Saturday, December 31, 2011

டிசம்பர் 31, 2011

நிலையற்ற வாழ்வைப் பற்றி சிந்திக்க
நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது - திருத்தந்தை

   ஒவ்வோர் ஆண்டும் நம்மைக் கடந்து செல்லும்போது, மறுமுறை வரமுடியாத வண்ணம் காலம் கடந்துவிட் டதே என்ற கவலை நம்மைச் சூழ்ந்தாலும், கடவுளின் அன்பில் நாம் வாழ்கிறோம் என்ற உறுதி அனைத்து கவலைகளையும் போக்கிவிடும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
   சனிக்கிழமை மாலை "தே தேயும்" என்ற நன்றிப்பாடல் இசைக்கும் ஆண்டின் இறுதிநாள் மாலைத் திருவழி பாட்டை நடத்தியத் திருத்தந்தை, கடந்து செல்லும் ஆண்டையும், எதிர்வரும் ஆண்டையும் குறித்து தன் சிந்தனைகளை மறையுரையாக வழங்கினார்.
   நிலையற்ற வாழ்வை நினைவுறுத்தும் காலத்தைப் பற்றி சிந்திக்க புதிய ஆண்டின் வாசலில் இருக்கும் நமக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, நிலையான கடவுளின் முகத்தைக் காணும்போது, காலத்தின் நிலையாமை பற்றிய கவலைகள் நம்மிடம் இருந்து விடை பெறுகின்றன என்று தெளிவுபடுத்தினார்.
  
"தே தேயும்"
என்று நாம் பாடும் இந்தப் பாரம்பரியப் பாடல் இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை கொண்ட பல கோடி மக்கள் பல நூற்றாண்டுகளாய் பாடி வந்த ஒரு பாடல் என்பதை கூறியத் திருத்தந்தை, இப்பாடலைப் பாடுவதன் மூலம் நமது நன்றியை இறைவனுக்குக் கூறுவதுடன், நம் வாழ்வையும் அவர் பராமரிப்பில் ஒப்படைக்கிறோம் என்பதை எடுத்துரைத்தார்.

Wednesday, December 28, 2011

டிசம்பர் 28, 2011

கிறிஸ்தவ குடும்பங்கள் செபத்தின் கல்விக்கூடங்களாக திகழ திருக்குடும்பம் தூண்டட்டும் - திருத்தந்தை

    திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் குழுமி யிருந்த திருப்பயணிகளையும் சுற்றுலாப் பயணி களையும் புதன் பொது மறைபோதகத்துக்காக சந்தித்த திருத்தந்தை, நாசரேத்தூர் திருக்குடும்பத் தின் வாழ்வில் செபத்தின் இடம் குறித்து எடுத் துரைத்தார்.
   இந்த கிறிஸ்துமஸ் பெருவிழாக் காலத்தில் நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் வாழ்வில் செபத் தின் இடம் குறித்து தியானிக்க, செபம் குறித்த நம் புதன் மறைபோதகம் இன்று நம்மை அழைத்துச் செல்கிறது. கிறிஸ்துவின் விசுவாசமுடைய சீடர்களாக வளரவும் இறைப்பிரசன்ன மறையுண்மை குறித்து ஆழ்ந்து தியானிக்கவும் நாம் இயேசு, மரியா மற்றும் யோசேப்பின் வீட்டில் கற்றுக் கொள்கிறோம். கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகளைத் தியானித்து செபிப் பதில் மிக உயரிய எடுத்துக்காட்டாக அன்னை மரியை நமக்குக் காட்டுகின்றன நற்செய்தி நூல்கள். நாமும் செபமாலையை செபிக்கும்போது, அதே மறை யுண்மைகள் குறித்த அன்னை மரியின் ஆழ்தியானத்தில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் நம்மையும் இணைக்கிறோம்.
   வேலையிலும் செபத்திலும் இறைச்சட்டங்களைக் கடைபிடிப்பதிலும் பற்றுமாறா உறுதிப்பாட்டுடன் செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இயேசுவுக்கு கற்பித்ததன் வழி திருக்குடும்பத்தின் தந்தையெனும் தனக்குரிய அழைப்பை நிறைவு செய்தார் புனித யோசேப்பு. வானகத் தந்தையுடன் இயேசு கொண்டிருக்கும் தன்னிகரில்லா உறவு, திருக்குடும்பத்தின் செபவாழ்வில் பிரதிபலித்தது மேலும் அனைத்துக் கிறிஸ்தவ செபத்தின் இதயமாகவும் அது உள்ளது. அனைத்துக் கிறிஸ்தவக் குடும்பங்களும் செபத்தின் கல்விக்கூடங்களாக விளங்க திருக்குடும் பத்தின் எடுத்துக்காட்டு தூண்டுவதாக. இந்த கல்விக்கூடங்களிலேயே பெற்றோர் களும் குழந்தைகளும் இறைவனின் அருகாமையைக் கண்டு கொள்கிறார்கள். அதையே இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
   இவ்வாறு, 2011ம் ஆண்டின் இறுதிப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, December 26, 2011

டிசம்பர் 26, 2011

மறைசாட்சிகள் நன்னெறிகளின் ஆசிரியர்களும் திருச்சபையின் தூண்களும் ஆவர் - திருத்தந்தை

   கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் திருச்சபையில் சிறப்பிக்கப் படும் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் குறித்த சிந்தனைகளை இத்திங்கள் மூவேளை செப உரையில் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   'ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்த வராக மக்களிடையே பெரும் அருஞ்செயல்களை யும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்' எனத் திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசியத் திருத்தந்தை, ஸ்தேவான் என்ற பெயருக்கு 'மணிமகுடம்' என்ற பொருள் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டினார்.
   தன்மீது கல்லேறிந்தபோது ஸ்தேவான், 'ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்' என்று வேண்டிக் கொண்டபின் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், 'ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்' என்று சொல்லி உயிர்விட்ட நிகழ்வையும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்த திருத்தந்தை, காலம் காலமாக மறைசாட்சிகள் திருச்சபை நன்னெறிகளின் ஆசிரியர்களாக, வாழும் சாட்சிகளாக, உயிருள்ள தூண்களாக, அமைதித் தூதர்களாக போற்றப்பட்டு வருகின்றார்கள் என்றும் கூறினார்.
   மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வுலகில் அமைதி, மற்றும் நீதியின் ஆட்சி தழைக்க செபிக்குமாறும் அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, நைஜீரியாவில் கிறிஸ்மஸ் நாளன்று கோவில்கள் தாக்கப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையை எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்டோருடன் தன் ஒருமைப்பாட்டையும், உடனிருப்பை யும் வெளியிட்டதுடன், துன்பங்க
ள், அழிவுகள், மரணங்களைக் கொண்டு வரும் வன்முறைகளைக் கைவிட்டு, அமைதியை நோக்கிச் செல்லும் அன்பு, மதிப்பு மற்றும் ஒப்புரவின் வழிகளைக் கைகொள்ளுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

டிசம்பர் 25, 2011

ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi)
திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் செய்தி

   உரோம் நகரிலும் உலகம் முழுவதும் உள்ள அன்புநிறை சகோதர சகோதரிகளே,
   கிறிஸ்து நமக்காகப் பிறந்துள்ளார்! விண்ணு லகில் இறைவனுக்கு மகிமையும் மண்ணுலகில் அவர் அன்பு பெற்ற அனைவருக்கும் அமைதியும் ஆகுக! பெத்லகேம் செய்தியின் எதிரொலியை ஒவ்வொருவரும் செவிமடுப்பார்களாக. அதையே கத்தோலிக்கத் திருச்சபை ஒவ்வொரு கண்டத்தி லும், அனைத்து நாடுகளையும், எல்லைகளையும், மொழிகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி மீண்டும் அறிவிக்கிறது. கன்னி மரியின் மகன் அனைவருக்காகவும் பிறந்துள்ளார். அவரே அனைவரின் மீட்பர்.
   தொன்மைத் திருவழிபாட்டு முறையில் கிறிஸ்துவிடம் முன்வைத்த வேண்டுதல் இவ்வாறு உள்ளது. "ஓ இம்மானுவேல், எங்கள் அரசரும் சட்டம் வழங்குபவரும், நம்பிக்கையும், மக்களின் மீட்பருமானவரே! எங்களை மீட்க வாரும், எங்கள் ஆண்டவரும் கடவுளுமானவரே, எங்களை மீட்க வாரும்!" இதுவே ஒவ்வொரு காலத்திலும் ஆண்கள் மற்றும் பெண்களின் அழுகை ஓலம். அவர்களுக்குத் தெரியும் துன்பங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து தங்களால் தனியாக நின்று தங்களையே காத்துக் கொள்ள முடியாது என்று. அவர்கள் தங்கள் கரங்களை இன்னொரு வலிமை நிறைந்த கரத்தில், அதுவும் மேலிருந்து அவர்களை நோக்கி நீளும் கரத்தில் ஒப்படைக்க வேண்டிய தேவை உள்ளது. அன்பு சகோதர சகோதரிகளே, இந்தக் கரம்தான் பெத்லகேமில் கன்னி மரியிடம் பிறந்த இயேசு. மனித குலத்தை நோக்கி இறைவன் நீட்டும் கரமே இயேசு. இந்தக் கரம் கொண்டே இறைவன் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்டு, நம்மைப் பாறையில் உறுதியாக நிலைப்படுத்துகிறார். அது அவர் அன்பின், அவர் உண்மையின் பாதுகாப்பு நிறைந்த பாறையாகும் (திருப்பாடல் 40:2).
   அந்தக் குழந்தையின் பெயருக்குள்ள அர்த்தம் இதுவே, அந்தப் பெயர் கடவுளின் விருப்பத்திற்கு இணங்க அன்னை மரியாவாலும் யோசேப்பாலும் வழங்கப்பட்டது; ஆம். அவர் இயேசு என பெயரிடப்பட்டார், அதற்கு மீட்பர் என பொருள் (மத். 1:21; லூக். 1:31). நம்மை மீட்பதற்காக தந்தையாம் இறைவனால் அவர் அனுப்பப்பட்டார். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனிலும் வரலாற்றிலும் ஆழமாக வேரூன்றியுள்ள தீயவைகளிலிருந்து, அதாவது இறைவனிடமிருந்து பிரிதல் எனும் தீமை, எல்லா வற்றிலும் நிறைவுள்ளவராக உள்ளோம் என்ற கர்வ எண்ணம், கடவுளோடு போட்டி யிட்டு அவர் இடத்தை எடுக்க முயல்தல், மற்றும், தீமை எது நன்மை எது என தானே முடிவு செய்தல், வாழ்வு மற்றும் மரணத்தின் தலைவராக தானே இருக்க முயல்தல் (தொடக்க நூல் 3:1-7) ஆகியவைகளிலிருந்து நம்மை விடுவிக்க. இந் நிலையே மிகப்பெரும் தீயச்செயல், மிகப்பெரும் பாவம். இதிலிருந்து மனிதர் களாகிய நாம் நம்மை மீட்க வேண்டுமெனில் கடவுளின் உதவியை நாட வேண்டும், அவரை நோக்கி குரல் எழுப்ப வேண்டும்: "எம்மை மீட்க வாரும்!"
   நாம் விண்ணகம் நோக்கி குரல் எழுப்புவதே நம்மைச் சீர்படுத்துகிறது. நமக்கு உண்மையுள்ளவர்களாக நம்மை மாற்றுகிறது. இறைவனிடம் கூக்குரலிட்டதன் வழி நாம் உண்மையிலேயே மீட்கப்பட்டவர்களாகிறோம் (எஸ்தர் 10:3 தொடர்ச்சி). கடவுள் நம் மீட்பர்; நாமோ ஆபத்தில் இருப்பவர்கள். அவர் மருத்துவர்; நாமோ நோயுற் றோர். இதை உணர்ந்து ஏற்பதே மீட்பின் முதல் படி. கர்வம் என்ற தளையிலிருந்து நாம் வெளியேறும் வழி. நம் கண்களை வானகம் நோக்கித் திருப்புவதும், நம் கைகளை விரித்து உதவிக்கு அழைப்பு விடுப்பதும் விடுதலை யின் வழிகள். ஆம், நம் குரலுக்கு செவிமடுத்து நம் உதவிக்கு வரும் ஒருவர் மேலே இருக்கிறார் என்ற உறுதியில்.
   கடவுள் நம் கூக்குரலுக்கு செவிமடுத்துள்ளார் என்பதற்கு உறுதியான ஆதாரம் இயேசு கிறிஸ்துவே. இது மட்டுமல்ல! கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பு மிகவும் உறுதியானது, அதனால் அவர் நம்மிடமிருந்து ஒதுங்கியிருக்க முடியாது. அவர் தன் நிலையிலிருந்து கீழே இறங்கி நம்மிடையே குடிகொள்ளவும், நம் மனித நிலை களில் முழுமையாக பங்குபெறவும் வருகிறார் (விடுதலைப் பயணம் 3:7-12). நம் கூக்குரலுக்கு இயேசுவில் இறைவன் வழங்கிய பதில்மொழி நம் எதிர்பார்ப்பு களையெல்லாம் முற்றிலுமாக தாண்டியதாக, மனிதமாக மட்டும் இல்லாமல் தெய்வீகமாக உள்ள ஒருமைப்பாட்டை நிறைவு செய்கிறது. அன்பெனும் கடவுளும், கடவுளாம் அன்பும் மட்டுமே நம்மை இவ்வழியில் மீட்க முடியும். இந்த வழி நீளமான ஒன்றாக இருப்பினும், இதுவே இறைவனைப் பற்றிய மற்றும் நம்மைப் பற்றிய உண்மைகளை மதிப்பதாக உள்ளது. இதுவே ஒப்புரவின், உரையாடலின், ஒத்துழைப்பின் வழி.
   உரோம் நகரிலும் உலகம் முழுவதும் உள்ள அன்பு நிறை சகோதர சகோதரிகளே, இந்த 2011 கிறிஸ்துமஸ் நாளில் பெத்லகேமின் குழந்தையை நோக்கி, கன்னி மரியின் புதல்வனை நோக்கி திரும்பி, சொல்வோம் "எம்மை மீட்க வாரும்". துன்ப கரமானச் சூழல்களை அனுபவிக்கும் மக்களுடன் உள்ளத்தால் ஒன்றி, இந்த வார்த்தைகளை நாம் மீண்டும் எடுத்துரைப்போம். ஒடுக்கப்பட்டோரின் குரலாக நாம் இருப்போம்.
   நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில் வாழும் மக்களுக்காக இறையுதவியை நாடுவோம். இவர்கள் பசியாலும் உணவுப் பற்றாக்குறையாலும், இக்கொடுமைகளை அவ்வப்போது வளர்க்கும் பாதுகாப்பற்ற நிலைகளாலும் துன்புறுகின்றனர். குடிபெயர்ந்துள்ள எண்ணற்ற இம்மக்களுக்கு சர்வதேச சமுதாயம் உதவி வழங்க மறுக்காதிருக்கட்டும். இப்பகுதியிலிருந்து வரும் மக்களின் மாண்பு பெரிய அளவில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
   தென் கிழக்கு ஆசியாவின் மக்களுக்கு இறைவன் ஆறுதல் வழங்குவாராக. குறிப்பாக தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு. அண்மை வெள்ளப் பெருக்கின் விளைவாக பெருந்துன்பங்களை அவர்கள் இன்னும் அனுபவித்து வருகிறார்கள்.
   இவ்வுலகை இன்றும் இரத்தக்கறைப்படிய வைக்கும் எண்ணற்ற மோதல்களால் பிளவுபட்டிருக்கும் நம் உலகிற்கு உதவ இறைவன் இறங்கி வருவாராக. அமைதி யின் இளவரசர் இவ்வுலகிற்கு வர எந்த இடத்தைத் தேர்ந்து கொண்டாரோ அந்த நிலப்பகுதியில் அமைதியையும் நிலையானத் தன்மையையும் வழங்குவாராக. அதோடு, இராயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் துவக்கப்பட ஊக்கமளிப்பாராக. சிரியாவில் வன் முறைகளை முடிவுக்கு கொணர்வாராக. அங்கு அதிக அளவில் இரத்தம் ஏற்கனவே சிந்தப்பட்டுள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் முழு ஒப்புரவிற்கும் நிலைத் தன்மைக்கும் அவர் உதவுவாராக. ஒரு புத்துணர்வுடன் கூடிய உற்சாகத்தை வட ஆப்ரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் அனைத்து சமூகப் பிரிவுகளுக்கும் வழங்கி, பொதுநலனுக்கான அவர்களின் முயற்சிகள் மேலும் தொடர உவுவாராக.
   நம் மீட்பரின் பிறப்பு, மியான்மாரின் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு சூழல்களில் ஆதரவளிப்பதாக. குறிப்பாக, பகிர்வுத் தீர்வுகளுக்கான முயற்சிகளில். ஆப்ரிக்காவின் பெரும் ஏரிப்பகுதி நாடுகளில் நிலையான அரசியல் சூழலை உருவாக்கவும், தென்சூடான் மக்கள் தங்கள் உரிமைகளைப் பாதுக்காக்க எடுக்கும் முயற்சிகள் பலன் தரவும் மீட்பரின் பிறப்பு உறுதியளிப்பதாக.
   அன்பு சகோதர சகோதரிகளே, மீண்டும் நம் பார்வையை பெத்லகேம் குடில் நோக்கித் திருப்புவோம். நாம் தியானிக்கும் அந்தக் குழந்தையே நம் மீட்பு. அகில உலக அமைதி மற்றும் ஒப்புரவை வளர்க்கும் செய்தியை அவர் இவ்வுலகிற்குக் கொணர்ந்துள்ளார். நாம் அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம். அவரை நம் வாழ்விற்குள் ஏற்போம். மீண்டும் ஒருமுறை அவரை நோக்கி மகிழ்வுடனும் நம்பிக்கையுறுதியுடனும் சொல்வோம்: "எம்மை மீட்க வாரும்!"

Sunday, December 25, 2011

டிசம்பர் 25, 2011

குழந்தையாக பிறந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக அமைதியை கொணர்கிறார் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருவிழிப்புத் திருப்பலியை 24ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் நேரம் முன்னிரவு 10 மணிக்கு உரோம் நகர் தூய பேதுரு பேராலயத்தில் துவக்கிய திருத்தந்தை தன் மறையுரையில், வலுவற்ற குழந்தையாய் அவத ரித்திருக்கும் இயேசு பாலன் தன் வல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என இறைஞ்சினார்.
   "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது" என்ற இறைவாக்கினர் எசாயா நூல் 9ம் பிரிவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, வலிமையற்ற நிலையில் அக்குழந்தை பிறந்தாலும் அதுவே வல்லமையுள்ள கடவுள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. அனைத்துத் தேவைகளுக்கும் பிறரையேச் சார்ந்திருக்கும் நிலையி லுள்ள இக்குழந்தை வழங்கும் அமைதிக்கு முடிவே இராது எனவும் தனது மறையுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை.
   குழந்தையாம் இந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக ஒரு செய்தியைக் கொணர்கிறார், அதுவே அமைதி. இவ்வுலகம் மீண்டும் மீண்டும் பல்வேறு இடங் களில் பல்வேறு வழிகளில் வன்முறைகளால் அச்சுறுத்தப்பட்டுள்ள இவ்வேளை யில் நாம் இறைவனை நோக்கி, "இறைவா, உம் குழந்தை நிலையையும் குழந்தைக்குரிய சக்தியற்ற நிலையையும் கண்டு அன்பு கூர்கிறோம். ஆனால் அதேவேளை, இவ்வுலகின் வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள யாம், உம் வல்லமையை வெளிப்படுத்துமாறு இறைஞ்சுகிறோம். மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறியும். அமளி நிறைந்த போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளையும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தையும் நெருப்புக்கு இரையாக எரித்தருளும். அதன் வழி இவ்வுலகில் உம் அமைதி வெற்றிவாகைச் சூடுவதாக" என வேண்டுவோம்.
   இவ்வாறு தன் இரவுத் திருப்பலி மறையுரையின்போது குழந்தை இயேசுவை நோக்கிய செபத்தை முன்வத்தார் திருத்தந்தை.

Thursday, December 22, 2011

டிசம்பர் 21, 2011

நாம் கடவுளை ஏற்றுக்கொண்டால் அவர் நம் வாழ்வில் பிறந்து இவ்வுலகை மாற்றியமைப்பார் - திருத்தந்தை

   கிறிஸ்மஸ் பெருவிழாக் கொண்டாட்டங்களுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ள நிலையில், அப்பெருவிழா குறித்தே இப்புதன் மறை போத கத்தை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
   கிறிஸ்மஸ் பெருவிழா நெருங்கி வரும் இவ்வேளையில், இறைவனின் பிறப்பை ஆன்மீகப் பலன் தரும் வகையில் கொண்டாட உதவுகி
ன்ற வண்ணம் உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக் கும் என் செபம் நிறைந் நல் வாழ்த்துக்களை வழங்குகிறேன். 'இன்று நமக்கு மீட்பர் பிறந்துள்ளார்' என நள்ளிரவுத் திருப்பலியின் போது நாம் பாடுகின்றோம். 'இன்று' என்பது என்றென்றும் நிலையான நிகழ் காலத்தை காண்பிக்கிறது. ஏனெனில், கிறிஸ்துவின் வருகை எனும் மறையுண்மை, காலத்தைக் கடந்ததாக, வரலாற்றை ஊடுருவுவதாக உள்ளது. 'இன்றும்' என் றென்றும், நம்மிடையே மீட்பளிக்கும் இறை அன்பின் பிரசன்னத்தைக் கண்டு கொள்ள நாம் அழைப்புப் பெறுகிறோம். 
   கிறிஸ்துவின் பிறப்பில், கடவுள் நம்மிடம் வந்து அவரை ஏற்றுக்கொள்ளும்படி நம்மைக் கேட்கிறார். அவ்வாறு ஏற்றுக்கொள்வதன் மூலம், அவர் நம் வாழ்வில் பிறந்து நம் வாழ்வையும் இவ்வுலகையும் தன் அன்பின் வல்லமை மூலம் மாற்றியமைக்க முடியும். பாஸ்கா மறையுண்மையின் பின்னணியில் கிறிஸ்துவின் பிறப்பு குறித்து ஆழ்ந்து தியானிக்கும்படி கிறிஸ்துமஸ் திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துமஸ் தன்னையும் தாண்டி சுட்டிக்காட்டுவது, சிலுவையிலும் உயிர்ப்பின் மகிழ்விலும் வெற்றியாக பெறப்பட்ட மீட்பையே. கடவுள் நம்மருகே வந்துள்ளார், நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மருகே இருக்கிறார் என்ற உணர்வில் பெறும் மகிழ்வால் இந்த கிறிஸ்துமஸ் பெருவிழா நம்மை நிறைவிப்பதாக.
   இவ்வாறு த
து புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, December 19, 2011

டிசம்பர் 18, 2011

அன்னை மரியின் சந்தேகம் இறைவிருப்பத்தை
புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியே! - திருத்தந்தை

   அன்னை மரிக்கு மங்கள வார்த்தை அறிவிக்கப் பட்டதை மையமாகக் கொண்டுள்ள இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்து தியானிக்கையில் அன்னை மரியின் கன்னிமை குறித்து கருத்துக் களைப் பகிர்ந்துகொள்ள விழைகின்றேன் என தன் ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடங்கி னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். அன்னை மரியா கன்னியாக இருந்துகொண்டே இயேசுவைக் கருத் தாங்கினார் என்ற திருத்தந்தை, 'கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர்' என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தை களையும் மேற்கோள் காட்டினார்.
   இந்த பழமையான இறைவாக்கு அன்னை மரியிம் இயேசு உடலெடுத்ததில் நிறைவேறினாலும், இங்கு மனிதனாகக் கருவில் வளர்ந்தது இறைவனே என்ப தையும், மரியின் கன்னிமை மற்றும் இயேசுவின் தெய்வீகத்தன்மை நமக்கு ஓர் உறுதிப்பாடாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிய  திருத்தந்தை, இயேசுவின் பிறப்பைக் குறித்த முன்னறிவிப்பில் 'இது எங்கனம் ஆகும்?' என அன்னை மரி கேள்வி எழுப்பியது சந்தேகத்தின் வெளிப்பாடல்ல, மாறாக, இறைவிருப்பத்தை மேலும் புரிந்துகொள்வதற்கான முயற்சியே என்றும் எடுத்துரைத்தார்.
   மரியாவின் 'ஆம்' என்ற பதில் கன்னிமையில் அவரைத் தாயாக்கியது என்ற பாப்பிறை, மரியாவின் கன்னிமை தனித்துவம் வாய்ந்தது எனவும், அது விசுவா சத்தின் சாராம்சம் என்றும் கூறினார். கடவுளில் ஆழமான நம்பிக்கை கொண்ட எவரும், தூய ஆவியின் செயலால் இயேசுவையும் அவரது இறை வாழ்வையும் தம்மில் வரவேற்க முடியும் எனவும், மரியா மாசற்ற கன்னியாக கடவுளை நமக்கு கொண்டுவந்தார் என்றும் கூறிய திருத்தந்தை, இறுதியாக கூடியிருந்த அனைவ ருக்கும் கடவுளின் ஆசீரை வேண்டுவதாகவும் குறிப்பிட்டார்.

Wednesday, December 14, 2011

டிசம்பர் 14, 2011

இறைத்தந்தையின் விருப்பத்தில் முழு நம்பிக்கை கொண்டு நாம் செபிக்க வேண்டும் - திருத்தந்தை

    கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாட உலகமே தன்னைத் தயாரித்து வரும் இவ்வேளை யில் உரோம் நகரமும் வண்ண விளக்குகளாலும் குடில் தயாரிப்புகளாலும் தன்னை அலங்கரித்து, பாலன் இயேசுவுக்காக காத்து நிற்கிறது. இத்தகை யதொரு பின்னணியில், திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் இன்று திருப்பயணிகளைச் சந்தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இயேசுவின் செபம், குறிப்பாக குணப்படுத்தும் புதுமைகளின் போதான அவரின் செபம் குறித்து இன்று நோக்குவோம் என இப்புதன் பொது மறைபோதக உரையைத் துவக்கினார்.
   புனித மாற்கு நற்செய்தி கூறும், காதுகேளாதவரைக் குணப்படுத்திய புதுமை யிலும், புனித யோவான் நற்செய்தியில் நாம் காணும், இலாசர் உயிர்ப்பிக்கப்பட்ட புதுமையிலும், அப்புதுமைகளை நிறைவேற்றும் முன்னர், மனிதத் துன்பங்களின் முன்னிலையில் இயேசு செபிப்பதைக் காண்கிறோம். இந்த இரு வேளைகளிலும் இயேசு செபித்தது, துன்பங்களோடு தன்னை ஆழமாக அடையாளம் காணும் அவரின் நிலையை மட்டுமல்ல, தந்தையோடு அவரின் தனித்துவ உறவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. காதுகேளாதவரைக் குணப்படுத்திய புதுமையில், இயேசுவின் இரக்க உணர்வானது ஒரு பெருமூச்சாக வெளிப்பட்டு, செபமாகத் தொடர்கிறது. இலாசரை உயிர்ப்பித்த புதுமையில், மரியா மற்றும் மார்த்தாவின் துன்பத்தைக் கண்டு வேதனையுறும் இயேசு, தன் நண்பனின் கல்லறை முன் கண்ணீர் விட்டு அழுகிறார். அதே சமயம், தந்தையின் விருப்பம், தன் பணி மற்றும் தனித்தன்மையின் ஒளியில் இலாசரின் துயர மரணத்தை நோக்குகிறார் இயேசு.
   நாமும் நம்முடைய செபங்களில் இறைத்தந்தையின் விருப்பத்தில் முழு நம்பிக்கைக் கொள்ள வேண்டும், மற்றும், அனைத்தையும் அன்பின் அறிவுக்கு புலப்படாத திட்டத்தின் ஒளியில் நோக்க வேண்டும் என இயேசுவின் எடுத்துக்காட்டு நமக்குக் கற்பிக்கின்றது. கடவுள் நமக்குத் தரவல்ல மிகப்பெரும் கொடை அவரின் நட்பே என்பதை உணர்ந்தவர்களாக நாம் நம் ஒவ்வொரு செபத்திலும் விண்ணப் பங்களையும், புகழுரைகளையும் நன்றியையும் இணைக்க வேண்டும். அதேவேளை, நம் செப எடுத்துக்காட்டு, தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளை நோக்கி நம்மைத் திறப்பதாகவும், இறைமீட்பின் பிரசன்னம் இவ்வுலகில் இருப்பதை பிறருக்குச் சுட்டிக்காட்டுவதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு தன் புதன் மறை போதக உரையை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, December 12, 2011

டிசம்பர் 11, 2011

உலகின் உண்மை ஒளியாகிய இயேசுவின் மீது
நம் கவனத்தைத் திருப்புவோம் - திருத்தந்தை

   மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்தவர்கள், திருவருகை காலத்தில் மின்னும் விளக்குகளால் கவனம் கலைக்கப்படாமல் வாழ அழைக்கப்படுகிறார்கள் என்று கூறினார். 
   இத்திருவருகைக் காலத்தில் கிறிஸ்துமஸ் தயாரிப்பாக கடைவீதிகளில் மினுமினுக்கும் ஒளிவிளக்குகளில் நமது கவனத்தை வைக்காமல் உலகின் உண்மையான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மீது நமது கவனத்தைச் செலுத்த வேண்டுமென்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
   மகிழ்ச்சி ஞாயிறு என்றழைக்கப்படும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு பற்றிய சிந்தனைகளை வழங்கிய அவர், ஓய்வு மற்றும் இளைப்பாறு தலுக்கு காலம் தேவை, அதேநேரம், உண்மையான மகிழ்ச்சி என்பது கேளிக்கை களில் இல்லை என்றார்.
   மனிதனின் இதயம் கடவுளில் இளைப்பாற்றி காணும்வரை அது சலனமற்ற ஆழ்ந்த அமைதியைப் பெற முடியாது என்று ஹிப்போ நகர் ஆயர் புனித அகுஸ்தீன் கூறியதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, உண்மையான மகிழ்ச்சியை ஒருவர் தனது சொந்த முயற்சியால் பெற முடியும் என்று எண்ணக் கூடாது, ஆனால் அது வாழும் மனிதாரகிய இயேசுவோடு கொள்ளும் உறவிலிருந்து பெறப்படுவது என கூறினார்.
   மேலும், தங்கள் வீட்டுக் குடில்களில் வைக்கும் சிறிய பாலன் இயேசு உருவங்களைத் திருத்தந்தை ஆசீர்வதிப்பதற்காக அவற்றுடன் இம்மூவேளை செப உரையில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான சிறாருக்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தும் நன்றியும் சொன்னார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். திருத்தந்தையின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த சிறார், கைதட்டி ஆரவாரித்து பலூன்களைப் பறக்கவிட்டனர்.

Friday, December 9, 2011

டிசம்பர் 8, 2011

அன்னை மரியாவை ஒரு அருள் வடிகாலாக
இறைவன் தேர்ந்தெடுத்திருக்கிறார் - திருத்தந்தை

   இவ்வியாழனன்று (டிசம்பர் 8) கொண்டாடப் பட்ட அன்னை மரியாவின் அமல உற்பவ திரு நாளையொட்டி சிறப்பு மூவேளை செப உரையை வழங்கியத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாவத் தால் மனித குலம் இழந்த பல நன்மைகளை தன் மகன் வழியாக இறைவன் மீண்டும் தருவதற்கு விழைந்ததாலேயே, ஒரு அருள் வடிகாலாக மரியாவைத் தேர்ந்தெடுத்தார் என்றும், அருள் நிறைந்தவரே வாழ்க என்று அன்னை மரியாவை வாழ்த்தும்போதெல்லாம், அருள் வடிவான இறைவனை நமக்கு வழங்கியவர் அவர் என்பதை நாம் நினைவு கூர்கிறோம் என்று கூறினார்.
   அமல அன்னைப் பெருவிழா உருவானதற்குக் காரணமாயிருந்த திருத்தந்தை 11ம் பத்திநாதர், மற்றும் அன்னையின் அமல உற்பவம் குறித்து இறையியல் ஆக்கங் களை தந்துள்ள பல புனிதர்கள் ஆகியோரின் எண்ணங்களை தன் உரையில் மேற் கோள்களாகக் காட்டிப் பேசினார் திருத்தந்தை. திருவருகைக் காலத்தில் இருக்கும் நாம் அனைவரும் அன்னை மரியாவைப் போல் இறைவனை நமது வாழ்வில் முழுமையாக வரவேற்கக் காத்திருப்போம் என்று கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தன் மூவேளை செப உரையின் இறுதியில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு இஸ்பானியம், ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் அன்னை மரியாவின் பெருவிழா வாழ்த்துக்களைக் கூறிய திருத்தந்தை, அங்கு கூடியிருந்த அமல மரியா பாப்பிறைக் கழகத்தின் உறுப்பினர் களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களைக் கூறினார்.


   இவ்வியாழன் மாலை, “மரியா, அமல உற்பவி” என்ற விசுவாச சத்தியம், திருத்தந்தை 9ம் பத்தி நாதரால் 1854ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிரக டனப்படுத்தப்பட்டதை நினைவு கூரும் விதமாக உரோம் இஸ்பானிய படிகளின் அருகில் அமைக்கப் பட்டுள்ள அன்னைமரி திருவுருவத்தின் முன்பாக கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து செபித்த திருத்தந்தை பின்வருமாறு உரையாற்றினார்:
  திருச்சபை தனது வரலாறு முழுவதும் அடக்கு முறைகளால் துன்புற்று வருகின்ற போதிலும் அது எப்பொழுதும் இறைவனின் ஒளியாலும் பலத்தாலும் ஆதரவடைந்து வருகின்றது. எனினும் திருச்சபை எதிர் கொள்ளும் ஒரே ஆபத்து அதன் உறுப் பினர்கள் செய்யும் பாவமே; திருச்சபை தனது உறுப்பினர்கள் செய்யும் பாவத்திற்குப் பயப்பட வேண்டும்.
   அன்னை மரியா, பாவக்கறையின்றி இருந்தார், திருச்சபையும் தூயது, ஆயினும் அது நம் பாவங்களால் கறைப்பட்டுள்ளது. இதனாலே கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் போது, அன்னை மரியாவின் உதவியை நாடுகின்றனர். நமக்கு உண்மையிலே தேவைப்படும், குறிப்பாக மிகுந்த இன்னல்களை எதிர்நோக்கும் இத்தாலி, ஐரோப்பா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் நம்பிக்கையை அன்னை மரியா கொடுக்கிறார்.
   “பெண், கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார், நிலா அவருடைய காலடியில் இருந்தது, அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” என்ற திரு வெளிப்பாட்டு வசனங்களை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, இந்தப் பெண் மரியாவே என்றும், இவர் முழுமையும் இறைவனின் ஒளியால் சூழப்பட்டு இறைவனில் வாழ்ந்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.
   அமலோற்பவ அன்னை விழாவாகிய இவ்வியாழனன்று அன்னை மரியாவிடம் செபித்து அவருக்கு வெள்ளைநிற ரோஜா மலர்களையும் சமர்ப்பித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Thursday, December 8, 2011

டிசம்பர் 7, 2011

உலகிலேயே மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தின் ஒளிவிளக்குகளை ஏற்றிவைத்தார் திருத்தந்தை

   இப்புதன் மாலை 6 மணியளவில் இத்தாலியின் குபியோ நகரின் இங்கினோ மலைச்சரிவில் அலங்கரிக்கப்பட்டிருந்த உலகிலேயே மிக உயர மான கிறிஸ்மஸ் மரத்தின் ஒளிவிளக்குகளை வத்திக்கானில் உள்ள திருத்தந்தையின் இல்லத் தில் இருந்தபடியே கையடக்கமான கணினியின் துணை கொண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஏற்றிவைத்தார்.
   அப்போது உரையாற்றிய திருத்தந்தை, மண்ணகக் கவலைகளில் சூழப்பட்டிருக்கும் நாம், விண்ணகத்தை நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதை, மண்ணில் நடப்பட்டாலும், விண்ணை நோக்கி வளரும் ஒவ்வொரு மரமும் நமக்குச் சொல்லித் தருகிறதென்றும், இந்த மலைச்சரிவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மரத்தின் ஒளி குபியோ நகரை ஒளிர்விப்பதுபோல், இருள் சூழ்ந்த உலகை ஒளிமயமாக்க கிறிஸ்துமஸ் இரவில் ஒளியொன்று இவ்வுலகில் தோன்றியது என்றும் கூறினார். 
   கவலைகள் என்ற இருளில் மூழ்கியுள்ள நமக்கு மிக நெருக்கமாக வந்து நம்மை ஒளிக்கு அழைத்துச் செல்வதற்காகவே இறைவன் குழந்தை வடிவில் நம் மத்தியில் வந்தார் என்றும், இக்குழந்தை தன்னை நம் ஒவ் வொருவர் ல்லத்திலும், வாழ்விலும் ஏற்றுக் கொள்ளும்படி நம்மை கேட்கிறார் என்றும், அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தில் பல வண்ண விளக்குகள் இருப்பதுபோல், நாம் ஒவ்வொருவரும் ஒளி விளக்காக மாறும்படியும், ஒருவரோடு ஒருவர் இணைந்து இந்த உலகை ஒளிர்விக்கும்படியும் அழைக்கப்பட்டுள்ளோம் என் றும்  திருத்தந்தை எடுத்துரைத்தார்.

Wednesday, December 7, 2011

டிசம்பர் 7, 2011

இயேசுவே நம் செபத்திற்கு எடுத்துக்காட்டும்
ஆதாரமுமாக இருக்கிறார் - திருத்தந்தை

   இத்தாலியின் உரோம் நகரில் திருத்தந்தையின் புதன் மறைபோதகத்தில் பங்கு பெற வந்த திருப் பயணிகளை, திருத்தந்தை 6ம் பால் மண்டபத்தில் சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைக் கல்விப் போதனையில், இயேசுவின் படிப்பினை கள் மற்றும் எடுத்துக்காட்டுக்கள் குறித்து அண்மை புதன் கிழமைகளில் நோக்கி வருகிறோம் எனத் தன் இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை.
   இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்' எனக் கூறிய வார்த்தைகளை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் வாசிக்கின்றோம். தூய ஆவியில் தந்தையுடன் ஆழ்ந்த ஐக்கியத்தில் தன் மூலத்தைக் கொண்டுள்ளது இந்த உன்னதச் செபம். என்றும் நிலைத்திருக்கும் மகனாக இருக்கும் இயேசு கிறிஸ்து ஒருவரே தந்தையை அறிவார், தந்தையின் விருப்பத்திற்குத் தன்னை முற்றிலும் திறப்பதில் பேருவகை அடைகிறார். மேலும், 'தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்.' தூய மனதுடையோராகவும் இறை விருப்பத்திற்குத் தங்களைத் திறந்தவர்களாகவும் இருக்கும் குழந்தைகளுடன் இறைவன் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தன் விருப்பத்தை இச்செபத்தில் வெளிப்படுத்துகிறார் இயேசு. 
   தந்தையைப் புகழ்ந்து பாடும் வார்த்தைகளைத் தொடர்ந்து இயேசு 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என அழைப்பு விடுப்பதை மத்தேயு நற்செய்தியில் வாசிக்கின்றோம். இயேசுவே நம் செபத்திற்கு எடுத்துக்காட்டும் ஆதாரமும். அவர் வழியாக தூய ஆவியில் நாம் நம்பிக்கையுடன் தந்தையாம் இறைவனை நோக்கித் திரும்ப முடியும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழி நாம் உண்மையான விடுதலையையும் அமைதியையும் கண்டுகொள்ள முடியும் என்ற உறுதியுடன் அவரை நோக்கித் திரும்புவோம். 
   இவ்வாறு தன் இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய பாப்பிறை, 1943ம் ஆண்டு வான்குண்டுவீச்சு மூலம் தகர்க்கப்பட்ட இத்தாலியின் மத்தியப் பகுதியில் உள்ள செக்கானோ என்ற ஊரின் புனித பேதுரு பங்குக் கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டதன் 50 ஆண்டு நிறைவையும், தென்னாப்ரிக்காவில் மறை போதக குரு மிச்சேல் டி’அன்னுசி கொடூரமான முறையில் கொல்லப்பட்டதன் 10ம் ஆண்டு நிறைவையும் நினைவு கூர்ந்தார். மறைபோதகத்தின் இறுதியில் அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Monday, December 5, 2011

டிசம்பர் 4, 2011

எளிமையான ஒரு வாழ்வைத் தேர்வு செய்யுமாறு
திருமுழுக்கு யோவான் அழைக்கிறார் - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது உரோம் நகர் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ இருபதாயிரம் விசுவாசிக ளோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்து உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கு நம்மைத் தயாரித்துவரும் இத்திருவருகைக் காலத்தில் நம் வாழ்வை நேர்மையான முறையில் ஆய்வுச் செய்து, எளிமையான ஒரு வாழ்வைத் தேர்வு செய்யுமாறு புனித திருமுழுக்கு யோவான் அழைப்பு விடுக்கிறார் என்று கூறினார்.
   நாம் செல்வந்தராகும்படி ஏழ்மையைத் தேர்ந்துகொண்ட இயேசுவின் வருகைக்கு தயாரிக்கும் நாம், ஒட்டகத் தோலாடையை உடுத்தி, வெட்டுக்கிளியையும் காட்டுத் தேனையும் உண்ட புனித திருமுழுக்கு யோவான், மனந்திரும்பிய வாழ்வுக்கு நமக்கு விடுக்கும் அழைப்பிற்குச் செவிமடுப்போம் என்ற திருத்தந்தை, நம் பாவங்களை ஏற்று, மனம் வருந்துவது, உள் மனமாற்றத்திற்கு நம்மை இட்டுச் செல்லவேண்டும் என்ற மேலான ஓர் அழைப்பை திருமுழுக்கு யோவான் முன் வைக்கிறார் எனவும் கூறினார்.
   குடியேற்றதாரர்களுக்கான உலக அவையின் 50ம் ஆண்டு விழா வரும் நாட்களில் ஜெனீவாவில் இடம்பெற உள்ளதை, தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்ட பாப்பிறை, பல்வேறு துன்ப நிலைகளால் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுடன் நாம் ஒருமைப்பாடு கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.

Friday, December 2, 2011

டிசம்பர் 2, 2011

மதத்திற்கு எதிரான பகுத்தறிவைத் தவிர்க்கவேண்டியது 
இன்றைய காலத்தின் தேவை - திருத்தந்தை

   அனைத்துலக இறையியல் அவையின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வோரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, மீட்பைப் புரிந்து கொள்ளுதலை ஒளிர்விக்க வரும் இறைமகனுக்காக காத் திருக்கும் இத்திருவருகைக் காலத்தில், நம் எதிர்பார்ப்பு களின் நம்பிக்கையை உயிரூட்டமுடையதாக வைத்திருப் போம் என அழைப்பு விடுத்தார்.
   இறைவன் பற்றிய கேள்வி, ஒரே கடவுள் கொள்கை, திருச்சபை சமூகக்கோட்பாடுகளின் அர்த்தம் போன்றவை குறித்து அண்மைக் காலங்களில் இந்த இறையியல் அவை விவாதித்து வருவது குறித்து தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்திய திருத்தந்தை, மூவொரு கடவுள் கொள்கையின் ஒளியில் ஒரே கடவுள் கொள்கை குறித்து விளக்கமளித்த பாப்பிறை, இது மனிதர்களிடையே சகோதரத்துவம் பற்றிய எண்ணங்களை நமக்கு ஒளிர்விக்கின்றது என்றார்.
   இறையியல் மெய்யியலுடன் நடத்தும் பலன் தரும் பேச்ச்சுவார்த்தைகள், தனிமனித மற்றும் அனைத்துலக அமைதிக்கு உண்மையான மூல ஆதாரமாக இருக்க முடியும் என அவர் மேலும் எடுத்துரைத்தார். விசுவாசத்திற்கும் பகுத் தறிவுக்கும் இடையேயுள்ள உறவுக்கு கத்தோலிக்கத் திருச்சபை முக்கியத்துவம் கொடுத்ததன் வழியேதான் பல்கலைக்கழகங்கள் பிறந்தன என்பதையும் சுட்டிக் காட்டினார் பாப்பிறை.
   பகுத்தறிவுக்கு எதிரான வன்முறை மதத்தையும், மதத்திற்கு எதிரான பகுத்தறிவையும் தவிர்க்கவேண்டியது இன்றைய காலத்தின் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய பாப்பிறை, பொதுநலனுக்கான நம் பணியின் போது, நம்மோடு விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ளாதவர்களுடனும் நாம் ஒத்துழைத்து, சமூகத் திற்கான நம் உண்மையான மற்றும் ஆழமான அர்ப்பணத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவையையும் வலியுறுத்தினார்.

Wednesday, November 30, 2011

நவம்பர் 30, 2011

நம் பாவ மீட்புக்கான இயேசுவின் கீழ்படிதல் அவரை மரணம் வரை இட்டுச் சென்றது - திருத்தந்தை

    இப்புதனன்று உரோம் நகரின் தட்ப வெப்ப நிலை சிறப்பானதாக இருந்தபோதிலும், ஏற்கனவே திட்ட மிட்டபடி, திருத்தந்தையின் பொது மறைபோதகம் திருத்தந்தை 6ம் பால் மண்டபத்திலேயே இடம் பெற்றது. கிறிஸ்தவ செபத்தின் மறையுண்மை குறித்து தன் எடுத்துக்காட்டு மூலம் முழுமையாக வெளிப்படுத்தும் இயேசு கிறிஸ்துவை நோக்கி திரும்புவோம் என இவ்வார புதன் மறைபோதகத் தைத் துவக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   தன் திருமுழழுக்கைத் தொடர்ந்து இயேசு மேற்கொண்ட செபம், ஒரு முக்கிய தருணமாகும். இறைமகன் என்ற அவரின் ஆழமான தனித்தன்மையையும், தான் மீட்க வந்த பாவம் நிறைந்த மனித குலத்துடன் இயேசு கொண்ட ஒருமைப் பாட்டையும் வெளிப்படுத்துவதாக அச்செபம் இருந்தது.
    இயேசுவின் செபம், தந்தையின் விருப்பத்திற்கு, முழுமையான, மகனுக்குரிய கீழ்ப்படிதலை காட்டி நிற்கின்றது. அந்தக் கீழ்ப்படிதலானது அவரை, நம்முடைய பாவ மீட்புக்காக சிலுவை மரணம் வரை இட்டுச்சென்றது. தன் மனித இதயத்தோடு அன்னை மரியிடமிருந்தும், யூத பாரம்பரியங்களிலிருந்தும் செபிக்கக் கற்றுக் கொண்டார் இயேசு. இருப்பினும், அவரின் செபத்திற்கான மூல ஆதாரம், தந்தையுடன் ஆன முடிவற்ற ஒன்றிப்பேயாகும். நாம் வானுலகத் தந்தையின் புதல்வர்களாக எவ்வாறு செபிக்க வேண்டும் என்பதை மனுமகன் இயேசு, நேர்த்தியான முறையில் காண்பிக்கிறார். செபத்தின் மீது பற்றுறுதி பற்றிய இயேசுவின் எடுத்துக்காட்டு, நாம் நம் செபத்திற்கு எடுக்கும் முயற்சி மற்றும் ஒதுக்கும் நேரம் ஆகியவைகளை ஆழமாகச் சிந்திக்க நமக்குச் சவால் விடுக்கின்றது. செபம் என்பது கடவுளின் கொடையாக இருப்பினும், அது தொடர் பயிற்சிகள் மூலம் கற்றுக் கொள்ளவேண்டிய ஒரு கலையாகும். தொடர்ந்து நாம் செபிக்க வேண்டும் என்று கற்பிக்கும் இயேசு,
செபத்தின் வனப்பு வழியாக, நம்மையே முற்றிலுமாக அர்ப்பணித்தல் மற்றும் திறந்த உள்ளத்துடன் இறைவனை நாடுதல் போன்றவைகளுக்கு சாட்சி பகர்பவர்களாக நாம் செயல்படவேண்டும் என வும் எதிர்பார்க்கிறார், என தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை.
   இப்புதன் மறைபோதகத்தில் பங்குபெற்ற ‘சான் எஜிதியோ’ அமைப்பின் அங்கத்தினர்களைத் தனிப்பட்ட முறையில் வாழ்த்திய திருத்தந்தை, மரண தண்டனையை உலகிலிருந்து அகற்ற அவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். 'உயிர்களுக்கு மதிப்பில்லா இடத்தில் நீதியில்லை' என்ற தலைப்பில் வாழ்விற்கான மாண்பு குறித்த உலகக் கருத்தரங்கை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. சிறைக்கைதிகளின் மாண்பை மதிப்பதுடன் சமூக ஒழுங்கை காப்பதாகவும் உலகின் குற்றவியல் சட்டங்களில் இடம்பெறும் முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும் சான் எஜிதியோ குழுவிடம் திருப்தியை வெளியிட்டார் அவர். தன் புதன் மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் பாப்பிறை.

Monday, November 28, 2011

நவம்பர் 27, 2011

மீட்பின் மறையுண்மையை ஏற்று, விசுவாசத்தின்
புதிய பயணத்தைத் தொடர இத்திருவருகைக்காலம்
அழைப்பு விடுக்கிறது - திருத்தந்தை

   இறைவன் தன் தெய்வீக மகிமையைக் களைந்து நம்மைப்போல் மனிதனாக உடலெடுத்த அவரின் வருகைக் குறித்த நினைவுகளை நம்மில் தட்டி யெழுப்புவதாக திருவருகைக்காலம் உள்ளது என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கடவுள் இல்லாதது போன்றும் கடவுள் நம்மை கைவிட்டுவிட்டது போலும் தோன்றும் இன்றைய நவீன உலகில், திருவருகைக்காலம் என்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்ற பாப்பிறை, இறை அன்பிலிருந்து வெளிப்படும் மீட்பு எனும் மறையுண்மையைத் திறந்த மனதுடன் ஏற்றவர்களாக, கிறிஸ்தவ சமூகங்களோடு வாழ்ந்து விசுவாசத்தின் புதிய பயணத்தைத் தொடர இத்திருவருகைகாலம் அழைப்பு விடுக்கிறது என உரைத்தார்.
   இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் 'கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்!' என்ற வார்த்தைகளையும் எடுத்துரைத்த பாப்பிறை, எவ்வாறு முளையானது மண்ணிலிருந்து புறப்பட்டு விண்ணை நோக்கி வளர்கிறதோ, அவ்வாறே நம் வாழ்வும் இவ்வுலகை மட்டும் சார்ந்ததல்ல, மாறாக அதையும் தாண்டியது என்பதை இயேசுவின் இவ்வார்த்தைகள் நினைவுறுத்தி நிற்கின்றன என்றார். கடவுளை விலக்கி வைத்து மனிதனே அனைத்திற்கும் தலைவன் என்பது போன்ற ஒரு மாயை இன்றைய உலகில் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், சிலவேளைகளில் இயற்கையிலோ சமூகத்திலோ அதிர்ச்சி தரும் நிகழ்வுகள் இடம்பெறும்போது இறைவன் மக்களைக் கைவிட்டு விட்டது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகின்றது என்பது குறித்தும் எடுத்துரைத்த பாப்பிறை, உண்மையான தலைவர் என்பவர் மனித
ர் அல்ல மாறாக கடவுளே என்பதையும் சுட்டிக்காட்டி, விழிப்பாயிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
   தன் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தென் ஆப்ரிக்காவின் டர்பனில் இடம்பெறும் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த ஐநா கருத்தரங்கு குறித்துப் பேசிய பாப்பிறை, இன்றைய உலகின் ஏழைகளையும் வருங்காலத் தலைமுறைகளையும் மனதிற்கொண்டு நல்ல முடிவுகளை எடுக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார். இயற்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாயுக்கள் காற்றில் கலப்பதைக் குறைக்கும் முயற்சிகளை ஐநா கருத்தரங்கு மேற்கொள்ளும் என்பதில் தான் நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தெரிவித்தார். இன்றைய சமூகம் அனுபவிக்கும் தட்பவெப்பநிலை மாற்றப் பிரச் னைகளுக்கு சர்வதேச சமூகத்தின் அனைத்து அங்கத்தினர்களும் பொறுப்புடைய மற்றும் நம்பத்தகுந்த பதிலுரைகள் வழங்க வேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் கூறினார் பாப்பிறை.