுவர் எவ்வித இரத்தம் சிந்தலும் இல்லாமல் தகர்க்கப்பட்டு, இரு வேறு நாடுகளாய் பிரிந்திருந்த ஜெர்மனி ஒன்றானது. பெர்லின் சுவர் இடிந்தபோது, அச்சுவருக்குப் பின் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல போர் கருவிகளும் மறைந்தன. எவ்வித இரத்தம் சிந்தலும் இல்லாமல் நடைபெற்ற இந்த மாற்றத்திற்குக் காரணம் மக்களின் அமைதி வேட்கையே. இந்த வரலாற்று நிகழ்வுக்குப் பின்னும், உலகில் அமைதி நிரந்தரம் கவில்லை.
   நாம் வாழும் உலகில் பெரும் போர்ச்சூழல் நம்மை பயமுறுத்தவில்லை என்றா லும், பல வகையிலும் மக்கள் தங்கள் சுதந்திரத்தையும், அமைதியையும் இழந்து வாழும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். சுதந்திரம் என்பது வன்முறை யைப் பயன்படுத்தவும் சுதந்திரம் உண்டு என்ற தவறான எண்ணங்களை விதைத்து இருக்கின்றது.
   இன்று நிலவும் வன்முறையை நாம் சிறிது ஆழமாக ஆய்வுசெய்வது பயன் ளிக்கும். இன்றைய வன்முறை இரு வகைகளில் வெளிப்படுகிறது. தீவிரவாதம் என்ற வடிவத்தில் நிலவும் வன்முறை ஒரு வகை. தீவிரவாதம் பல நேரங்களில் மதங்களின் அடிப்படையில் எழுகின்றது. வன்முறையைத் தூண்டுவதென்பது எந்த ஒரு மதத்தாலும் ஏற்றக்கொள்ளப்பட முடியாத உண்மை என்பதை 1986ம் ஆண்டு அசிசி நகரில் கூடிய எல்லா மதத் தலைவர்களும் ஒரே குரலில் கூறி னார்கள். இன்று நாம் மீண்டும் அதே உண்மையை உலகறியச் செய்கிறோம்.
   ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் நான் ஒன்றை இந்நேரத்தில் கூற விழைகிறேன். திருச்சபையின் வரலாற்றில், விசுவாசத்தை நிலைநாட்டும் நோக்கத் துடன் கிறிஸ்தவ மறையும் வன்முறையை பயன்படுத்தியுள்ளது என்பதைக் குறித்து நாங்கள் வெட்கப்படுகிறோம். மதங்களின் உண்மை வழிகளைக் காண நாம் உரையாடல்களை வளர்ப்பதும், ஆழப்படுத்துவதும் இன்றைய நம் கடமையாகிறது.
   மதங்கள் வன்முறைகளுக்கு வழிவகுப்பதால், மதங்களே வேண்டாம் என்று கூறும் போக்கு உலகில் பெருகி வருகிறது. வன்முறைகளை வளர்க்கும் கடவுளும், மதங்களும் தேவையில்லை என்று கூறும் பல குழுக்களின் மத்தியிலும் வன்முறை கள் பெருகி வருகின்றன. வன்முறையின் மற்றொரு வகை இதுவே. கடவுளையும், மதங்களையும் புறக்கணித்து வாழ்பவர்கள் மத்தியில் நிலவும் இந்த வன்முறை இன்னும் ஆபத்தானது. தங்களை மீறிய எதுவும் உலகில் இல்லை என்ற எண்ணத் துடன் இவர்கள் வன்முறைகளை மேற்கொள்ளும்போது, அது எல்லை மீறிய வகை களில் வெளிப்படுகிறது.
   கடவுள் இல்லை என்பதால் உருவாக்கப்படும் வெற்றிடத்தை நிறைப்பதற்கு பணம், கட்டுக்கடங்காத அதிகாரம் ஆகிய போக்குகள் பெருகுகின்றன. தான் என்ற சுயநலத்தை வளர்க்கும் வழிகள் மற்ற சமுதாயச் சிந்தனைகளைப் புறம்பேத் தள்ளுகின்றன.
   எவ்வகையிலும் இன்பத்தைத் தேடுவதைக் கருத்தாய் கொண்டுள்ள இவ்வுலகில், போதைப் பொருட்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. இந்தப் போதைப் பொருட் களை உற்பத்தி செய்பவர்கள், மற்றும் வர்த்தகம் செய்பவர்கள் அனைவரும் தங்களது சொந்த இலாபத்தை மட்டுமே நோக்குகின்றனர். போதைப் பொருள் பயன்பாட்டால் வாழ்வைச் சீரழிக்கும் மக்கள் மீது, முக்கியமாக, இளையோர் மீது எவ்வித அக்கறையும் இல்லாமல் இவர்கள் செயல்படுகிறார்கள். கடவுளின் இடத்தைப் பணம் பெற்றிருப்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
   மதநம்பிக்கை உள்ளவர்களும், மதநம்பிக்கை அற்றவர்களும் உருவாக்கும் வன்முறைகளை நோக்கும் அதே நேரம், கடவுள் நம்பிக்கை, மதப்பற்று ஆகியவை இல்லாதபோதும், உண்மையைத் தேடுவோரை நாம் இப்போது எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்கள் உண்மையையும், அமைதியையும் தேடி செல்லும் பயணிகள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடமும், கடவுள் நம்பிக்கை அற்றவர் களிடமும் கேள்விகளை எழுப்புகின்றனர். இவர்கள் இன்னும் கடவுளையும், உண்மையையும் காண முடியாமல் இருப்பதற்கு, மத நம்பிக்கையுள்ளவர்களும் நம்பிக்கையற்றவர்களும் நடந்து கொள்ளும் விதமே காரணமாகிறது.
   இன்று நாம் அசிசி நகரில் கூடியிருக்கும் இவ்வேளையில் மத நம்பிக்கை உள்ளவர்களை மட்டும் நான் அழைக்கவில்லை; மாறாக, கடவுள் நம்பிக்கை ற்றவர்களையும் அழைத்துள்ளேன். நாம் அனைவருமே உண்மை, நன்மை, அமைதியைத் தேடும் பயணிகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
   இறுதியாக, நான் ஒன்றை மீண்டும் உறுதியாகக் கூற விழைகிறேன். வன்முறை களுக்கு எதிரான வழிகளைத் தேடுவதிலும், உண்மை அமைதியை உலகில் நிலை நாட்டும் முயற்சிகளிலும் கத்தோலிக்கத் திருச்சபை என்றும் தயங்காது என்பதை வலியுறுத்திக் கூற விழைகிறேன். நாம் அனைவருமே உண்மையையும், அமைதி யையும் தேடிச் செல்லும் பயணிகளே.

Wednesday, October 26, 2011

அக்டோபர் 26, 2011

அசிசி செப தயாரிப்பு நாளில் திருத்தந்தையின் உரை

   இவ்வியாழனன்று அசிசியில் இடம்பெற உள்ள உலக மதப்பிரதிநிதிகளின் கூட்டத்திற்கான தயா ரிப்பாக இப்புதனன்று உரோம் நகரின் பாப்பிறை 6ம் பவுல் மண்டபத்தில் வார்த்தை வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பல்சமய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இந்த வார்த்தை வழிபாட்டில் எண்ணற்ற விசுவாசி களும் கலந்து கொண்டனர். பாப்பிறை 6ம் பவுல் மண்டபத்தில் அவர் நடத்திய வார்த்தை வழிபாட் டின்போது வழங்கிய மறையுரையின் சுருக்கம் பின்வருமாறு:
   'உண்மையின் திருப்பயணி, அமைதியின் திருப்பயணி' என்ற தலைப்பில் இவ்வியாழன்று அசிசியில் இடம்பெற உள்ள, உலக அமைதிக்கும் நீதிக்குமான செபம், மற்றும் கலந்துரையாடல் மற்றும் தியானம் ஆகியவை இடம்பெறும் நாளுக்கு முந்தைய நாளான இன்று, வார்த்தை வழிபாட்டை மேற்கொள்கின்றோம். கிறிஸ்தவர்களாகிய நாம் அமைதிக்கென வழங்க வல்ல உயரிய பங்களிப்பு செபம் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். 
   இன்று இங்கு வாசிக்கப்பட்ட இறைவாக்கினர் செக்கரியா நூலின் பகுதி, நம்பிக்கையும் ஒளியும் நிறைந்த அறிவிப்பை நமக்குத் தருகிறது. கடவுள் நமக்கு மீட்பைத் தருகிறார், அதேவேளை அந்த மீட்பைப் பெறும் நாம் அது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும் என நம்மை அழைக்கிறார். நீதிமானாய் வெற்றி வாகை சூடி வரும் ஓர் அரசர் குறித்தும் இங்கு குறிப்பிடுகிறார் செக்கரியா. ஒரு நிமிடம் பெத்லகேம் சென்று, விண்ணகத்தூதர் பேரணியாக வானதூதர்கள் இடையர்கள் முன் பாடிய வரிகளை கொஞ்சம் நோக்குவோம்.
'உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' 
   அன்று பிறந்த குழந்தை இயேசு, உலகம் அனைத்திற்கும் அமைதியை ஆடை யாய் அணிந்து வந்தார். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த இறுதி நாட்களைப் பார்த்தோமென்றால், அவர் ஓர் எளிமையான, தாழ்ச்சியுடைய அரசராக கழுதை யின்மீது ஏறி யெருசலேமிற்குள் நுழைவதைக் காண்கிறோம். இவர் ஓர் ஏழை மன்னர். ஆம். இறைவனின் ஏழைமக்களின் மன்னர். தங்களின் பேராசை, சுயநலம் போன்றவைகளை வென்று, உள்மன விடுதலைப் பெற்று, இறைவனையே தங்கள் உடைமையாகக் கருதும் மக்களின் மன்னர் அவர். அமைதி நிறைந்த புதிய அரசின் மன்னர் இயேசு கிறிஸ்து. அமைதியும் தாழ்ச்சியும் உள்ள அவர் உலகின் ஓர் எல்லை முதல் மறு எல்லை வரை ஆள்கிறார். 
   அவர் இந்த உலகை ஆயுதங்கள் மூலம் வெற்றி கொள்ளவில்லை, மாறாக சிலுவையின் வல்லமை மூலம் வெற்றிகண்டார். தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் தூய பவுலின் சிலை வாளை ஏந்தி நிற்பதை நாம் காண்கிறோம். அது வன்முறை மற்றும் போரின் அடையாளமல்ல. மாறாக, தன் வாழ்வையே கையளித்த துன்பத்தின் வாளாக அது நிற்கின்றது. அமைதி எனும் கொடைக்காக இறைவனை வேண்டி, நம்மை அமைதியின் கருவியாக மாற்றும்படிக் கேட்போம். இவ்வாறு தன் உரையை வழங்கிய திருத்தந்தை, அசிசியில் இடம்பெற உள்ள பல்சமயப் பிரதிநிதிகளின் கூட்டம் வெற்றிபெற அனைவரின் செபத்திற்கும் வேண்டுகோள் விடுத்து, அதனை நிறைவுசெய்தார்.
   தூய பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெறுவதாக இருந்த இந்த வார்த்தை வழிபாட்டு நிகழ்ச்சி, மழை காரணமாக பாப்பிறை 6ம் பவுல் அரங்கிற்கு மாற்றப் பட்டதால், இடப்பற்றாக்குறை காரணமாக எண்ணற்றோர் அதில் பங்குபெறமுடியா மல் போனது. இருப்பினும் அவர்களைத் தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் சந்தித்த பாப்பிறை, அவர்களுக்குப் பல்வேறு மொழிகளில் வாழ்த்துக் களை வழங்கி தன் ஆசீரையும் அளித்தார்.

Monday, October 24, 2011

அக்டோபர் 23, 2011

அன்பின் அடையாளங்களாக திகழ்ந்தவர்கள்
புதிய புனிதர்கள் - திருத்தந்தை

   “சவேரியன் மறைபோதகர்கள்” என அழைக்கப் படும் வெளிநாட்டு மறைபோதக சவேரியார் சபை யினை ஆரம்பித்த இத்தாலிய ஆயர் அருளாளர் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, பிறரன்புப் பணி யாளர் ஆண்கள் சபையையும் புனித மரியின் இறை பராமரிப்பு பெண்கள் சபையையும் தொடங் கியவரும் “ஏழைகளின் தந்தை” என அழைக்கப் படுபவருமான இத்தாலியரான அருட்பணி லூயிஜி குவனெல்லா, இஸ்பெயினின் சாலமங்காவில் பிறந்து, புனித வளன் பணியாளர் பெண்கள் சபை யைத் தொடங்கிய அருளாளர் போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ ஆகிய மூவரையும் இஞ்ஞாயிறு திருப்பலியில் திருச்சபையின் புதிய புனிதர்களாக திருத்தந்தை அறிவித்தார்.
   மறைபரப்புப் பணிகளுக்கான ஆர்வத்தையும் அர்ப்பணத்தையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட மறைபரப்பு ஞாயிறன்று, இறைவனுக்கும் அடுத்து வாழ்பவருக்குமான உயரிய அன்பின் அடையாளமாக இருந்த மூவரை புனிதர்களாக அறிவிப்பதில் தான் மகிழ்வதாக உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   முழு இதயத்தோடு இறைவனை அன்பு செய்வது, மற்றும் நம் அடுத்திருப் போரையும் நம்மைப் போல் அன்புசெய்வது என்பதை வலியுறுத்திக் கூறும் இஞ்ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து இந்தப் புதிய புனிதர்கள் எவ்வாறு இறை அன்பின் சாட்சிகளாக விளங்கினார்கள் என்பதையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் பாப்பிறை.
   இத்திருப்பலிக்குப் பின் உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த விசுவாசிகளோடு இணைந்து மூவேளை செபத்தை செபித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், இந்த மூன்று புனிதர்களும் ஆரம்பித்த துறவு சபைகளின் அங்கத்தினர்களுக்கு வாழ்த்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இத்தாலியின் அசிசியில் இவ்வியாழனன்று இடம்பெற உள்ள உலக அமைதிக்கான பல்மதங்களின் கூட்டம் வெற்றியடைய அன்னைமரியின் பரிந்துரையை வேண்டி செபிக்குமாறும் அனைவரிடமும் விண்ணப்பித்தார்.

Wednesday, October 19, 2011

அக்டோபர் 19, 2011

இறைவனின் அன்பு அவரது ஒரே மகனில் முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது - திருத்தந்தை

   கடந்த சில வாரங்களாகத் தன் புதன் பொது மறைபோதகத்தில் திருப்பாடல்கள் குறித்து தன் கருத்துக்களை மக்களோடு பகிர்ந்து வரும் திருத்தந்தை, உரோம் நகரில் நிறைந்திருக்கும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்துக்கு இவ்வாரம் திருப்பாடல் 136 குறித்து எடுத்துரைத்தார்.
   கிறிஸ்தவ ஜெபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 136ஐ நோக்கி நம் பார்வையை திருப்புவோம். 'பெரும்புகழுரை' என அறியப்படும் இந்தத் திருப்பாடல், பாரம்பரியமாகப் பாஸ்காத் திருநாள் உணவின் இறுதியில் பாடப்படும் உன்னத புகழ்ப் பாடலாகும். அதன்படி பார்த்தால், இயேசுவும் அவரின் சீடர்களும் கூட இப்பாடலை இறுதி இரவு உணவின்போது பாடியிருக்க வேண்டும். இந்தத் திருப்பாடலானது 'பிரார்த்தனை' எனும் வடிவத்தைத் தாங்கி, இவ்வுலகப் படைப்பின்போதும் இஸ்ரயேலர்களின் வரலாற்றிலும் இறைவன் ஆற்றிய வல்ல செயல்களைப் புகழ்வதாக உள்ளது. அவரது மீட்புச் செயல்கள் குறித்துக் கூறும் இத்திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் 'என்றும் உள்ளது அவரது பேரன்பு' என முடிகிறது. அகிலத்தின் ஒழுங்கமைவுச் சார்ந்த அழகிலும், அடிமைத்தளை யிலிருந்து இஸ்ரயேலர்களின் விடுதலை மற்றும் வாக்களிக்கப்பட்ட இடம் நோக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் திருப்பயணம் ஆகியவைகளிலும் வெளிப் படுத்தப்பட்டது இறைவனின் மாறாத அன்பே. இறைவனின் வல்ல செயல்கள் குறித்த இந்த உயரிய பிரார்த்தனையை நாம் பாடும்போது, அவரின் கருணைநிறை மற்றும் என்றும் நிலைத்திருக்கும் அன்பின் ஆழமானது, வரவிருக்கும் அவரின் ஒரே மகனில் முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு நன்றி கூறுகிறோம். நம் தந்தையாம் இறைவன் நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்பதையும், நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவதையும், கடவுளின் மக்களாகவே இருப்பதையும் நாம் கிறிஸ்துவில் தெளிவாகக் காண்கிறோம்.
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 17, 2011

அக்டோபர் 16, 2011

விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கி யதன் 50ஆம் ஆண்டை முன்னிட்டு விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   புதிய நற்செய்தி அறிவிப்பாளர்களுக்கென்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத் தில் இஞ்ஞாயிறு காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை விசுவாச ஆண்டை அறிவித்தார். இந்த ஆண்டானது, 2012 அக்டோபர் 11ந்தேதி தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய 2013 நவம்பர் 24 அன்று நிறைவடையும்.
   முழுமையாக மனம் மாறிக் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கும் திருஅருளின் மற்றும் அர்ப்பணத்தின் காலமாகவும், அவரில் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிழ்ச்சியோடு அவரை அறிவிக்கும் காலமாகவும் மனிதரைப் பாலைவன வாழ்வி லிருந்து வெளியே கொணருவதற்கு அகில உலகத் திருச்சபையின் பணிக்கு புதிய உந்துதலைக் கொடுப்பதாகவும் இவ்வாண்டு இருக்கும் எனக் கூறினார் திருத்தந்தை.
   மேலும், ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் நாற்பதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டு குறித்தத் திட்டங்களை விளக்கினார். திருச்சபையின் பணியானது கிறிஸ்துவைப் போன்று கடவுளின் இறையாட்சியை நினைவுகூர்ந்து கடவுள் பற்றிப் பேசுவதாகும், குறிப்பாக தங்களது தனித்துவத்தை இழந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு கடவுள் பற்றி எடுத்துரைப்பதாகும் என்றும் அவர் கூறினார்.
   தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தின் மூலமும் இந்த விசுவாசத்தின் ஆண்டு பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைவதால் இந்த விசுவாச ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டை மதிப்பும் பயனும் நிறைந்த விதமாகக் கொண்டாட வேண்டுமென்று சகோதர ஆயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும், விசுவாசம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலை மதிப்பில்லா மற்றும் இன்றியமையாத கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Wednesday, October 12, 2011

அக்டோபர் 12, 2011

ஆண்டவரின் மாபெரும் செயல்களால் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் - திருத்தந்தை

   இன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு 'கிறிஸ்தவ செபம்' குறித்த தன் புதன் மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கிறிஸ்தவ செபம் குறித்த நம் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 126-ஐ நாம் சிந்திப்போம். பபிலோனிய நாடுகடத்தலி
லிருந்து இஸ்ரயேலர்களை திருப்பி அழைத்து வருவதாக வாக்கு தந்த இறைவன் பிரமாணிக்கமுள்ளவராக இருந்ததற்கு நன்றி கூறும் மகிழ்ச்சி நிறை செபமாக இந்தத் திருப்பாடல் 126 உள்ளது. 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.'
   நம் வாழ்வு நடவடிக்கைகளிலும், சிறப்பாக, கசப்பானதாக கருமேகம் சூழ்ந்து தோன்றியதாகத் தெரிந்த காலங்களிலும் இறைவன் நம்மீது காட்டிய அக்கறையை நினைவுகூரும்போது, அதே இஸ்ராயேல் மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி உணர்வை உள்ளடக்கியதாக நம் செபங்களும் இருக்க வேண்டும். இறைமீட்பு எனும் உதவியை இஸ்ரயேலர்களுக்குத் தொடர்ந்து வழங்குமாறு இறைவனை வேண்டுகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்' என்கிறார்.
   அமைதியான முறையில் தன் முதிர்ச்சி நோக்கி வளரும் விதை என்ற இந்த உருவகம் நமக்கு சொல்ல வருவது என்னவெனில், கடவுளின் மீட்பு என்பது ஏற்கனவே நாம் பெற்றுவிட்ட கொடை, நம் நம்பிக்கையின் நோக்கம், வருங் காலத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் ஒரு வாக்குறுதி. இதே உருவகத்தை இயேசு கிறிஸ்து, சாவிலிருந்து வாழ்வுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் கடந்து செல்வதைப் பற்றி விளக்கும்போது பயன்படுத்துகிறார். இந்த கடந்து செல்தல் என்பது, இயேசுவில் விசுவாசம் கொண்டு அவரின் பாஸ்கா மறையுண்மையில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவர் வாழ்விலும் இடம்பெற வேண்டியது. இந்த 126ம் திருப்பாடலை செபிக்கும் நாம், 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்' என்ற அன்னை மரியின் பாடல் வரிகளை எதிரொலிப் பதுடன், கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
   தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு கிறிஸ்தவ செபம் குறித்த இவ்வார மறை யுரையை இவ்வாறு வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   பின்னர் அவர், கடந்த ஞாயிறன்று எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இவ்வன் முறையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுடனும், அமைதியான இணக்க வாழ்வுக்கான அச்சுறுத்தலை எதிர்நோக்கும் எகிப்து குடும்பங்களுடனும் என் ஒருமைப்பாட்டை தெரிவிக்கின்றேன். நீதியையும் மனித குல விடுதலை மற்றும் மாண்பையும் அடிப்படையாகக் கொண்ட உண்மையான அமைதியை சமூகம் பெற ஒவ்வொருவரும் செபிக்குமாறு வேண்டுகிறேன். தேசிய ஐக்கிய நலனுக்காக, ஒவ்வொருவரின் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட எகிப்து ஆட்சியாளர்களும் அரசியல் மற்றும் மதத்தலைவர்களும் தங்கள் அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்த ஊக்கமளிக்கிறேன், என எகிப்து நாட்டிற்கான தன் விண்ணப்பத்தை முன்வைத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 10, 2011

அக்டோபர் 9, 2011

நவீன வாழ்க்கைக்கு மௌனம் தேவை - திருத்தந்தை

   தென் இத்தாலியின் லமேசியா டெர்மே விசுவாசிகள் தங்களது கடும் சமுதாயப் பிரச்சனை களை அன்னை மரியாவிடம் அர்ப்பணிக்குமாறு கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கடும் வேலைவாய்ப்பின்மையும் பெருமளவாகக் குற்றங்களும் இடம் பெறும் இத்தாலியின் மிக ஏழைப் பகுதியான கலாபிரியாப் பகுதிக்கு இந்ஞாயிறன்று ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அப்பகுதியிலுள்ள பல அன்னைமரியா திருத்தலங்கள் பற்றிக் குறிப்பிட்டு அம்மக்களின் பாரம்பரிய மாதா பக்தியையும் பாராட்டினார். பொதுநலனைக் கட்டி எழுப்புவதில் விசுவாசிகள், தல ஆயர்களுடன் இணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

   மேலும், ஞாயிறு மாலை கலாபிரியாவிலுள்ள கர்த்தூசியன் துறவு இல்லத்திற்கு சென்று உரை யாற்றிய திருத்தந்தை, இக்காலத்துச் சமூகத்தில் அமைதி இல்லாமல் இருப்பது, பலரை மிகவும் பதட்டநிலைக்கு உள்ளாக்குகிறது என்று கூறினார்.
   இப்பகுதியின் பல இளையோர், சமுதாயத்தில் காணப்படும் வெறுமையை எதிர்கொள்ளப் பயந்து, வெறுமையாக உணரும் நேரங்களை இசையிலும் வேறு பல பொழுதுபோக்கிலும் செலவிடுகிறார்கள் என்றார் அவர். அமைதியிலும் தனிமையிலும் நேரத்தைச் செலவிடுவது இறைப் பிரசன்னத்தை உணர உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
   இந்தத் துறவு மடம், 900த்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், ஜெர்மானியரும் கர்த்தூசியன் துறவு சபையைத் தொடங்கியவருமான புனித புருனோவால் உருவாக்கப்ட்டது.
   இத்துறவு மடம் அமைந்திருக்கும் செர்ரா சான் ப்ரூனோ என்ற ஊருக்கு இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தை சென்றபோது முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அவரை வரவேற்றனர்.

Thursday, October 6, 2011

அக்டோபர் 5, 2011

நமக்காக தன் வாழ்வையே கையளித்த
நல்லாயன் இயேசு - திருத்தந்தை

   உரோம் நகருக்கு வரும் சுற்றுலா மற்றும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப் படுவதால், திருத்தந்தையின் இவ்வாரப் புதன் மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 23 குறித்து நோக்குவோம் எனத் தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை. 
   'ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறை யில்லை' - மிக நேர்த்தியான முறையில் ஆயர் மற்றும் மேய்ச்சல் குறித்து விவரிப்பதாகவும், மக்களால் அதிக அளவு விரும்பப் படுவதாகவும் இருக்கும் இந்த திருப்பாடல் 23, செபத்தின் முக்கிய பண்புக்கூறாக இருக்கும் இறைவனின் அன்புப் பராமரிப்பில் கொள்ளும் தீவிர நம்பிக்கை குறித்துப் பேசுகிறது. பசும்புல் நிலத்தை நோக்கி ஒருவனை வழிநடத்திச் செல்லும் நல் ஆயனாகவும், அவன் அருகேயிருந்து அவனை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்பவராகவும் இறைவனைக் காட்டி இத்திருப்பாடலைத் துவக்குகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.' அடுத்தக்காட்சியோ, ஆயனின் கூடாரம் நோக்கிச் செல்கின்றது. இக்கூடாரத்தில் இறைவன், அவனை ஒரு விருந்தாளியாக வர வேற்று, உணவு, எண்ணெய், திராட்சை இரசம் எனும் கொடைகளை வழங்குகிறார். 'எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.'
   ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வதற்கென வழி நடக்கும் பாதையில் நன்மைத்தனம் மற்றும் இரக்கத்தின் துணை கொண்டு இறைவனின் பாதுகாப்பு, திருப்பாடல் ஆசிரியருடன் இணைந்து செல்கிறது. இறைவனை இஸ்ராயேலின் ஆயனாகக் காணும் இந்த வலிமை மிகுந்த உருவகம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் எகிப்திலிருந்து வெளியேறியதிலிருந்து, தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தை வந்தடையும்வரையான மத வரலாற்றில் இணைந்தே வருகிறது. இவ்வுருவகம் தன் கடைமுடிவு வெளிப்பாட்டையும் நிறைவையும் இயேசுவின் வருகையில் கண்டது. நல்லாயனாம் அவர் தன் வாழ்வையே தன் ஆடுகளுக்காகக் கையளித்தார். வானுல கில் நமக்காகக் காத்திருக்கும் மெசியாவின் விருந்திற்கு முன்னோடியாகத் தன் உடலையும் இரத்தத்தையும் கொண்ட விருந்தினை நமக்கென தயாரித்தவர் அவரே.
   இவ்வாறு புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளான திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சொமாலியா, உகாண்டா ஆகியவைகளுக்கான தன் சிறப்பு விண்ணப்பத்தையும் விடுத்தார்.
   ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளின் பஞ்சம் குறித்தச் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளன. மனித குல நெருக்கடியை சமாளிக்கும் வழிகள் குறித்து ஆராயும் நோக்கில் இங்கு கூடியிருக்கும் அந்நாட்டிற்கான குழுவுக்கு என் ஊக்கத்தை வழங்குகின்றேன். பஞ்சத்தால் துன்புறும் மக்களுக்கான உதவிகளுக் கென ஏற்கனவே விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள கேன்டர்பரி பேராயரின் பிரதிநிதி ஒருவரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்மையாலும் நோய்களாலும் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் குழந்தைகளுக்காகவும், பெருந்துன்பங்களை அனுபவித்து வரும் நம் எண்ணற்ற சகோதர சகோதரிகளுக்காகவும் செபிக்குமாறும், உதவிகளை வழங்குமாறும் சர்வதேச சமுதாயத்திடம் மீண்டும் ஒருமுறை நான் விண்ணப்பிக்கின்றேன். இவ்வாறு ஆப்ரிக்க கொம்பு நாடுகளுக்கான விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 3, 2011

அக்டோபர் 2, 2011

தங்கள் காவல்தூதர்களை உதவிக்கு அழைக்க கிறிஸ்தவர்கள் மறக்கக்கூடாது - திருத்தந்தை

   கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவ தற்கும் உதவி செய்வதற்குத் தங்களது காவல் தூதர்களை அழைக்குமாறு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கோடை விடுமுறை முடிந்து முதல் முறையாக வத்திக்கானிலிருந்து மூவேளை செப உரை வழங் கிய திருத்தந்தை, அன்பு நண்பர்களே, நம் ஆண்ட வர் மனித வரலாற்றில் எப்போதும் அருகிலும் செயல்திறத்துடனும் இருக்கிறார், தமது தூதர்களின் தனித்துவமிக்க பிரசன்னத் தோடு நம்மைப் பின்தொடருகிறார் என்று உரைத்தார்.

   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் விசுவாசிகளுக்கு உரையாற்றிய அவர், அக்டோபர் 2ம் தேதி திருச்சபை காவல் தூதர்கள் விழாவைச் சிறப்பிக்கின்றது, இவர்கள், ஒவ்வொரு மனிதன் மீதும் கடவுள் கொண்டுள்ள அக்கறையைத் தெரிவிக்கும் பணிகளைச் செய்கிறார்கள் என்றார்.
   இத்தூதர்கள், மனித வாழ்வின் தொடக்கமுதல் மரணம் வரை தங்களது இடை விடாத பாதுகாப்பால் அவ்வாழ்வைச் சூழ்ந்துள்ளார்கள் என்றும் கூறிய திருத் தந்தை, செபமாலை அன்னையின் மணிமகுடத்தை இந்தத் தூதர்களே அலங்கரித் துள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். (17ம் நூற்றாண்டில் திருத்தந்தை 10ம் கிளமெண்ட் காவல்தூதர்கள் விழாவை அகிலத் திருச்சபையில் கொண்டு வந்தார்.)
   மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடவுள் தமது நண்பர்களுக்காகத் திட்டம் வைத்திருக்கிறார், ஆனால் இதற்கான மனிதனின் பதில் அவனின் பிரமாணிக்கமற்ற வாழ்வால் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று கூறினார்.
   இறைவனின் விலைமதிப்பில்லாத கொடையாகிய அவரது ஒரே மகனை ஏற்பதற்குக்கூட தற்பெருமையும் தன்னலமும் தடையாய் இருக்கின்றன, எனவே இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு முழுவதும் விசுவாசமாக இருக்கும் வாழ்வைப் புதுப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளார்கள் என்றார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.