Wednesday, December 26, 2012

டிசம்பர் 26, 2012

நற்செய்தி அறிவிப்பு பணியில் ஈடுபட விரும்புவோருக்கு
புனித ஸ்தேவான் ஓர் எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   புனித ஸ்தேவான் திருவிழாவான இன்று வத்திக் கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத் தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிக ளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு மூவேளை செப உரை வழங்கினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா விற்கு அடுத்த நாள், திருச்சபையின் முதல் மறை சாட்சியாம் புனித ஸ்தேவான் திருவிழாவைச் சிறப்பிக்கின்றோம். புனித ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராகவும், தூய ஆவியின் வல்லமையை நிறைவாய் பெற்றவராகவும் இருந்தாரென திருத்தூதர் பணிகள் நூல் எடுத்துரைக்கின்றது. அபாயகரமான சூழல்களிலும், பாதுகாப்பற்ற நிலைகளிலும் அச்சமின்றி இயேசுவுக்கு சான்று பகர விசுவாசிகள் அழைக்கப்படு கின்றனர். ஏனெனில், "அஞ்சவேண்டாம், அந்நேரத்தில் என்ன பேச வேண்டும் என்பது உங்களுக்கு அருளப்படும். பேசுவது நீங்களல்ல, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்" என்ற இயேசுவின் வாக்குறுதி இப்புனிதரில் நிறை வேறியது.
   தூய ஆவியின் வல்லமையின் துணைகொண்டு செயலாற்றி, பேசி, மரித்த திருத்தொண்டர் ஸ்தேவான், இறுதி நிமிடம் வரை இயேசுவுக்குச் சான்று பகர்பவராக இருந்தார். அவர், தன் மரணத்திலும் இயேசுவின் மாதிரியை பின்பற்றினார். இயேசு சிலுவையில் தொங்கியபோது செபித்ததுபோல் இவரும் தன் ஆவியை இயேசுவின் கைகளில் ஒப்படைப்பதாகக் கூறி உயிர் விட்டார். அதுமட்டுமல்ல, தன்னைத் துன்பு றுத்தியவர்கள் சார்பில் இறைவனிடம் மன்றாடினார். அவர் சாகும் வேளையில் வானத்தை உற்று நோக்கியபோது, வானம் திறந்திருப்பதையும் மானிட மகன் கடவு ளது வலப்பக்கத்தில் நிற்பதையும் கண்டார்.
   கிறிஸ்து பிறப்புப் பெருவிழா மகிழ்வில் இருக்கும் நாம், புனித ஸ்தேவானைப் போல் இறைமகனில் நம் பார்வையைத் திருப்பி, இறைவன் மனுவுருவான மறை யுண்மை குறித்து ஆழ்ந்து தியானிப்போம். திருச்சபை வழங்கும் அருளடையாளங் கள் வழி ஊக்கம்பெற்று, இயேசு கிறிஸ்துவோடு நெருங்கிய இணைப்பைக் கொண் டுள்ள நம்மில் தன் மீட்புபணிகளைத் தொடர அவர் ஆவல் கொள்கிறார். புனித ஸ்தேவானைப் போல் நாமும் ஒளிக்கென நம் வாழ்வைத் திறந்து, நன்மையின் பாதையில் நடந்து, இறையன்பின் திட்டத்திற்கு இயைந்த மனித குலத்தைப் படைக்க உதவுவோம்.
   இறுதியாக, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியில் ஈடுபட விரும்பும் அனைவ ருக்கும் புனித ஸ்தேவான் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளார். எடுத்துரைக்கும் முறை களும் தொழில்நுட்பங்களும் இப்பணியில் ஓரளவு உதவினாலும், தூய ஆவியின் வழிநடத்ததுலின் இன்றியமையாமைக் குறித்தும் இப்புனிதர் நமக்குக் காட்டுகின்றார். இப்புதிய நற்செய்தி அறிவித்தல், இயேசுவை உயிரூட்டமுள்ள முறையில் மற்ற வர்களுக்கு எடுத்துச் செல்வதைக் குறிக்கின்றது. இந்த நம்பிக்கையின் ஆண்டில் இயேசுவுக்குத் துணிவுடன் சான்று பகரும் மக்கள் அதிகரிக்க உதவுமாறு அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Tuesday, December 25, 2012

டிசம்பர் 25, 2012

ஊருக்கும் உலகுக்கும்(Urbi et Orbi)
திருத்தந்தையின் கிறிஸ்துமஸ் செய்தி

உரோமையிலும் உலகம் முழுவதிலும் இருக்கின்ற சகோதர சகோதரிகளே!
 உங்களுக்கும் உங்கள் குடும்பங்களுக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்கள். இந்த நம்பிக்கை ஆண்டில் என் கிறிஸ்துமஸ் வாழ்த்து, திருப்பாடலி லிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளுடன் வருகின் றது. 'மண்ணினின்று உண்மை முளைத்தெழும்'. உண்மையில் பார்க்கப்போனால், இத்திருப்பாடல் வார்த்தைகளில் வருங்காலத்தைக் காண்கிறோம். 'உண்மை உலகிலிருந்து முளைத்தெழுகிறது'. வாக் குறுதியாய் வரும் இது, ஏனைய வார்த்தை வெளிப்பாடுகளுடன் இணைந்து வருகின் றது. அதாவது, 'பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறை வாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண் ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல் விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழிவகுக்கும்' (திருப்பா. 85:11-14) என்பவையே அந்த வாக்குறுதிகள்.
   இன்று இந்த இறைவாக்கு நிறைவேறிற்று. பெத்லகேமில் கன்னி மரியாவிடம் பிறந்த இயேசுவில் பேரன்பும் உண்மையும் சந்தித்தன, நீதியும் நிறைவாழ்வும் முத்த மிட்டன, மண்ணிலிருந்து உண்மை முளைவிட்டது, விண்ணிலிருந்து நீதி கீழ்நோக் கியது. புனித அகுஸ்தீனும் மகிழ்வோடு சுருக்கமாக விளக்குகிறார்: உண்மை என் றால் என்ன? இறைமகன். உலகம் என்றால் என்ன? உடல் சார்ந்தது. கிறிஸ்து எங்கே பிறந்தார் என்ற கேள்வியை எழுப்பும்போதும், ஏன் உண்மை இவ்வுலகில் முளைத் தது என பார்க்கும் போதும்... உண்மை கன்னி மரியாவிடம் பிறப்பெடுத்தது. கிறிஸ்து பிறப்பு பெருவிழா ஒன்றில் அவர் வழங்கிய உரையில், "ஒவ்வோர் ஆண்டும் இடம் பெறும் இந்த விழாவில் நாம் இறைவாக்கு நிறைவேறியதைக் கொண்டாடுகிறோம். 'மண்ணினின்று உண்மை முளைத்தெழுந்தது; விண்ணினின்று நீதி கீழ்நோக்கியது'. இறைத்தந்தையின் இதயத்தில் இருக்கும் உண்மை உலகிலிருந்து முளைத்தெழுந் தது, ஏனெனில் அந்த உண்மை தாயின் உதரத்திலும் இருந்தது. உலகம் முழுமை யையும் தாங்கிப்பிடிக்கும் உண்மை இம்மண்ணிலிருந்து கிளம்பி வந்தது, ஏனெனில் இது ஒரு பெண்ணின் கைகளிலிருந்து எழுந்து வந்தது. ஆகாயமும் அடக்கிக்கொள்ள முடியாத இந்த உண்மை இவ்வுலகில் எழுந்தருளி ஒரு மாடடைக் கொட்டிலில் படுத் திருக்கின்றது. மேன்மை சிறப்பு வாய்ந்த இறைவன் இவ்வளவு தாழ்மையுடன் பிறப் பெடுப்பதால் என்ன பயன்? இதனால் அவருக்கு எவ்வித பலனுமில்லை. ஆனால், நாம் நம்பினால் அது நமக்குப் பயனுள்ள தாகும்" என்கிறார்.
   'நாம் நம்பினால்' இதுவே விசுவாச சக்தி. கடவுளே அனைத்தையும் படைத்தார், அவரே இயலக்கூடாததை இயலக்கூடியதாக்கினார். ஆம். மனு உருவானார். வரம் பற்ற அவரது அன்பின் ஆற்றல் மனிதர்களின் புரிந்துகொள்ளுதலையும் தாண்டி உருப்பெற்றது. முடிவற்றவர் குழந்தையாய் உருவெடுத்து மனித சமுதாயத்தில் நுழைந்தார். இருப்பினும் நான் விசுவாசக் கதவுகளைத் திறக்கவில்லையெனில் இதே கடவுள் என் இதயத்திற்குள் நுழைய இயலாது. மறுக்கவும் துணியும் பெரு வல்லமை குறித்து நமக்கு அச்சம் வர லாம். இறைவனுக்கும் திறக்க மறுக்கும் சக்தி குறித்து பயம் எழலாம். ஆனால் இந்த எண்ணத்தை விரட்டியடிக்கும் உண்மை உள் ளது, அச்சத்தை மேற்கொள்ளும் நம்பிக்கை உள்ளது. ஆம். உண்மை பிறந்துள்ளது. இறைவன் பிறந்துள்ளார். இவ்வுலகம் கனியைத் தந்துள்ளது. ஆம், நல்ல நிலமுள் ளது, அது நலமான நிலம், அனைத்து சுயநலங்களிலிருந்தும், திறக்க மறுக்கும் நிலை களிலிருந்தும் விடுதலை தருகிறது. இவ்வுலகிலுள்ள ஒரு நிலம் கடவுள் நம்மி டையே குடிகொள்ள தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில் அவரின் இருப்பைக் கொண் டுள்ள பூமி. அந்த இடம் இன்றும், இந்த 2012லும் இருக்கிறது. இந்த நிலமே உண் மையை முளைத்தெழ வைத்தது. ஆகவே, உலகில் நம்பிக்கை உள்ளது, நம்பத்தகும் நம்பிக்கை, துன்ப வேளைகளிலும், மிகவும் கடினமான சமயங்களிலும்கூட! அன்பை யும் நீதியையும் அமைதியையும் கொண்டதாய் அந்த உண்மை முளைத்தெழுந்தது.
   ஆம். சிரியா நாட்டு மக்களுக்காக அமைதி மொட்டவிழ்கிறது, ஆழமாகக் காயமுற வும், பிரிவினைகளைச் சுமக்கவும் காரணமாகும் மோதல், இங்கு, உதவிகள் இல்லா மக்களைக்கூட விட்டுவைக்காமல், அப்பாவி மக்களைப் பலிவாங்கி நிற்கிறது. இந்த இரத்தம் சிந்தல்கள் நிறுத்தப்பட, மீண்டுமொரு முறை அழைப்பு விடுக்கிறேன். அகதி களுக்கும் குடிபெயர்ந்தோர்க்கும் உதவிகள் வழங்கப்படவும், பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த மோதல்களுக்கு அரசியல் தீர்வு காணவும் விண்ணப்பிக்கிறேன். மீட்பர் பிறந்த மண்ணில் அமைதி மலர்கிறது. இஸ்ரயேலர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக் கும் இடையே பல ஆண்டுகளாய் நிலவும் பிரிவினைகளையும் மோதல்களையும் முடிவுக்கு கொணரவும், பேச்சுவார்த்தைகளின் பாதையில் தீர்மானத்துடன் நடக்க வும் அவரே கொடைகளை வழங்குகிறார்.
   வடஆப்ரிக்க நாடுகளில், புதிய வருங்காலத்தைத் தேடும் ஆழமான மாற்றத்தின் வழியாக குறிப்பாக எகிப்தில் -இயேசுவின் குழந்தைப்பருவத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த அன்புநிறை பூமியில்- குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீதி, விடுதலை மீதான மதிப்பு, மனிதருக்கான மாண்பு ஆகியவைகளின் அடிப்படையில் சமூகங் களை எழுப்புவார்களாக!
   பெரிய ஆசியக் கண்டத்தில் அமைதி முளைத்தெழுகிறது. இப்பூமியில் வாழும் எண் ணற்ற மக்களை குழந்தை இயேசு கருணையுடன் நோக்குகிறார், குறிப்பாக அவரில் நம்பிக்கை கொள்வோரை. அமைதியின் மன்னர் சீன மக்கள் குடியரசின் புதிய தலை வர்கள் மீதும் பார்வையைத் திருப்புகிறார், அவர்கள் எதிர்நோக்கும் பெரும் சவால் களை மனதில்கொண்டு. மதங்களின் பங்களிப்பை அந்நாடு ஊக்குவிப்பதாக, அதுவும் அந்நாட் டின் உன்னத மக்கள் மற்றும் உலகம் முழுமையின் நலனுக்காக ஒருவர் ஒருவருக்கான மதிப்பில், அவை, நீதியான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பதாக!
  கிறிஸ்துவின் இப்பிறப்புப் பெருவிழா மாலி நாட்டில் அமைதியும், நைஜீரியாவில் இணக்க வாழ்வும் திரும்பி வருவதை ஊக்குவிப்பதாக. நைஜீரியாவில் கொடூரத் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து பலிவாங்கி வருகின்றன, குறிப்பாக கிறிஸ்த வர்களை! நம் மீட்பர் உதவிகளை வழங்கி ஆறுதலளிக்கிறார், காங்கோ குடியரசின் கிழக்கில் உள்ளவர்களுக்கு. கென்ய மக்களுக்கு அமைதி எனும் கொடையை வழங்கு கிறார். இங்கு இரத்தம் சிந்தும் தாக்குதல்கள் குடிமக்களையும் வழிபாட்டுத்தலங் களையும் அழிவுக்குள்ளாக்குகின்றன.
   இலத்தீன் அமெரிக்காவில் இவ்விழாவைச்சிறப்பிக்கும் விசுவாசிகளை குழந்தை இயேசு ஆசீர்வதிக்கிறார். அவர்களின் மனிதாபிமான மற்றும் கிறிஸ்தவ குண நலன்கள் வளர உதவுகிறார். தங்கள் குடும்பங்களையும் குடியிருப்புகளையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரமளிக் கிறார். குற்றங் களுக்கு எதிரான போர் மற்றும் வளர்ச்சி குறித்த அர்ப்பணத்தில் ஆட்சியாளர்களுக்குச் சக்தி வழங்குகிறார்.
   அன்பு சகோதர சகோதரிகளே! அன்பும் உண்மையும், நீதியும் அமைதியும் சந்தித் தன. பெத்லகேமில் மரியன்னையிடம் பிறந்தவர், மனுக்குலத்திற்குள் மனித உடல் எடுத்துள்ளார். மனிதனாகப் பிறந்தார் இறைமகன், கடவுள் வரலாற்றில் தோன்றி னார். அவரின் பிறப்பு அனைத்து மனித குலத்திற்கும் புது வாழ்வின் முளையானது. ஒவ்வொரு நிலமும் நல்நிலமாக மாறி, அங்கு அன்பு, அமைதி, உண்மை, நீதி ஏற்கப் பட்டு, முளைவிடட்டும். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்கள்!

Wednesday, December 19, 2012

டிசம்பர் 19, 2012

மரியாவின் விசுவாசம் இறைவனின் வாக்குறுதியில்
முழு நம்பிக்கை கொள்வதாக இருந்தது - திருத்தந்தை

   திருவருகைக்காலத்தில் இருக்கும் நமக்கு, இது கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு முந்தைய இறுதி புதனான இன்று, திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கிய பொது மறை போதகத்தில், அன்னை மரியாவின் விசுவாசம் குறித்த தன் சிந்தனைகளை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பகிர்ந்து கொண்டார்.
   நம்பிக்கை ஆண்டின் நம் மறைக்கல்வி போத னையில், இந்த திருவருகைக் காலத்தின் இறுதி நாட்களில், அன்னை மரியாவின் விசுவாசம் குறித்து சிந்திப்பது பொருத்தமுடையதாக இருக் கும். ஆண்டவரின் தூதர் கபிரியேல் கிறிஸ்து பிறப்பு பற்றிய மங்கள வார்த்தையை அறிவித்தபோது, அன்னை மரியாவை நோக்கி "கடவுள் உம்மோடு" எனக்கூறி, அவரின் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த மகிழ்வானது, இறைமக்களின் மெசியா குறித்த நம்பிக்கையோடு தொடர்புடையதாகும். சீயோனின் மகளாம் இறைமக்களின் இந்த நம்பிக்கை, தற்போது அன்னை மரியாவில் நிறைவு பெறுகிறது. இறைவார்த்தைக்கு கீழ்ப்படிய அன்னை மரியாவை வடிவமைத்து அவர் இதயத்தை நிறைத்த அருளின் கனியே இது! ஆபிரகாமைப் போல் அன்னை மரியா வின் விசுவாசமும், எதுவும் தெளிவாகத் தெரியாத நிலையிலும் இறைவனின் வாக்குறுதியில் முழு நம்பிக்கை கொள்வதில் இணைந்ததாக இருந்தது.
   இறைவனின் திட்டங்கள் சில வேளைகளில் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாக, தெளிவற்றதாக, சிலுவை எனும் மறையுண்மையைத் தழுவுவதை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை நம்மைப் போலவே அன்னை மரியாவும் தன் வாழ்வில் உணர்ந் திருத்தார். மங்கள வார்த்தை அறிவிப்பின்போதும் அன்னை மரியா, வானதூதரின் வார்த்தைகளைத் தன் இதயத்தில் நிறுத்தி தியானித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விசுவாசம் என்பது இறைவிருப்பத்திற்கு முற்றிலுமாகக் கீழ்ப்படிதலுடன் இருக்கும் அதேவேளை, அவ்விருப்பத்தை உய்த்துணரவும், புரிந்துகொள்ளவும், ஏற்கவும் தின மும் முயல வேண்டும் என்பதை அன்னைமரியின் எடுத்துக்காட்டு நமக்கு எடுத்து ரைக்கின்றது. இந்த புனித காலத்தில் நம் இதயங்களிலும், நம் இந்த உலகிலும் இறையருளுக்கான கதவுகளைத் திறக்கும் தாழ்ச்சியுடைய, நம்பிக்கைமிகு விசுவா சத்தில் நாம் வளர, இயேசு கற்பித்த செபம் நமக்கு உதவுவதாக!
   இவ்வாறு, இவ்வாரப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, December 16, 2012

டிசம்பர் 16, 2012

நமது நடத்தை கடவுளின் திருவுளத்தை பின்
தொடர்வதை நிரூபிக்க வேண்டும் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப் பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருவருகைக்காலத்தின் இஞ்ஞாயிறு நற்செய்தி, யோர்தான் நதியில் திருமுழுக்கு பெறச் சென்ற மக்களுக்கு போதித்த திரு முழுக்கு யோவானை நமக்கு படம்பிடித்து காட்டுகிறது. யோவா னின் அழுத்தமான வார்த்தைகள், மெசியாவின் வருகைக்காக ஒவ்வொருவரும் மனம்மாற அவசரப்படுத்தின. "நாங்கள் என்ன செய்யவேண்டும்?'' என்று சிலர் அவரிடம் கேட்டனர். குறித்த நேரத்தில் நிகழ்ந்த இந்த உரையாடல் மிகவும் சுவாரசியமானது.
   முதல் பதில் மக்கள் கூட்டத்துக்கு பொதுவாக வழங்கப்படுகிறது. திருமுழுக்காளர் கூறுகிறார்: "இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்துகொள்ளட் டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்." பிறரன்போடு வாழும் நீதி யின் சூழலை நாம் இங்கு காண முடிகிறது. தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்க ளுக்கும், பற்றாக்குறை உள்ளவர்களுக்கும் இடையில் உள்ள சமமின்மையை போக்க நீதி அழைப்பு விடுக்கிறது. ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொள்ளவும், அவர்களது தேவைகளை சந்திக்கவும் பிறரன்பு அவசரப்படுத்துகிறது. நீதியும் அன்பும் ஒன்றை ஒன்று எதிர்க்கவில்லை, மாறாக ஒன்றுக்கொன்று தேவையாகவும் உதவியாகவும் இருக்கின்றன. "மிகவும் நீதியுள்ள சமூகத்திலும், எப்பொழுதும் அன்பு தேவை. ஏனெ னில், உலக தேவைகளுக்கான சூழ்நிலைகளில், அடுத்திருப்பவரின் நிலையான அன் பின் உதவி இன்றியமையாததாக உள்ளது."
   அடுத்தது இரண்டாவது பதிலை நோக்குவோம், அது உரோமையருக்காக வரி வசூலிப்பவர்களிடம் நம்மைத் திருப்புகிறது. வரி வசூலிப்பவர்கள் தங்கள் பதவியை கொள்ளையடிக்க பயன்படுத்தியதால் வெறுப்புடன் நோக்கப்பட்டார்கள். திருமுழுக் காளர் அவர்களிடம், வேறு எதைப் பற்றியும் பேசாமல் அவர்களின் பணிகளை மாற்றச் சொல்கிறார். கடவுளின் பெயரால் வந்த இறைவாக்கினர், விதிவிலக்கான வற்றை செய்யுமாறு கேட்கவில்லை, மாறாக அனைத்துக்கும் மேலாக கடமையை நேர்மையாக நிறைவேற்றச் சொல்கிறார். நிலைவாழ்வை அடைவதற்கான முதல் படியாக எப்பொழுதும் கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும், இங்கு ஏழாவது கட் டளை: "களவு செய்யாதே."
   மூன்றாவது பதில் படைவீரர்களைப் பற்றியது, அதிகாரம் படைத்த மற்றொரு வகை யினர், அதை தவறாக பயன்படுத்த சோதனைக்கு ஆட்படுபவர்கள். படைவீரர்களிடம் யோவான் கூறுகிறார்: "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்." பிறரிடம் நேர்மையாகவும் மரியாதையோடும் நடந்து கொள்வதில் ஒவ்வொருவ ரிடமும், குறிப்பாக அதிக பொறுப்பு உள்ளவர்களிடம் மீண்டும் மாற்றம் தொடங்க வேண்டும்.
   இந்த உரையாடல்களை முழுமையாக கவனித்தால், யோவானின் வார்த்தைகளில் உள்ள நிலைத்தன்மை புரியும்: கடவுள் நம் செயல்களுக்கு ஏற்ப நமக்கு தீர்ப்பு வழங் குவார் என்பதால், நமது நடத்தை அவரது திருவுளத்தை பின் தொடர்வதை நிரூபிக்க வேண்டும். திருமுழுக்காளரின் அடையாளங்கள் நமது சிக்கலான உலகின் இன்றைய நாளிலும் பொருந்தும், இந்த நடத்தை விதிகளை உள்வாங்கினால் அனைத்தும் சிறப் பாக அமையும். கிறிஸ்து பிறப்புக்கான தயாரிப்பு மனமாற்றத்தின் நற்கனிகளைத் தர, தூய மரியாவின் பரிந்துரை வழியாக ஆண்டவரை வேண்டுவோம்.
   இன்றைய மூவேளை செபத்துக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்து கிறேன். வெள்ளிக்கிழமை நியூட்டனில் நிகழ்ந்த அறிவற்ற வன்முறையால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, குறிப்பாக குழந்தையை இழந்தவர்களுக்கு செபத்தின் வழியாக என் அருகாமையை உறுதி அளிக்கிறேன். ஆறுதலின் கடவுள் அவர்களது இதயத்தைத் தொட்டு, அவர்கள் வலி யைக் குறைப்பாராக! இந்த திருவருகைக்காலத்தில், நம்மை செபத்திலும், அமைதி பணிகளிலும் ஆர்வமுடன் அர்ப்பணிப்போம். இந்த துயர நிகழ்வால் பாதிக்கப்பட்ட வர்கள் மீதும், உங்கள் ஒவ்வொருவர் மீதும், கடவுளின் நிறைவான ஆசீர் பொழியப் பட நான் வேண்டுகிறேன்!

Wednesday, December 12, 2012

டிசம்பர் 12, 2012

கிறிஸ்துவில் முழுமை அடைந்த கடவுளின் அன்பு
திட்டத்தில் அவர் நம்மில் ஒருவரானார் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டங்களுக் கான தயாரிப்புகளுக்கு ஒத்திணங்கிச் செல்லும் விதமாக இவ்வார புதன் பொது மறைபோதகத்தில், இறைவனின் மீட்பு திட்டம் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் கருத்துக்களை வழங்கினார்.
   நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக் கல்வி போதகத்தின் தொடர்ச்சியாக இன்று, கடவுள் இவ்வுலகிற்கு தன்னையே வெளிப்படுத்தியது மற் றும் அவரின் மீட்பு திட்டம் குறித்து நோக்குவோம். இஸ்ரயேலர்களின் வரலாற்றில் இது எவ்வகை யில் வளர்ச்சியடைந்தது என்பது குறித்து திருவிவிலியம் நமக்குக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் வழியாக கடவுள் வரலாற்றில் நுழைந்ததை காண்கிறோம். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில், மையமாக திகழ்ந்த விடுதலைப்பயண நிகழ்வில் கடவுளின் வல்லமை சிறப்பாக வெளிப்பட்டது. பாஸ்கா நிகழ்வு இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் கடவுளின் நினைவாக தொடர்ந்தது. கடவுள் எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து அவர்களை விடுவித்ததால், அவர்கள் வாக்க ளிக்கப்பட்ட நாட்டுக்கு சென்று அவரை உண்மையான ஒரே கடவுளாக வழிபட் டார்கள். பின் வந்த நூற்றாண்டுகளில் இஸ்ராயேல் மக்கள் இறைவனின் இந்த மீட்பு செயல்களைத் தங்கள் மனதிற்குள் மகிழ்ச்சியுடன் நினைத்து கொண்டாடி வந்தனர். மீட்பின் வரலாற்றில் கடவுளது செயலைப் புகழ்ந்துரைக்கும் கன்னி மரியா, "மூதா தையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்" என்கிறார். கடவுளின் விடுதலை அளிக்கும் திட்டம் தொடர்வதால், மனிதர் தமது ஆண்டவருக்கு பணிந்து, தனது நம்பிக்கையாலும் அன்பு செயல்களாலும் பதிலளிக்க வேண்டும். கடவுள் படைப்பு செயலில் மட்டுமின்றி, நமது வரலாற்றில் நுழைந்ததன் வழியாகவும் தம்மை வெளிப்படுத்தியுள்ளார். உலகம் உருவாக காரணமான வாக்கு, கடவுளின் உண்மை முகத்தை காட்டும் வகையில் இயேசுவாக மனித உடலெடுத்தார்.
   கடவுள் தொடக்கத்தில் இருந்தே தம்மோடு நெருங்கிய உறவு கொண்டிருக்க மனி தரை அழைத்துள்ளார். மனிதன் அவருக்கு கீழ்ப்படிய மறுத்து, அவரது நட்புறவை இழந்தபோதிலும், கடவுள் அவனை ஒருபோதும் மரணத்தின் ஆற்றலுக்கு கையளிக்க வில்லை. மாறாக மீண்டும் மீண்டும் மனிதரோடு உடன்படிக்கை செய்து கொண்டார். முதலில் நோவா வழியாகவும், பின்பு ஆபிரகாம் வழியாகவும், விடுதலைப்பயணத் தின்போது சீனாய் மலையில் மோசே வழியாகவும் கடவுள் உடன்படிக்கைகளை செய்து கொண்டார். அதன் பிறகு மனித குலம் அனைத்தும் எதிர்நோக்கியிருந்த ஒரு முடிவற்ற புதிய உடன்படிக்கையைக் குறித்து இறைவாக்கினர்கள் வழியாகக் கற்றுக்கொண்டனர். மனித வரலாற்றில் படிப்படியாக உணரப்பட்டு வடிவம் பெற்று வந்த இத்தெய்வீகத் திட்டம், இறைமகனின் வருகையில் தன் உச்சநிலையை அடைந் தது. இறுதியாக, வெளிப்படுத்தப்பட்ட கிறிஸ்துவில் முழுமை அடைந்த கடவுளின் அன்பு திட்டத்தில், அவர் நம்மில் ஒருவரானார். இந்த திருவருகைக்காலத்தில் இறைவனின் மீட்புத்திட்டம் படிப்படியாக வெளியிடப்பட்டது குறித்து ஆழ்ந்து தியா னிக்கவும், கிறிஸ்துவில் இறைவன் நம் அருகே நெருங்கி வந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ளவும் அழைக்கப்படுகிறோம். நமது விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பின் வழியாக ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் உடனிருப்புக்கு சாட்சி களாக திகழவும், இவ்வுலகின் கவனச்சிதறல்கள், மனக்கலக்கங்கள் மற்றும் மேம் போக்கான நிலைகள் போன்றவைகளின் மத்தியிலும், பெத்லகேம் குடிலை நிறைத்த ஒளியை நம் வாழ்வில் பிரதிபலிக்கவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம். உலக வாழ் வின் துன்பங்களில் இயேசுவின் அன்னையாம் மரியா உங்களுக்கு துணையாக இருந்து ஆறுதல் அளிப்பாராக!
   இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Sunday, December 9, 2012

டிசம்பர் 9, 2012

இயேசுவை வரவேற்க யோவானின் குரலுக்கு
செவிசாய்ப்பதே நமது நோக்கம் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இந்த திருவருகைக்காலத்தின் திருவழிபாட்டில் கன்னி மரியா, திருமுழுக்கு யோவான் ஆகிய இருவ ரும் மெசியாவின் வருகைக்காக தயார் செய்கிறார் கள். அனைத்து நற்செய்திகளுமே இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தில் திருமுழுக்கு யோவானை அவரது முன்னோடியாக காட்டு கின்றன. புனித லூக்கா இந்த இருவருக்கும், அவர்களது பணிக்கும் இடையே உள்ள தொடர்பையும் விளக்குகிறார். குருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்களான செக்கரியா மற்றும் எலிசபெத்தின் மகனான யோவான், இறைவாக்கினர்களில் இறுதியானவராக மட்டுமின்றி, பழைய உடன்படிக்கையின் குருத்துவத்தை அடையாளப்படுத்துபவராக வும் இருப்பதால், இயேசுவால் தொடங்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் வழிபாட் டுக்கு மக்களைத் தயார் செய்கிறார். லூக்கா திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை வரலாற்று சூழ்நிலையையும் விவரிக்கிறார்: 'திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார் ... அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர்.' (லூக்கா 3:1-2) அக் காலத்தவர்களால் கவனிப்படாத நிலையிலும் உண்மையான மாபெரும் நிகழ்வாகிய கிறிஸ்துவின் பிறப்பு, இத்தகைய வரலாற்று கட்டமைப்பிற்குள் இருந்தது.
   "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மை யாக்குங்கள்" (லூக்கா 3:4) என்று பாலைநிலத்தில் முழங்கும் குரலாக திருமுழுக்கு யோவான் குறிப்பிடப்படுகிறார். அந்த குரல் வார்த்தையை அறிவிக்கிறது, ஆனால் இங்கு பாலைநிலத்தில் வாழ்ந்து வந்த செக்கரியாவின் மகன் யோவான், கடவுளின் வாக்கைப் பெற்றார். எனவே, கிறிஸ்துவை தொடர்புடைய பணியில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. புனித அகுஸ்தீன் இவ்வாறு கூறுகிறார்: யோவான் கடந்து போகும் குரலாக இருந்தார், இயேசுவோ தொடக்கம் முதலே இருந்த நிலையான வாக்காக இருக்கிறார். குரலில் இருந்து வார்த்தையை (வாக்கை) எடுத்துவிட்டால் என்ன மிஞ்சும்? ஒரு மங்கலான ஒலிதான். வார்த்தை இல்லாத குரலும் செவிகளை அடையும், ஆனால் உள்ளத்தை கட்டியெழுப்பாது." நம்மை மீட்கும் வார்த்தையாகிய இயேசுவுக்கு இடம் கொடுத்து, நம் உள்ளத்தில் வரவேற்க அந்த குரலுக்கு செவி சாய்ப்பதே இன்று நமது நோக்கம். கடவுளின் மீட்பை பெத்லகேமின் எளிய தொட்டி லில் காண, இந்த திருவருகைக்காலத்தில் விசுவாச கண்களோடு தயாராவோம். நாம் இன்பம் தேடும் இந்த நுகர்வு சமூகத்தில், இன்றியமையாத ஒரு வழியில் வாழ திருமுழுக்கு யோவான் நமக்கு கற்பிக்கிறார். அதன் மூலம், கிறிஸ்து பிறப்பை வெளி கொண்டாட்டமாக அன்றி, மக்களுக்கு அமைதியையும், வாழ்வையும், உண்மையான மகிழ்ச்சியையும் கொணர வரும் இறைமகனின் விழாவாக சிறப்பிக்க முடியும்.
   இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான், ஆண்டவரின் மாட்சிமிகு வருகைக்காக காத்திருக்கும் நாம் அவரது வழியைத் தயார் செய்ய, மனம் வருந்தி தூய்மையாவதன் தேவையை நினைவூட்டுகிறார். ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவ ரது உண்மை வீடாகிய விண்ணகத்துக்கு செல்ல வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு இயேசுவே ஒரே வழி. உங்களையும், உங்களது அன்புக்குரியவர் களையும் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!

Wednesday, December 5, 2012

டிசம்பர் 5, 2012

நாம் விசுவாசத்தின் கீழ்ப்படிதலில் இறைவனுக்கு
நம்மை அர்ப்பணிக்க வேண்டும் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்கு முன் தயாரிப்புகளின் காலமான திருவருகைக் காலத்தின் முதல் புதனன்று வத்திக்கானில் திருப் பயணிகளை சந்தித்த திருத்தந்தை, திருவருகைக் காலத்தின் சிறப்புக்கள் குறித்து எடுத்துரைத்தார்.
   இந்த 'நம்பிக்கை ஆண்டில்' நம் மீட்பு குறித்த இறைத்திட்டத்தின் மேன்மையை ஆழ்ந்து சிந்தித்து திருவருகைக்காலத்தை தொடங்குவோம். இறைவ னின் சொந்த பிள்ளைகளாக நாம் மாறும் வண்ணம், உலகம் தோன்றுவதற்கு முன்னரே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் என புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திரு முகத்தின் தொடக்கத்தில் வாசிக்கின்றோம். இத்திருமுகத்தின் பகுதி, இறைவனின் கருணைமிகு அன்பை புகழ்ந்து பாடுகின்றது. காலநிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்க்க வேண்டும் என்பதே இறைவனின் திட்டமாகும். தனது இத்திட்டத்தை இறைவன் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியுள்ளார். இறைமகனின் மனித பிறப்பிலும் தூய ஆவியை பொழிந்ததிலும் அவ்வெளிப்பாடுகள் உச்ச நிலையை அடைந்தன. இறை வன் தம் மகன் இயேசுவில் தன்னை வெளிப்படுத்தியது நம் நம்பிக்கைகள் மற்றும் ஏக்கங்களோடுத் தொடர்புடையது. அதேவேளை, நாம் விசுவாசத்தின் கீழ்ப்படிதலில் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெய்வீக வெளிப்பாடுகளுக்கு நம் மனம் மற்றும் விருப்பத்தின் சுதந்திர இசைவாக, நம் வாழ்வு மற்றும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகின் உண்மை நிலைகளை புதிய வழிகளில் காண்பதற்கு உதவும் மனமாற்றத்திற்கு விசுவாசம் அழைப்பு விடுக்கிறது. இத்திரு வருகைக்காலத்தில், இறைவனின் அன்பு திட்டத்தின் உள்ளழகைக் குறித்து மேலும் ஆழமாகத் தியானிப்போம். அதே நேரம், இவ்வுலகில் இறைவனின் மீட்புத் தொடர்பு டைய உடனிருப்பின், வாழும் அடையாளமாக இருக்க முயல்வோம்!
   இவ்வாறு தன் பொதுமறைபோதகத்தை நிறைவுச்செய்த திருத்தந்தை, அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, December 2, 2012

டிசம்பர் 2, 2012

கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்த தேவசகாயம் பிள்ளை
நமக்கு ஓர் எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள லூக்கா நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   இன்று திருச்சபை ஒரு புதிய திருவழிபாட்டு ஆண்டை, விசுவாச ஆண்டோடு சேர்ந்து தொடங் குகிறது. திருவருகை காலத்தின் நான்கு வாரங்கள், மனித உடலேற்பு மறைபொருளான கிறிஸ்து பிறப்புக்கு அழைத்து செல்கிறது. திரு வருகை என்பதன் பழைய பொருள் அரசர் அல்லது பேரரசரின் சந்திப்பு என்பதாகும்; கிறிஸ்தவ மொழியில் இது கடவுளின் வருகையை, உலகில் அவரது உடனிருப்பைக் குறித்து நிற்கிறது. அனைத்துலகையும் வரலாற்றையும் உள்ளடக்கிய இந்த மறை பொருளில் இரண்டு அம்சங்கள் உள்ளன: இயேசு கிறிஸ்துவின் முதல் மற்றும் இரண்டாம் வருகை. இந்த இரண்டு தருணங்களும் கால வரிசையில் தொலைவில் இருந்தாலும், படைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அவரது மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாக, இயேசு ஏற்கனவே மனிதரையும், அனைத்துலகையும் உருமாற்றி விட்டார். ஆனால் முடிவு வருவதற்கு முன், அனைத்து நாடுகளிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென இயேசு கூறியிருக்கிறார். ஆண்டவரின் வருகை தொடர்கிறது, அவரது உடனிருப்பால் இந்த உலகம் நிரப்பப்பட வேண்டும். ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் வாக்களிக்கப்பட்ட மணமகளாம் திருச்சபை, ஆண்டவரோடு ஒன்றித்து, ஏற்கனவே தொடங்கிவிட்ட ஆண்டவரின் மாட்சிமிகு வருகைக்காக உழைக்கிறது.
   ஆண்டவரின் வருகைக்கு தயாராக இருக்கும் வகையில், நல்லொழுக்கத்தைப் பின்பற்றி வாழ வேண்டும். லூக்கா நற்செய்தியில், இயேசு தம் சீடர்களுக்குக் கூறுகிறார்: "உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க் கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு ... எப்பொழுதும் விழிப்பா யிருந்து மன்றாடுங்கள்'' (லூக்கா 21:34,36) எனவே, எளிமையும் செபமும் தேவை. திருத்தூதர் பவுல், நம் உள்ளங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு,  நமக் குள் அனைவருக்காகவும் அன்பில் வளர்ந்து பெருக அழைப்பு விடுக்கிறார். உலகின் குழப்பங்கள், அலட்சியம் மற்றும் உலகப்போக்குகளுக்கு நடுவில், கிறிஸ்தவர்கள் கடவுளிடமிருந்து வரும் மீட்பை ஏற்றுக்கொண்டு, மலைமேல் அமைந்துள்ள நகரைப் போன்று பல வகையான வாழ்க்கை முறைகளில் சான்று பகர்கிறார்கள். "அந்நாள் களில் எருசலேம் பாதுகாப்புடன் வாழும்; மேலும், 'ஆண்டவரே நமது நீதி' என்னும் பெயரால் அழைக்கப்படும்" என்று இறைவாக்கினர் எரேமியா (33:16) அறிவிக்கிறார். வரலாற்றில் செயல்பட்டும் முழுமையாக உணரப்படாத கடவுளின் அன்புக்கும், நீதிக் கும் அடையாளமாக நம்பிக்கையாளர்களின் சமூகம் இருக்கிறது. கன்னி மரியாவின் வழிகாட்டுதலால், நம் ஒவ்வொருவரிடமும் கடவுளின் அன்பு, நீதி மற்றும் அமைதி யின் அரசு விரிவடையட்டும்!
   அன்பு சகோதர சகோதரிகளே, இன்று இந்தியாவின் கோட்டாறு மறைமாவட்டத் தில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொதுநிலை விசுவாசியான தேவசகாயம் பிள் ளைக்கு அருளாளர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள திருச்சபையின் மகிழ்ச்சியில் நாமும் இணைவதோடு, அந்த பெரிய நாட்டின் கிறிஸ்தவர்கள் விசுவா சத்தை புதிய அருளாளர் பாதுகாக்கவும் செபிப்போம். தேவசகாயம் பிள்ளையின் அருளாளர் பட்ட விழாவை சிறப்பிக்கும் கோட்டாறு மக்களை நான் சிறப்பாக வாழ்த்துகிறேன். கிறிஸ்துவுக்கு அவர் பகர்ந்த சான்று, இந்த திருவருகை காலத்தின் முதல் ஞாயிறு அழைப்பு விடுக்கும் கிறிஸ்துவின் வருகைக்கான விழிப்புணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. நமது வாழ்வு மேலும் கிறிஸ்துவை மையப்படுத் தியதாக அமைய இந்த புனித காலம் நமக்கு உதவட்டும். கடவுள் உங்கள் அனை வரையும் ஆசீர்வதிப்பாராக!

Wednesday, November 28, 2012

நவம்பர் 28, 2012

தந்தையாம் இறைவனை நோக்கி அழைத்துச்சென்ற
இயேசுவே நமக்குரிய எடுத்துக்காட்டு - திருத்தந்தை

   வத்திக்கானின் பாப்பிறை ஆறாம் பவுல் அரங்கம் வழக்கம்போல் நிரம்பி வழிய, விசுவாச ஆண்டு குறித்த போதனைகளை இவ்வார புதன் பொது மறைபோதகத்திலும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தொடர்ந்தார்.
   மனித இதயத்தின் ஆழமான ஏக்கங்களின் பதிலு ரையாக நம் உடன் வாழ் மக்களுக்கு கிறிஸ்தவ விசுவாசத்தை எடுத்துரைப்பதும், இறைவனைக் குறித்து அவர்களுடன் உரையாடுவதும் எவ்வாறு என்பது குறித்து, விசுவாச ஆண்டின் இந்த மறைக் கல்வி தொடரின் ஒருபகுதியாக இன்று நோக்கு வோம். இயேசு கிறிஸ்துவின் கடவுளை நம் காலத் தின் மக்களுக்கு கொண்டுவருவதை இது குறித்து நிற்கிறது. இயேசுவின் நற்செய்தி யின் உள் மையப்பகுதிக்கு அமைதியாகவும் தாழ்ச்சியுடனும் சான்றுபகர்வதையும் இது குறித்து நிற்கிறது. இது அன்பே வடிவான இறைவனின் நற்செய்தி. அவரே சிலுவை வரையிலும் சென்ற இயேசுவில் நமக்கு நெருக்கமாக வந்தார். மேலும் உயிர்ப்பின் வழி நமக்கு முடிவற்ற வாழ்வு குறித்த வாக்குறுதியையும் நம்பிக்கை யையும் தந்தார். மக்களின் கேள்விகள், போராட்டங்கள், தேவைகள் குறித்த அன்பு நிறை அக்கறையின் வழியாக மக்களை, தந்தையாம் இறைவனை நோக்கி அழைத் துச்சென்றதன் மூலம் இயேசு நமக்குரிய எடுத்துக்காட்டாக உள்ளார். நம் உடன்வாழ் மக்களுக்கு இறைவனைக் கொணர்வதில் குடும்பங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் மகிழ்விலும் உரையாடலிலும் மன்னிப்பிலும் அன்பிலும் விசுவாச வாழ்வு குடும்பங்களிலேயே தினமும் வாழப்படுகிறது. நம்மை அன்பால் மீட்டு நம் உயர் நிலையை வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்துவின் கடவுள், மனித நகர் இறைநகராக மாறும் வண்ணம் புதுப்பிக்கப்படுமாறு திருச்சபைக்குள் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
   இவ்வாறு இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, வரும் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படவுள்ள எயிட்ஸ் விழிப்புணர்வு தினம் குறித்த தன் கருத்துக்களையும் வழங்கினார்: "பல இலட்சம் உயிர்களைப் பலி வாங்கி, பலரின் துன்பங்களுக்கு காரணமாகிய இந்நோய், பெரும்பாலும் ஏழை நாடு களின் மக்களையே பாதித்துள்ளதை நான் அறிவேன். ஒவ்வோர் ஆண்டும் தாயின் வழியாக எண்ணற்ற குழந்தைகள் இந்நோயைப் பெறுவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்நோயைக் கட்டுப்படுத்த திருச்சபை மேற்கொள்ளும் அனைத்து முயற்சி களும் வெற்றியடைய ஊக்கமளிக்கிறேன்."
   மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்த லிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, November 25, 2012

நவம்பர் 25, 2012

இறையாட்சியை அறிவித்து பரப்பும் பணியைத்
திருச்சபை கொண்டுள்ளது - திருத்தந்தை

   கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலி முடிந்த தும், வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் கூடி யிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாறு மூவேளை செப உரை வழங்கினார்.
   இன்று திருச்சபை ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் என்பதைக் கொண்டாடுகிறது. திருவழிபாட்டு ஆண்டின் இறுதியில் வரும் இந்த பெருவிழா, கடவுளே அனைத்துக்கும் அனைத்து மாக இருக்கும் இறையாட்சியைப் பற்றிய நமது பார்வையை விரிவாக்குகிறது. புனித சிரில் இவ்வாறு கூறுகிறார்: "நாம் கிறிஸ்து வின் முதல் வருகையைப் பற்றி மட்டுமல்ல, அதைவிட அழகான இரண்டாவது வருகையைப் பற்றியும்   அறிவிக்கிறோம். உண்மையில், முதலாவது வெளிப்பாடு துன்பத்துக்குரியது, இரண்டாவதோ இறை அரசுரிமைக்குரிய மாட்சியைக் கொண்டு வரும்... முதலாவதில், அவர் சிலுவையின் அவமானத்துக்கு உட்பட்டார், இரண்டா வதில் அவர் வானதூதர்கள் புடைசூழ மாட்சி பெறுவார்."
   இயேசுவின் முழுப்பணியும், அவரது செய்தியின் சாரமும் இறையாட்சியை அறி விப்பதையும், அதன் அடையாளங்கள் மற்றும் வியப்புக்களுடன் மனிதர் மத்தியில் அதனை நடைமுறைப்படுத்துவதையும் கொண்டுள்ளன. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவது போல, தமது சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பினால் கிறிஸ்து நிறுவிய இறையாட்சி முதலில் கிறிஸ்து என்ற மனிதரில் வெளியானது. கிறிஸ்துவின் இந்த இறையாட்சி திருச்சபையிடம் கொடுக்கப்பட்டுள்ளது, அதற்கு தொடக்கமும் விதையுமாக இருக்கும் இத்திருச்சபை, தூய ஆவியின் வல்லமையால் அனைத்து நாடுகளிலும் அதனை அறிவித்து பரப்பும் பணியைக் கொண்டுள்ளது. குறித்த காலத்தின் முடிவில் நமது ஆண்டவர் இறையாட்சியைத் தந்தையாம் இறை வனிடம் வழங்குவார் மற்றும் அன்புக் கட்டளைக்கு இயைந்த வகையில் வாழ்ந்த அனைவரையும் அவரிடம் கையளிப்பார்.
   நற்செய்திக்குரிய நமது மனமாற்றத்தின் மூலம், கடவுளின் மீட்பு பணியைத் தொடர்ந்தாற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். பணிவிடை ஏற்பதற்கு அன்றி, உண்மைக்கு சான்று பகர வந்த அரசரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவோம். இந்த உணர்வுடன், இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாக உயர்த்தப்பட்ட ஆறு பேருக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் தூய ஆவியால் நம்பிக் கையிலும் பிறரன்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு அவரின் அனைத்துக் கொடைகளாலும் அவரால் நிரப்பப்படுவார்களாக!

Wednesday, November 21, 2012

நவம்பர் 21, 2012

கடவுளின் படைப்பை விவேகத்தோடு கையாள்வதில் நம்பிக்கையும் அறிவியலும் சேர்கின்றன - திருத்தந்தை

   வத்திக்கானின் பாப்பிறை 6ம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிக ளுக்கு புதன் பொது மறைபோதகம் வழங்கிய திருத் தந்தை 16ம் பெனடிக்ட், விசுவாசத்தைப் புரிந்து கொள்வது குறித்து விளக்கினார் .
அன்பு சகோதர சகோதரிகளே,
   நம்பிக்கை ஆண்டில் நாம் கேட்டுவரும் புதன் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக, கடவுளின் உண் மையின் மகிமையோடு சந்திப்பதாக, கடவுள் மீதான நம்பிக்கையை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொள்வது குறித்து இன்று நோக்குவோம். நம்பிக்கை மூலமாக கடவுள் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் உண்மையான அறிவைப் பெறுகிறோம். வாழ்வின் நிறை வையும், மகிழ்ச்சியையும் மறுவுலகில் பெறுவதற்காகக் காத்திருக்கும் நாம், இவ் வுலகில் விவேகத்துடன் வாழ்வதற்கும் நம்பிக்கை வழியாகக் கற்றுக் கொள்கிறோம். கடவுள் பற்றிய உண்மையை மனித மனத்திற்குத் திறந்து வைப்பதில் நம்பிக்கையும் அறிவும் ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. உண்மையைத் தேடும் அறிவானது, கடவுளின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையோடு இடம்பெறும் சந்திப்பில் உள்தூண்டு தலையும், வழிகாட்டுதலையும், நிறைவையும் கண்டு கொள்கின்றது. அதேநேரம், நம்பிக்கை, தனது இயல்பிலே கொண்டிருக்கும் புரிந்துகொள்ளும் வழிகளைத் தேடு கின்றது. மனிதரின் அறநெறி வாழ்வின் முன்னேற்றத்துக்கும், அவர் படைப்பை விவேகத்தோடு கையாள்வதற்குமான சேவையில் நம்பிக்கையும் அறிவியலும் கை கோர்த்துச் செல்கின்றன. இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நமது மீட்பின் நற்செய்தி யானது உண்மையான மனிதத்தை நமக்கு வழங்குகிறது. மனிதர் மற்றும் அகிலத் தின் பேருண்மையைப் புரிந்துகொள்வதற்கு ஓர் இலக்கணத்தையும் இது நமக்கு வகுக்கின்றது. நமது மனித மாண்பு மற்றும் அழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் கடவுளின் உண்மையின் ஒளிக்கு இந்த நம்பிக்கை ஆண்டில் நாம் நமது மனங்களைத் திறப்போமாக!
   இவ்வாறு இப்புதன் மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, இஸ்ரேல் - காசா இடையிலான பிரச்சனை குறித்தும் பின்வருமாறு தன் கருத்துகளை வெளிப் படுத்தினார்: காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவத்துக்கும் ஹமாஸ் புரட்சியாள ருக்கும் இடையே இடம்பெற்றுவரும் வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இஸ்ரேலுக்கும் காசா பகுதியிலுள்ள பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அதிகரித்துவரும் வன்முறை குறித்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன். இந்த வன்முறையில் பலியானவர்கள் மற்றும் துன்புறுவோருக்காக நான் செபிக்கிறேன். போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை நான் ஊக்குவிக்கிறேன். இரு தரப்பு அதிகாரிகளும் அமைதிக்கு ஆதர வாகத் துணிச்சலான தீர்மானங்களை எடுப்பதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் இடம்பெறும் மோதல்கள் முடிவுக்கு வரும். அதிகமான சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு அமைதியும் ஒப்புரவும் தேவை.
   இறுதியாக, இம்மறைபோதகத்தில் கலந்து கொண்ட இலங்கை, இங்கிலாந்து, அமெ ரிக்க ஐக்கிய நாடு உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, November 18, 2012

நவம்பர் 18, 2012

இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தளமாகக் கொண்டு வாழ அழைக்கப்பட்டுள்ளோம் - திருத்தந்தை

   புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த ஞாயிறு வழங்கப்பட்டுள்ள மாற்கு நற்செய்தியை மையப்படுத்தி தன் கருத்து களை எடுத்துரைத்தார்.
   விவிலிய வார்த்தைகளைப் பயன்படுத்தி, இறுதி காலத்தைக் குறித்து கூறப்படும் தவறான அர்த்தங் களை ஒதுக்கிவைத்து, இயேசுவின் கூற்றில் நாம் உண்மையான அர்த்தத்தைக் காணவேண்டும். இறுதி காலத்தைப் பற்றிய தேவையற்ற கணிப்புகளிலிருந்து விலகி, இன்றும், நாளையும், எப்போதும் நல்வழியைத் தேடவேண்டும் என்ற அறிவுரையை இயேசு இன்றைய நற்செய்தியில் வழங்குகிறார். பழைய ஏற்பாட்டிலிருந்து இயேசு பல்வேறு உருவகங்களைப் பயன்படுத்தினாலும், சாவிலிருந்து உயிர்ப்புக்குச் செல்வதற்கு, தன்னை ஒரு வழியாகக் காட்டினார்.  நம்மைச்சுற்றி முரண்பட்டப் பல நிகழ்ச்சிகள் நடந்தாலும், நமது செயல்பாடுகளுக்கு நாமே பொறுப்பு என்றும், இறுதிநாளில் இச் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே நாம் தீர்வு பெறுவோம். இன்றைய உலகில் நம்மைச் சுற்றி நிகழும் இயற்கைப் பேரிடர்கள், போர்கள் ஆகிய துயர நிகழ்வுகள் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தினாலும், இறைவனை நமது நம்பிக்கைக்கு அடித்தள மாகக் கொண்டு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
   இவ்வாறு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

Wednesday, November 14, 2012

நவம்பர் 14, 2012

நம் வாழ்விலிருந்து கடவுள் அகற்றப்படும்போது
நாம் குறைவுபடுகின்றோம் - திருத்தந்தை

  வத்திகானில் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரும் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
   இறைவன்பேரில் நாம் கொள்ளும் அந்தரங்கமான பேரார்வம் மனித இதயத்தின் ஆழத்தில் காணக்கிடக்கிறது என்று, நம்பிக்கையின் ஆண்டு குறித்த நம் மறைபோதகத்தொடரில் கடந்த வாரம் நோக்கினோம். கடவுளை அறிந்துகொள்ளவும், நம் மகிழ்வை கடவுளில் கண்டுகொள்ளவும் நாம் எடுக்கும் முயற்சிகளில் தன் அருளின் துணை தந்து, நம்மைத் தூண்டி, நமக்கு துணையாக இறைவன் வருகிறார். இருப்பினும் இன்றைய மதச்சார்பற்ற உலகில் விசுவாசம் என்பது நியாயப்படுத்தமுடியாத ஒன்றாக பலருக்குத் தோன்றுகிறது. நடைமுறை கடவுள்மறுப்புக் கொள்கையை எதிர்நோக்கும் நாம், கடவுள் இல்லை என்பது போன்று எண்ணி அதுபோல் வாழ்வை நடத்தும் சோதனைக்கு உள்ளாகின்றோம். இறைவனால் படைக்கப்பட்டு அவருடன் ஒன்றித்து வாழ அழைக்கப்பட்டிருப்பதில் பொதிந்திருக்கும் உயரிய மாண்பைக் கொண்டிருக்கும் நம் வாழ்விலிருந்து கடவுள் அகற்றப்படும்போது நாம் குறைவுபடுகின்றோம். விசுவாசிகள் என்ற முறையில் நாம் நம் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் நம்பத்தகும் பகுத்தறிவுவாத காரணங்களை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த காரணங்களை நாம், தன்னைப் படைத்த இறைவனைப்பற்றிப் பேசும் படைப்புகளின் அழகில் கண்டுகொள்ளலாம். மனிதனின் இதயத்தில் முடிவற்றதாய் நிலைத்திருக்கும் ஏக்கத்தின் நிறைவை இறைவனில் மட்டுமே நாம் கண்டுகொள்ளமுடியும். மேலும், இறைவனுடன் நாம் கொள்ளும் தினசரி ஒன்றிப்பின் வழி நம்மை ஒளியூட்டி உருமாற்றும் விசுவாசத்தின் வழியாகவும் நம் ஏக்கத்தின் நிறைவைக் கண்டுகொள்ள முடியும். கிறிஸ்துவில் தன்னை வெளிப்படுத்திய இறைவனை அறிந்து அன்புகூர மற்றவர்களையும் வழிநடத்திச்செல்ல உதவும் விதமாக உயிருள்ள விசுவாசத்தின் சாட்சிகளாக நாம் விளங்குவோமாக!
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கியத் திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Wednesday, October 31, 2012

அக்டோபர் 31, 2012

திருச்சபையைத் தாயாக கொள்ளாத எவரும் கடவுளைத்
தந்தையாகக் கொண்டிருக்க முடியாது - திருத்தந்தை

   வத்திக்கானில் மழை தூறிக் கொண்டிருந் ததால், தூய பேதுரு பேராலய வளாகத்தில் குடைகளைத் தாங்கியவர்களாக திருப்பய ணிகள் கூடியிருக்க, திருத்தந்தை 16ம் பென டிக்ட் அவர்களுக்கு இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார்.
   நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக்கல்வித் தொடரில், விசுவாசம் என் பது தனிப்பட்ட மனிதரின் ஆழ்ந்த அனுப வம் என்பதைக் கண்டோம். நம் வாழ்வை மாற்றியமைத்து அதனை வளப்படுத்தும் இறைவனின் கொடையே விசுவாசம். அதேவேளை, விசுவாசம் எனும் கொடையா னது திருச்சபை சமூகத்தில், அச்சமூகம் வழியாகவே வழங்கப்படுகிறது. திருமுழுக் கில் நான் திருச்சபையின் விசுவாசத்தைப் பெற்று அதை என்னுடையதாக உரிமை யாக்கி கொள்கிறேன். விசுவாச அறிக்கையை வெளியிடுவதிலும், திருவருட்சாதனங் களை ஒன்றிணைந்து கொண்டாடுவதிலும் என்னுடைய தனிப்பட்ட விசுவாசம், தன் வெளிப்பாட்டைக் கண்டுகொள்கிறது. தூய ஆவி எனும் கொடை வழியாக கிறிஸ்து வில் நாம் வாழும் புதிய வாழ்வு, திருச்சபை சமூகத்துக்குள் பெறப்பட்டு ஊட்டமளிக் கப்படுகிறது. இவ்வகையில் பார்த்தால், திருச்சபை நம் தாயாக உள்ளது. புனித சிப்ரியன் கூறுவதுபோல், "திருச்சபையைத் தாயாகக் கொண்டிராத எவரும், கடவு ளைத் தந்தையாகக் கொண்டிருக்க முடியாது." திருச்சபையின் உயிருள்ள பாரம்பரி யத்தில் உறைந்திருக்கும் நாம், பெற்ற விசுவாசத்தை செயல்படுத்தி அதில் வளர்வ துடன், இவ்வுலகில் இயேசுவின் ஒளி மற்றும் அமைதியின் கலங்கரை விளக்குக ளாகத் திகழ்வோமாக!
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதன் இறுதியில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீசிய புய லால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செபங்களுக்கு உறுதி கூறியதுடன், அவர்களுக் காக உழைக்கும் அனைத்து தரப்பினருடன் தனது ஒருமைப்பாட்டையும் வெளியிட் டார். பல்வேறு மொழிகளில் புதன் மறைபோதகத்தை வழங்கிய பின், திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, October 28, 2012

அக்டோபர் 28, 2012

ஒருவர் வாழ்வின் பாதையில் நடக்க விரும்பினால்
அவருக்கு இறைவனின் ஒளி தேவை - திருத்தந்தை

  13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை, இம்மாதம் 7ந்தேதி வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தித் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இஞ்ஞாயிறன்று அதனை கூட்டுத் திருப்பலியுடன் நிறைவு செய்தார். பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவால் பார்வை பெற்றதை விளக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாச கத்தை அடிப்படையாக வைத்து இத்திருப்பலியில் திருத்தந்தை மறையுரை நிகழ்த்தினார்.
   பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெற்ற புதுமை புனித மாற்கு நற்செய்தியின் அமைப்பில் குறிப் பிடத்தக்க இடத்தில் உள்ளது. ஜோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எருசலேம் புனித நகரத்துக்குச் செல்லும் ஏற்றமான பாதையில் இயேசு எரிக்கோவைக் கடந்து செல்கி றார். அவர் எரிக்கோவை விட்டு வெளியே சென்ற போது திமேயுவின் மகன் பர்த் திமேயு சாலையோரத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்று மாற்கு நற்செய்தியாளர் சொல்கிறார். புனித மாற்கு நற்செய்தி முழுவதுமே நம்பிக்கையின் பயணமாகும். இந்த நம்பிக்கை, இயேசுவின் பயிற்சிப் பள்ளியில் படிப்படியாக வளர் கிறது. இந்த நம்பிக்கையின் பயணத்தில் முதலில் சீடர்கள் வந்தாலும், மற்றவர் களும் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் பர்த்தி மேயு. இவர் பார்வை பெற்றது, இயேசு தமது திருப்பாடுகளுக்கு முன்னர் ஆற்றிய கடைசி அற்புதமாகும். ஒருவர் மெய்மையை உண்மையிலேயே அறிய விரும்பி னால், ஒருவர் வாழ்வின் பாதையில் நடக்க விரும்பினால் அவருக்கு நம்பிக்கையின் ஒளியாகிய இறைவனின் ஒளி தேவைப்படுகின்றது. அத்தகைய மனிதரையே பர்த் திமேயு குறித்து நிற்கிறார்.
   பர்த்திமேயு பிறவியிலேயே பார்வை இழந்தவர் அல்ல. இவர் பார்வையை இழந் திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் இருப்பவரை, வாய்ப்பைப் பயன்படுத்தி இயேசுவை சந்தித்து எப்படிக் குணம் பெறுவது என்பதை அறிந்திருப்பவரைக் குறித்து நிற்கிறார். நம்பிக்கையுடன் வாழ்ந்த பர்த்திமேயு, கிறிஸ்துவைச் சந்திப்பதில் மீண் டும் பார்வை பெற்று, அத்துடன் தனது மாண்பின் முழுமையையும் அடைந்து இயேசு வோடு தனது பயணத்தைத் தொடர்கிறார். பர்த்திமேயு பற்றி வேறு எதுவும் சொல் லாத நற்செய்தியாளர், நம்பிக்கையின் ஒளியில் இயேசுவைப் பின்செல்லும் சீடத் துவ வாழ்வு என்ன என்பதை பர்த்திமேயுவில் நமக்குக் காட்டுகிறார். பர்த்திமேயு, ஏதோ ஒரு வளமை நிலையிலிருந்து நொடித்துப் போனவர். பார்வையையும் இழந்து, பிச்சை எடுப்பதற்கும் அந்நிலை அவரை உட்படுத்தியிருக்கிறது. புனித அகுஸ்தீனா ரின் இந்த விளக்கம் இன்று நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.
   நாம் கொண்டிருக்கும் விலைமதிப்பில்லாத வளங்களை நாமும் இழக்க முடியும். இங்கு பொருளாதார மற்றும் நிதி வளங்கள் பற்றி நான் பேசவில்லை, நீண்ட காலத் துக்கு முன்னர் நற்செய்தி அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களை பர்த்திமேயு குறித்து நிற்கிறார் எனச் சொல்லலாம். இப்பகுதிகளில் நம்பிக்கை ஒளி மங்கி மக்கள் இறைவனைவிட்டு விலகி இருக்கின்றனர். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் சொல்ல வேண்டுமானால் இம்மக்கள் தங்களது கம்பீரமான மாண்பிலிருந்து வீழ்ந்து, பாது காப்பான மற்றும் நல்ல வழியை இழந்து, தங்களுக்கேத் தெரியாமல் வாழ்வதன் பொருள் தேடும் பிச்சைக்காரர்களாக ஆகியுள்ளார்கள். புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி தேவைப்படும் பலரில் இவர்களும் உள்ளடங்குவர். இறைமகன் கிறிஸ்துவாகிய இயேசுவுடன் இவர்கள் புதிதாகச் சந்திப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது. கிறிஸ்து வால் இவர்களின் கண்களைத் திறந்து அவர்களுக்கான வழியைப் போதிக்க முடியும். நம்பிக்கையின் ஒளி பலவீனமடைந்துள்ள மற்றும் இறைவனின் நெருப்பு அணைந்து போனதாக இருக்கும் இடங்களில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டும் என்பதை இஞ் ஞாயிறு நற்செய்தி நமக்குக் கூறுகிறது.
   இந்தப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருச்சபையின் வாழ்வு முழுவதிலும் செயல்படுத்தப்பட வேண்டும். திருமுழுக்கு, உறுதிபூசுதல், திருநற்கருணை ஆகிய மூன்று திருவருட்சாதனத் தயாரிப்புக்களுக்குத் தகுந்த மறைக்கல்வி வழங்கப்பட வேண்டும். இறைவனின் இரக்கத் திருவருட்சாதனமான ஒப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட வேண்டும். வாழ்வின் இறுதிப்பயண நோயில்பூசு தல் திருவருட்சாதனம் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மேலும், இயேசு கிறிஸ்துவை இன்னும் அறியாதோருக்கு மீட்பின் செய்தியை அறி விக்க வேண்டியது திருச்சபையின் பணியாகும். ஆப்ரிக்கா, ஆசியா, ஓசியானியா ஆகிய கண்டங்களில் பல பகுதிகளில் நற்செய்தி இன்னும் முதல்முறை அறிவிக்கப் படாமலே இருக்கின்றது என ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, திருச் சபையில் புதிய மறைப்பணி ஆர்வம் ஏற்படுவதற்குத் தூய ஆவியிடம் செபிப்போம். அனைத்து மக்களும் இயேசு கிறிஸ்துவையும் அவரது நற்செய்தியையும் அறிவதற்கு உரிமை உள்ளவர்கள். எனவே குருக்கள், துறவிகள், பொதுநிலை விசுவாசிகள் அனைவரும் நற்செய்தியை அறிவிக்கும் கடமையைக் கொண்டுள்ளார்கள்.
   திருமுழுக்குப் பெற்ற அனைவரும் தங்களது திருமுழுக்குக்கு ஏற்ப வாழவில்லை. இத்தகைய மக்கள், எல்லாக் கண்டங்களிலும், குறிப்பாக, உலகாயுதப்போக்கு அதிக மாகவுள்ள நாடுகளில் இருப்பதாக ஆயர்கள் மாமன்றத்தில் கூறப்பட்டது. எனவே, பராம்பரிய மற்றும் ஆண்டுக்கணக்காய்ச் செய்துவரும் மேய்ப்புப்பணி முறைகளை யும் கடந்து புதிய முறைகளைக் கடைப்பிடிக்கும் வழிகளைத் திருச்சபைத் தேடுகி றது. அன்பாக இருக்கும் இறைவனில் வேரூன்றிய உரையாடல் மற்றும் நட்புணர் வோடு கிறிஸ்துவின் உண்மையை உலகின் பல்வேறு கலாச்சாரங்களுக்கு வழங்கும் புதிய மொழிகளை வளர்த்துக் கொள்ளும் வழிகளைத் திருச்சபைத் தேடுகிறது. புற வினத்தார் முற்றம் என்ற பெயரில் ஏற்கனவே சில முக்கிய நகரங்களில் மறைப்பணி செய்யப்பட்டு வருகிறது. புதிய நற்செய்தி அறிவிப்பாளர்கள், இயேசு கிறிஸ்து வழி யாக இறைவனால் குணமடைந்த அனுபவத்தைக் கொண்டவர்கள் போல் இருக்கிறார் கள். ஆண்டவரே, எங்களில் இருக்கின்ற அனைத்துப் பார்வையற்ற தன்மையையும் விலக்கி உண்மையின் வழியில் செல்ல எமக்கு உதவும்!
   திருப்பலிக்குப் பின்னர் மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை, புதிய நற் செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம் நிறைவுற் றிருக்கும் இவ்வேளையில், கிறிஸ்துவின்மீதான நமது நம்பிக்கையையும், மகிழ்ச்சி மற்றும் குணப்படுத்தலின் அவரின் நற்செய்தியை பரப்புவதற்கான நமது அர்ப்பணத் தையும் புதுப்பிப்போம் என்றார். கியூபா, ஹெய்ட்டி, ஜமய்க்கா, பகாமாஸ் ஆகிய நாடுகளில் கடும் புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களையும் திருத் தந்தை நினைவுகூர்ந்தார்.

Wednesday, October 24, 2012

அக்டோபர் 24, 2012

மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தை
கடவுள் நமக்கு வெளிப்படுத்துகிறார் - திருத்தந்தை

   நம்பிக்கை ஆண்டில் இடம்பெறும் தனது வழக்கமான புதன் பொதுமறைபோதகங்களில் இந்த நம்பிக்கை ஆண்டு சிந்தனைகளை வழங்கவிருப்பதாகக் கடந்த புதன் பொது மறைபோதகத்தில் அறிவித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதனன்று நம்பிக்கை குறித்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
   நம்பிக்கை ஆண்டின் நமது மறைக்கல்வித் தொடரின் தொடர்ச்சியாக நம்பிக்கையின் இயல்பு குறித்து இன்று பார்ப்போம். நம்பிக்கை என்பது, கடவுள் பற்றிய அறிவை மட்டும் வெறுமனே கொண்டிருப்பதற்கும் மேலாக, அவரை வாழ்வில் சந்திப்பதாகும். கிறிஸ்துவின் வாழ்வு, மரணம், உயிர்ப்பு ஆகியவற்றில் தம்மையே வெளிப்படுத்திய கடவுளை நம்பிக்கை வழியாக அறிந்து அன்புகூர்கிறோம். அவ்வாறு செய்யும்போது, மனிதர்களாகிய நாம் வாழ்வதன் ஆழமான அர்த்தத்தையும் உண்மையையும் அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். இந்த நம் காலங்களின் ஆன்மீகக் குழப்பங்களுக்கு மத்தியில் உறுதியான பற்றுறுதியையும் வழியையும் நம்பிக்கை நமக்கு அளிக்கின்றது. அனைத்துக்கும் மேலாக, நம்பிக்கை ஒரு விண்ணகக் கொடை. இறைவார்த்தைக்கு நமது இதயங்களையும் மனங்களையும் திறக்கவும், திருமுழுக்கு வழியாக திருச்சபைக்குள் அவரது இறைவாழ்வில் பங்குதாரர்கள் ஆகவும் நம்பிக்கை நமக்கு உதவுகிறது. எனினும், நம்பிக்கை, நமது அறிவையும் சுதந்திரத்தையும் சார்ந்து இருக்கும் ஓர் ஆழமான மனிதச் செயலாகவும் இருக்கின்றது. கடவுளது அழைப்பையும் அவரது கொடையையும் நாம் வரவேற்கும்போது நமது வாழ்வும், நம்மைச் சுற்றியுள்ள உலகமும் மாற்றம் அடைகின்றன. நமது நம்பிக்கையை நாம் முழுமையாக வாழவும், நம்பிக்கை உறுதியளிக்கும் நித்திய வாழ்வுக்கு மற்றவர்கள், தங்களின் இதயங்களைத் திறந்து வைத்து, இறைவார்த்தையைக் கேட்டு அதனை ஏற்கவும் இந்த நம்பிக்கை ஆண்டு உதவுவதாக!
   வருகிற நவம்பர் 24ம் தேதி இடம்பெறும் நிகழ்வில் பாப்பிறை இல்லத் தலைவர் பேராயர் ஜேம்ஸ் மைக்கேல் ஹார்வே, லெபனனின் மாரனைட் ரீதியின் அந்தியோக்கிய முதுபெரும் தலைவர் பெச்சரா பெட்ரோஸ் ராய், சீரோ-மலங்கரா ரீதி பேராயர் பசெலயொஸ் கிளீமிஸ் தொட்டுங்கல், நைஜீரியாவின் அபுஜா பேராயர் ஜான் ஒலோருன்பெமி ஒனையேகன், கொலம்பியாவின் பொகோட்டா பேராயர் ரூபன் சலாசர் கோமெஸ், பிலிப்பைன்சின் மனிலா பேராயர் லூயிஸ் அன்டோனியோ தாக்லே ஆகிய ஆறு பேர் கர்தினால்கள் அவையில் புதிதாக இணையவிருக்கிறார்கள். புனித பேதுருவின் வழிவருபவர் தமது சகோதரர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும் திருப்பணியில் அவருக்கு உதவ வேண்டியவர்கள் கர்தினால்கள். இவர்களுக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
   இவ்வாறு தனது புதன் பொதுமறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, 16ம் பெனடிக்ட், ஜப்பான், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா, கானடா, பிரிட்டன், டென்மார்க், நார்வே, நைஜீரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து வந்திருந்த பயணிகளை வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். திருச்சபையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை, இந்த ஆறு பேருடன் சேர்ந்து 122 ஆக உயர்ந்துள்ளது.

Sunday, October 21, 2012

அக்டோபர் 21, 2012

புதிய நற்செய்திப் பணிக்கு இன்றைய ஏழு புனிதர்களும்
சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றனர் - திருத்தந்தை

   மறைபரப்பு பணி ஞாயிறான இன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஏழு அருளாளர்களைப் புனிதர்களாக அறிவித்தத் திருச்சடங்கை நிகழ்த்திய திருத்தந்தை, அவர்க ளின் புனித வாழ்வைப் பற்றி தனது மறையுரையில் எடுத்துரைத்தார்.
   ஆண்டவர் இயேசு தனது திருப்பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மறைபொருளை நிறைவு செய்ய எருசலேம் செல்லும் வழியில் கூறிய வார்த் தைகளுக்கு திருச்சபை இன்று மீண்டும் செவிமடுக் கிறது. இவ்வார்த்தைகள் கிறிஸ்துவின் தியாகத்தா லும், முழுமையான தற்கையளிப்பாலும் குறிக்கப் பட்ட அவரது மண்ணகப் பணியின் பொருளைத் தருகின்றன. அக்டோபர் மாதத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று, உலக மறைபரப்பு ஞாயிறை சிறப்பிக்கும் நாளில், இந்த வார்த்தைகளுக்கு சிறப்பு கவனத்துடன் செவிமடுத்து, தன்னை முழுவதும் கொடுத்து, தனது வாழ்வையே பலியாக்கிய கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின் பற்றி மனித குலத்துக்கும், நற்செய்திக்கும் சேவை புரிவதற்கான முழுமையான அர்ப் பணிப்பைப் புதுப்பிக்கிறது.
   “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பல ருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.” இந்த வார்த் தைகளே இன்று திருச்சபை மாட்சிக்குரிய புனிதர் பட்டியலில் இணைக்கும் ஏழு ஆண், பெண் அருளாளர்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்தது. பல்வேறு நாடு களைச் சார்ந்த ஜாக்வஸ் பெர்தியூ, பேத்ரோ கலுங்சோட், ஜியோவன்னி பாட்டிஸ்டா பியமார்ட்டா, மரியா டெல் கார்மெலோ, மரியானே கோப், கேத்தரி தெகக்வித்தா, அன்னா ஸ்காபர் ஆகிய 7 பேரும் உலக மறைபரப்பு பணி நாளன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்பெறுவது பொருத்தமானது. தொன்றுதொட்டு திருச்சபை ஆற்றி வருகின்ற நற்செய்திப் பணிக்கும், தற்போது நாம் சிந்திக்கும் புதிய நற்செய்திப் பணிக்கும் இன் றைய ஏழு புனிதர்களும் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றனர்.

Wednesday, October 17, 2012

அக்டோபர் 17, 2012

நம்மைப் படைத்த இறைவனை அறியவும் அன்பு
செய்யவும் விசுவாசம் உதவுகிறது - திருத்தந்தை

   கடந்த ஞாயிறன்று திருச்சபையில் நம்பிக்கை யின் ஆண்டைத் தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதன் பொது மறைபோதகத்தில் நம்பிக்கை ஆண்டு குறித்த புதிய தொடர் ஒன்றைத் தொடங்கினார்.
  
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவோடு சிறப்பிக்கப்படும் நம்பிக்கை ஆண்டு குறித்த திருச்சபை கொண்டாட்டங்களுடன் இணங்கிச் செல்லும் விதமாக இன்றைய புதன் மறைபோதகத்திலிருந்து, புதிய தொடர் ஒன்றைத் தொடங் குகிறேன். இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம் என்னும் கொடையில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் கொண்டிருக்க இந்த நம்பிக்கையின் ஆண்டு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து, நம் இவ்வுலக வாழ்வின் இறுதி இலக்கை நமக்குக் காட்டுகிறார். விசுவாசம் நம் வாழ்வை மாற்றி அமைக்கிறது, நம்மைப் படைத்த இறைவனை அறியவும் அன்பு செய்யவும் உதவுகிறது. அவரின் விருப்பத்திற்கு இயைந்த வகையில் சுதந்திரமாக வாழவும், உண்மையான மனிதாபி மான மற்றும் சகோதரத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கவும் அந்த விசுவாசம் உதவுகிறது. நம் இந்தப் புதன் மறைபோதகத் தொடர், அப்போஸ் தலிக்க விசுவாச அறிக்கையின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விசுவா சத்தின் மைய உண்மைகளைக் குறித்து எடுத்துரைப்பதாக இருக்கும். இயேசுவின் மறையுண்மைகள் பற்றிய முழு அறிவை நோக்கிச் செல்லவும், இயேசுவின் உட லாம் திருச்சபையின் வாழ்வில் ஆழமாகப் பங்குகொள்வதற்கும் இந்த நம்பிக்கை யின் ஆண்டு அனைத்து விசுவாசிகளையும் வழிநடத்திச் செல்வதாக!
   இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆஸ்தி ரேலியாவிலிருந்து வந்திருந்த இசுலாமிய - கத்தோலிக்க கல்விக் குழு மற்றும் வட அமெரிக்க யூதக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் திருப்பயணிகளையும் வாழ்த்தி அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Sunday, October 14, 2012

அக்டோபர் 14, 2012

செல்வம் செய்ய இயலாததை கிறிஸ்துவின்
அன்பு நிறைவேற்றுகின்றது - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம் விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத் தந்தை 16ம் பெனடிக்ட், இன்றைய நற் செய்தி வாசகத்தின் கருத்தை விளக்கினார்.
   கிறிஸ்துவைப் பின்செல்ல விரும்பிய இளம் செல்வர் ஒருவர் முகம் வாடி வருத் தத்தோடு திரும்பிச்சென்றதை இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் விளக்குகிறது. கடவு ளின் கட்டளைகள் அனைத்தையும் இளமை முதல் கடைப்பிடித்து வந்த அந்த இளைஞர் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடையாததால் இயேசுவிடம் வந்து நிலைவாழ் வினை உரிமையாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார். ஒவ்வொ ருவரையும் போலவே இந்தச் செல்வரும் ஒருபக்கம் நிலைவாழ்வின் முழுமை நோக்கிக் கவரப்பட்டார், மறுபக்கம், தனது செல்வத்தைச் சார்ந்து வாழ்ந்த அந்த இளைஞர் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் நிலைவாழ்வை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார். எனவேதான் தனக்கு உள்ளவற்றை யெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுத் தன்னைப் பின்செல்லுமாறு இயேசு சொன்னபோது அதைப் புறக்கணித்தார். அவரது செயல், செல்வர்கள் இறை யாட்சிக்கு உட்படுவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்ற இயேசுவின் கருத்துக்கு அடிப்படையாக உள்ளது. இறையாட்சிக்குப் பணிபுரிவதற்குச் செல்வங்கள் தடைகளை முன்வைக்காவிட்டாலும், மனித சமுதாயத்தின் உள் ளார்ந்த தேவைகளை நிறைவேற்றும் வழிகளில் செல்வம் செய்ய இயலாததை கிறிஸ்துவின் அன்பு நிறைவேற்றுகின்றது. நிறைய செல்வங்கள் வைத்திருக்கும் மனிதரின் இதயத்தைக் கடவுளால் வெல்ல முடியும். இது மனிதரால் இயலாதது, ஆனால் கடவுளுக்கு எல்லாம் இயலக்கூடியதே!

Thursday, October 11, 2012

அக்டோபர் 11, 2012

இன்றைய ஆன்மீகப் பாலைவன உலகில் கிறிஸ்துவை
மீண்டும் அறிவிக்க வேண்டும் - திருத்தந்தை

   உரோம் தூய பேதுரு பேராலய வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியில் இவ்வியாழனன்று விசுவாச ஆண்டை தொடங்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்வரு மாறு மறையுரை வழங்கினார்.
   இன்று திருச்சபை ஒரு புதிய விசுவாச ஆண்டையும் புதிய நற்செய்தி அறிவிப்பு பணியையும் பரிந்துரைக்கின்றது என் றால் இது கடந்த ஐம்பது ஆண்டுகளின் நிறைவைக் கவுரவப் படுத்துவதற்காக அல்ல, ஆனால், கடந்த ஐம்பது ஆண்டுக ளைவிட இன்று இன்னும் அதிகமான தேவை ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே. இந்தத் தேவைக்கானப் பதில், திருத்தந்தை யரால், ஆயர்கள் மாமன்றத் தந்தையரால் மற்றும் பொதுச் சங்கக் கொள்கைத் திரட்டுகளால் விரும்பப்பட்ட ஒன்றாகும். புதிய நற்செய்தி அறிவிப்பு பணியை ஊக்குவிப்பதற்கென ஒரு திருப்பீட அவை உருவாக்கப்பட்டதும் இந்தச் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இன்றைய உலகில் ஆன்மீகப் பாலைவனம் வளர்ந்து வருவதை அண்மைப் பல ஆண்டுகளாகக் காண முடிகின்றது. கடவுள் இல்லாத உலகமும் மனித வாழ்வும் எப்படி இருக்கும் என்பதற்கு வரலாற்றின் சில பக்கங்கள் மூலம் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கக் காலத்திலே ஏற்கனவே பார்க்கக் கூடியதாய் இருந்தது. ஆனால் இப்பொழுது இதனை நாம் ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றிலும் பார்க்க முடிகின்றது.

   ஆயினும், இந்தப் பாலைவன மற்றும் இந்த வெறுமை அனுபவத்திலிருந்து, விசு வசிப்பதன் மகிழ்ச்சியையும் அதன் உயிர்த்துடிப்பான முக்கியத்துவத்தையும் நாம் மீண்டும் கண்டுணருகிறோம். நாம் வாழ்வதற்கு எது முக்கியம் என்பதன் மதிப்பை இந்தப் பாலைவனத்திலிருந்து மீண்டும் கண்டுணருகிறோம். எனவே இன்றைய உல கில் இறைவன் மீதான தாகத்தின் மற்றும் வாழ்வின் மூலக்காரணமான பொருளைத் தேடுவதன் எண்ணற்ற அடையாளங்கள் வெளிப்படையாக அல்லது மறைவாக அடிக் கடி வெளிப்படுத்தப்படுகின்றன. இந்தப் பாலைவனத்திற்கு விசுவாசத்தின் மக்கள் தேவைப்படுகிறார்கள். தங்களது சொந்த வாழ்வால் நம்பிக்கையை உயிர்பெறச் செய்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிகாட்டும் விசுவாசிகள் தேவைப்படுகிறார் கள். வாழ்ந்து காட்டப்படுகிற விசுவாசம், நம்பிக்கையின்மையில் இருந்து விடுதலை யாக்கும் கடவுளின் அருளுக்கு இதயத்தைத் திறக்கின்றது. எக்காலத்தையும்விட இக் காலத்தில் நற்செய்தி அறிவித்தல் என்பது கடவுளால் மாற்றம் அடைந்த புதிய வாழ் வுக்குச் சான்று பகர்வதாகும். இதன் மூலம் கடவுளின் பாதையைக் காட்ட முடியும்.
   விசுவாச ஆண்டு என்பது இன்றைய உலகில் பயணத்திற்கு எது தேவையோ அவற்றை மட்டும் நம்மோடு எடுத்துக் கொண்டு பாலைவனங்களில் திருப்பயணங் கள் மேற்கொள்வதாகும். நம் ஆண்டவர் இயேசு தம் சீடர்களை மறைப்பணிக்கு அனுப்பும்போது சொன்னது போல, பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக் கொண்டு போக வேண்டாம் எனக் கூறியதை நினைவுகூ
ர் வோம். ஆனால் நற்செய்தி, பொதுச்சங்க ஏடுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏட்டில் வெளிப்படுத் தப்பட்டுள்ள திருச்சபையின் விசுவாசம் ஆகியவை இதில் நமக்குச் சுடர்விடும் வெளிப்பாடுகளாக உள்ளன. எனது பெருமதிப்புக்குரிய மற்றும் அன்புச் சகோதரர் களே, 1962ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி இறைவனின் தாயாம் அன்னை மரியா வின் விழாவாக இருந்தது. இந்த மரியாவிடம் இந்த விசுவாச ஆண்டை அர்ப்பணிப் போம். புதிய நற்செய்தி அறிவிப்பு பணிக்கு அன்னை மரியா வழிகாட்டும் விண்மீ னாக இருக்கிறார்.

Wednesday, October 10, 2012

அக்டோபர் 10, 2012

மனிதர் கடவுளை மறக்கும்போது மனித மாண்புக்கு
இன்றியமையாத ஒன்றை மறக்கிறார் - திருத்தந்தை

   உலக ஆயர்கள் மாமன்றத்தை கடந்த ஞாயிறன்று தொடங்கி வைத்து, இவ்வியாழனன்று 'விசுவாச ஆண்டை’ தொடங்கி வைப்பதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 50 ஆண்டுகளுக்கு முன் அக்டோபர் 11ம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கி வைக்கப்பட்டதன் நோக்கங்களை விளக் கும் வகையில் புதன் மறைபோதகம் வழங்கினார்.
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங் கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு நாளின் முந்தைய நாள் இன்று. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் காலத்தில், ஆயர்கள் மட்டு மல்ல, அகில உலகத் திருச்சபையும் கொண்டிருந்த ஆர்வம், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை நான் நினைவில் கொண்டுள்ளேன். நாளை நாம் 'விசுவாச ஆண்டை' தொடங்க உள்ள இவ்வேளையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் ஏடு களுக்கு நாம் திரும்பிச் செல்லவேண்டிய அவசியம் எக்காலத்தையும்விட தற்போது அதிகமாக உள்ளது. இப்பொதுச்சங்கத்தைக் கூட்டிய அருளாளர் திருத்தந்தை 23ம் அருளப்பரின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், விசுவாச உண்மைகளின் மூலத்திற்கு எப்போதுமே சிதைவு வராமல், அவ்வுண்மைகளைப் புதுப்பிக்கப்பட்ட வழிகளில் அறிவிப்பதற்கே பொதுச்சங்கம் கூட்டப்பட்டது. வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து நம்மை வாழ்வை நோக்கி வழிநடத்திச் செல்லும் இயேசுவுடன் தனிப்பட்ட மற்றும் குழுவான சந்திப்பிலும், மூவொரு கடவுளிலான விசுவாசத்திலும், கிறிஸ் தவம் அடங்கியுள்ளது என்ற பொதுச்சங்கத்தின் ஆழமான செய்தியை, இறைவனை மறந்து வாழும் நம் காலத்தின் இத்தலைமுறையினருக்கு நினைவூட்ட வேண்டிய தேவை உள்ளது. இதிலிருந்தே அனைத்தும் தொடர்கின்றன. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க காலத்தைப் போலவே இப்போதும் நாம் சிலவற்றைத் தெளிவாக ஏற்றுக் கொள்வோம். அதாவது, கடவுள் நம்மிடையே உள்ளார், அவர் நம்மை கண்காணித்து வருகிறார், அவர் நமக்குப் பதிலுரை வழங்குகிறார், மனிதர் கடவுளை மறக்கும்போது அவர் தன் மனித மாண்புக்கு இன்றியமையாமல் இருக்க வேண்டிய ஒன்றையே மறந்து விடுகிறார் என்பவைகளைத் தெளிவுடன் ஏற்போம். நம்மை மீட்டு முடிவற்ற பேறுபெற்ற நிலைக்கு வழிநடத்திச் செல்லும் இறை அன்பு எனும் செய்தியை தன் அங்கத்தினர்கள் அனைவருக்கும் எடுத்துரைக்கும் பணியை திரு
ச்சபை கொண்டுள் ளது என்பதை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் இந்த 50ம் ஆண்டு நிறைவு நமக்கு நினைவுபடுத்தி நிற்கின்றது.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, புதன் பொது மறைபோதகங்களின்போது அரபு மொழியிலும் வாழ்த்துக்களை வெளியிடுவதை ஆரம்பித்து வைத்தார். இறுதியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 8, 2012

அக்டோபர் 8, 2012

கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்கு
திருச்சபை சான்று பகர முடியும் - திருத்தந்தை

   இத்திங்களன்று வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அறையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமை யில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வு திருப்புகழ்மாலை செபத்துடன் தொடங்கி யது. அந்த நேரத்தில் திருத்தந்தை தனது சிந்தனை களைப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார் .
   இரண்டாயிரம் ஆண்டுகள் நற்செய்தியை அறி வித்த பின்னரும் கடவுள் யார், அவர் மனித சமு தாயத்தோடு என்ன செய்கிறார் என்கின்ற பெரிய கேள்வி எப்போதும் பலரின் இதயங்களில் இருக் கின்றது. கடவுள் நமக்காக என்ன செய்துள்ளார் என்பதை திருச்சபை அறியச் செய்ய முடியும், திருச்சபை கடவுள் பற்றிப் பேச முடியும். நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும். கடவுள் திருச்சபையில் செயலாற்றுகிறார் என்பதை நற் செய்தி அறிவிப்பாளர்கள் தங்கள் இதயத்தில் அறிந்திருக்க வேண்டும், கிறிஸ்துவை உலகுக்கு அறிவிப்பதற்குப் பற்றி எரியும் ஆவலைக் கொண்டிருக்க வேண்டும்.
   கடவுள் மட்டுமே தமது திருச்சபையை உருவாக்க முடியும், கடவுள் செயல்பட வில்லையெனில் நமது செயல்கள் நமது காரியங்களாக மட்டுமே இருக்கும், கடவுள் பேசினார், அவர் பேசுகிறார், அவர் நம்மை அறிந்திருக்கிறார், அவர் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்குத் திருச்சபை சான்று பகர முடியும். நற்செய்தி என்பது கடவுள் தமது மௌனத்தைக் கலைத்துள்ளார் என்று அர்த்தமாகும். இந்த உலக ஆயர்கள் மாமன்றம் ஒவ்வொரு நாளும் செபத்தோடு தொடங்குகிறது என்றால் எந்த முயற் சியும் எப்போதும் கடவுளின் செயலாக இருக்கின்றது, எனவே நாம் கடவுளோடு ஒத்துழைக்க வேண்டும்.
   இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் சென்னை - மயிலைப் பேராயர் சின்னப்பா உட்பட 262 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். வல்லுனர்கள், பார்வை யாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என மொத்தம் 408 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.

Sunday, October 7, 2012

அக்டோபர் 7, 2012

தாராள மனதோடு மறைபணி ஆற்றியவர்கள் நடுவில்
இருந்து புனிதர்கள் மலர்கிறார்கள் - திருத்தந்தை

   வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறன்று 13வது ஆயர்கள் மாமன்றத் தந்தையரோடு திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பின்ஜென் புனித ஹில்டெகார்டு, அவிலா புனித ஜான் ஆகிய இருவரையும் திருமறையின் மறைவல்லுனர்கள் என இஞ்ஞாயிறன்று அறிவித்தார். இவர்களுடன் சேர்த்து கத்தோலிக்கத் திருச்சபையில் மறைவல்லுனர்களின் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது.
   நற்செய்திப்பணியில் புனிதர்கள் உண்மையான செயல்பாட்டாளர்கள், இவர்கள் தங்கள் எடுத்துக்காட்டான வாழ்வால் புதிய நற்செய்திப்பணிக்கு முன்னோடிகளாய் இருக்கின்றார்கள். புனித வாழ்வு என்பது கலாச்சார, சமூக, அரசியல் அல்லது சமய எல்லைகளுக்கு உட்பட்டதல்ல. இப்புனித வாழ்வின் அன்பு மற்றும் உண்மையின் மொழி, நன்மனம் கொண்ட அனைவராலும் புரிந்துகொள்ளப்படுகின்றது, இது புதிய வாழ்வின் தளராத ஊற்றாகிய இயேசு கிறிஸ்துவிடம் அவர்களை இட்டுச்செல்கிறது. கடந்த காலத்தின் மறைபோதகத் தளங்களிலும், தற்போது கிறிஸ்தவர் அல்லாதவர்கள் வாழும் இடங்களிலும் தாராள உள்ளத்தோடு மறைப்பணி ஆற்றியவர்கள் நடுவிலிருந்து புனிதர்கள் மலர்கிறார்கள். பெனடிக்ட் சபைத் துறவியாகிய பின்ஜென் புனித ஹில்டெகார்டு (1098-1179), ஓர் அறிவுக்களஞ்சியம். இவர் ஓர் இறைவாக்கினர், இசையமைப்பாளர், அறிவியலாளர், மெய்யியலாளர், இறையியலாளர், தியானயோகி, எழுத்தாளர், புனித பெர்னார்டின் நண்பர், கிறிஸ்து மற்றும் திருச்சபை மீது மிகுந்த பற்றுறுதியுடன் செயல்பட்டவர். அவிலா புனித ஜான்(1499-1569) அப்போஸ்தலிக்கப் பணியில் செபத்தை இணைத்தவர். போதிப்பதில் காலத்தைச் செலவழித்தவர். குருத்துவ மாணவர்களை உருவாக்கும் பயிற்சியை மேம்படுத்தியவர்.

   13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை தொடங்கி வைத்த திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, செபமாலை அன்னை திருவிழா தொடர்பான கருத்தினை எடுத்துரைத்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   திருச்செபமாலையின் அரசியாக இன்று நாம் சிறப்பிக்கும் அன்னை மரியாவிடம் நம் செபங்களித் திருப்புவோம். இந்த தருணத்தில் உலகெங்கும் இருந்து வரும் எண்ணற்ற மக்கள் பாரம்பரியமாக பொம்பைத் திருத்தலத்தில் கூடி அன்னையிடம் செபிக்கின்றனர். இச்செபத்தோடு நாமும் நம்மை ஆன்மீக ரீதியில் ஒன்றிணைப்போம். தொடங்கவிருக்கும் விசுவாச ஆண்டில் செபமாலை பக்தியை ஒவ்வொருவரும் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். செபமாலை மூலம், விசுவாசத்தின் மாதிரியான மரியா நம்மை வழிநடத்த அனுமதிப்போம். செபமாலையில் கிறிஸ்துவின் மறையுண்மைகளைத் தியானிப்பதன் மூலம் நாளுக்கு நாள் நாம் நற்செய்தியை உள்வாங்கிக் கொள்வதால், அது நம் அனைவருடைய வாழ்வையும் வடிவமைக்கிறது. எனது முன்னோடிகளின் வழியில், தனியாகவும், குடும்பமாகவும், சமூகமாகவும் செபமாலை செபிக்க அழைக்கிறேன். அன்னை மரியாவின் பள்ளியில் (திருச்செபமாலையில்) பயில்வது, விசுவாச வாழ்வின் மையமான கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்கிறது.
   இன்று தொடங்கியுள்ள புதிய நற்செய்திப்பணி குறித்த ஆயர்கள் மாமன்றத்துக்காக செபிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இரண்டாம் வத்திக்கான் தொடங்கியதன் ஐம்பதாம் ஆண்டு நினைவாக, இந்த வாரத்தில் விசுவாச ஆண்டு தொடங்குகிறது. நமது திருச்சபை வழியாக நம்மிடம் வருகிற இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் அழகையும் மகிழ்ச்சியையும் இந்த நிகழ்வுகள் நமக்கு உறுதி செய்வதாக! இந்த விண்ணப்பங்களை நம் செபமாலை அன்னையிடம் ஒப்படைப்போம், கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வாதிக்க நான் வேண்டுகிறேன்.

Friday, October 5, 2012

அக்டோபர் 4, 2012

 நாம் கடவுளிடம் திரும்பிவர வேண்டும் - திருத்தந்தை

   இத்தாலியில் உள்ள புகழ்பெற்ற லொரேத்தோ அன்னைமரித் திருத்தலத்துக்கு இவ்வியாழனன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றிய திருப்பலியில் பின் வருமாறு மறையுரை ஆற்றினார்.
அன்பு சகோதர சகோதரிகளே,
   1962ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதியன்று அருளா ளர் திருத்தந்தை 23ம் ஜான் இந்த லொரேத்தோ திருத்தலத்துக்கு வந்த போது இரண்டாம் வத்திக் கான் பொதுச்சங்கத்தில் கலந்து கொள்ளவிருந்த அனைவருக்காகவும் அன்னை மரியாவிடம் செபித்தார். கிறிஸ்துவின் மீதும் ஆன் மாக்களின் மீதும் கொண்டிருந்த அன்புத் துடிப்புடன் ஒரே இதயம் கொண்டவர்களாய் திருத்தூதர்களும் இயேசுவின் முதல் சீடர்களும் எருசலேம் மாடியறையில் நுழைந் தது போன்று புனித பேதுரு பசிலிக்கா மாமன்ற அறையில் நுழையும் 2ம் வத்திக்கான் பொதுச்சங்கத் தந்தையர்களுக்கு அருளைப் பொழியுமாறு அன்னையிடம் வேண்டி னார். இது நடந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து, திருச்சபை இரண்டு முக்கிய நிகழ்வு களை அன்னையிடம் அர்ப்பணிப்பதற்காக இங்கு வந்துள்ளேன்.
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ஆம் ஆண்டு நிறைவாக இந்த அக்டோபர் 11ந்தேதி தொடங்கும் விசுவாச ஆண்டையும், கிறிஸ்தவ விசுவா சத்தை பரப்புவதற்கான புதிய நற்செய்திப் பணி என்ற தலைப்பில் தொடங்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தையும் அன்னையிடம் அர்ப்பணிக்கின்றேன். விசுவசித்ததால் பேறுபெற்றவர் என அழைக்கப்பட்ட மரியாவின் பள்ளியில் பயிலும் வாய்ப்பை இந்த லொரேத்தோவில் பெறுகிறோம். அன்னையின் இவ்வுலக வீட்டைச் சுற்றிக் கட்டப் பட்டுள்ள இந்த பசிலிக்கா, இயேசுவின் பிறப்பு அவருக்கு அறிவிக்கப்பட்ட தருணத் தின் நினைவுகளைக் கொண்டிருக்கின்றது. இறைவன் மனிதஉரு எடுத்தது மற்றும் அவரது மீட்பின் சிறந்த தாக்கங்களை பரந்துபட்ட அளவில் பறைசாற்றும் நோக் கத்தை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கொண்டுள்ளது என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த லொரேத்தோவில் அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான் உறுதிப்படுத்தினார். விண்ணகமும் மண்ணகமும் ஒன்றிணைந்த இறைவனின் மனி தாவதாரப் பேருண்மையைச் சிந்திக்க அழைத்தார். இந்த அழைப்பானது இக்காலத் துக்குச் சிறப்பான விதத்தில் ஒலிக்கின்றது.
   இக்காலத்திய நெருக்கடி, பொருளாதாரத்தை மட்டுமல்ல, சமுதாயத்தின் பல துறைகளையும் பாதித்துள்ளது. மனிதர் கடவுளுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதையும், மனிதர்க்குக் கடவுள் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் இறை மகனின் மனித அவதாரம் நம்மிடம் பேசுகின்றது. கடவுள் இல்லாத வாழ்க்கையில் மனிதர், ஒருமைப்பாட்டையும் அன்பையும்விட தன்னலத்தையும், விழுமியங்களை விட பொருட்களையும் தேர்ந்தெடுக்கின்றனர். நாம் கடவுளிடம் திரும்பிவர வேண் டும். அப்போது மனிதர், மனிதராக இருக்கும் நிலைக்குத் திரும்புவார்கள். கடவு ளோடு வாழும்பொழுது, கஷ்டமான மற்றும் நெருக்கடியான நேரங்களிலும் எப்போ தும் நம்பிக்கையின் விளிம்பு தெரியும். நாம் ஒருபோதும் தனியாக இல்லை. கடவுள் மனித சமுதாயத்திடம் வந்து அவர்களோடு உடனிருக்கிறார் என்பதை கிறிஸ்துவின் மனித அவதாரம் நம்மிடம் கூறுகிறது.
   இறைமகன் உயிருள்ள வீடான மரியாவில் வாழ்ந்தது மற்றுமொரு சிந்தனையை நம்க்குத் தெரிவிக்கின்றது. கடவுள் வாழுமிடத்தை எல்லாரும் வீடுபோல் உணர் வோம். கிறிஸ்து எங்கெங்கு வாழ்கிறாரோ, அங்கெல்லாம் அவருடைய சகோதர சகோதரிகள் அந்நியர்களாக இருக்கமாட்டார்கள். கிறிஸ்துவின் தாயான மரியா நமக்கும் தாய். அத்தாய் தமது வீட்டை நமக்குத் திறந்து வைக்கிறார். அத்தாய் தமது திருமகனின் விருப்பத்தில் நாம் நுழைவதற்கு உதவுகிறார். எனவே விசுவாசமே இவ்வுலகில் ஒரு வீட்டை நமக்கு அளிக்கிறது. விசுவாசமே, நாம் அனைவரும் சகோ தர சகோதரிகளாக ஒரே குடும்பத்தில் நம்மை ஒன்று சேர்க்கின்றது.
   எனவே மரியா பற்றி நாம் தியானிக்கும்போது, ஆண்டவருக்கு நம்மைத் திறந்த வர்களாக, நமது வாழ்வை அவர் வாழும் இடமாக வழங்குவதற்கு விரும்புகிறோமா? அல்லது கடவுளின் பிரசன்னம் நமது சுதந்திரத்தை ஏதாவது ஒருவகையில் கட்டுப்படுத்தும் எனப் பயப்படுகிறோமா?, நமது வாழ்வின் ஒரு பகுதியை நமக்கென வைத்துக் கொள்கிறோமா? என நம்மையே நாம் கேட்டுக்கொள்ள வேண்டும். அதி காரம், ஆதிக்கம், தன்வயப்படுத்தும் ஆசை ஆகியவை மீதான தாகத்திலிருந்தும், ஒருவர் தனக்குள்ளே முடங்கிக் கிடப்பதிலிருந்தும் உண்மையிலேயே விடுதலை அளிக்கிறவர் கடவுளே. தன்னையே வழங்குவதற்கும் அன்பு வாழ்வுக்கும் நம்மை நிறைப்பவர் கடவுள். இதன்மூலம் அவர் நம்மை பகிர்வுக்கும் சேவைமனப்பான்மைக் கும் மாற்றுகிறார். எனவே விசுவாசம் நம்மில் குடிகொள்ளட்டும். லொரேத்தோ புனித வீடு இந்தக் கூற்றில் ஒரு முக்கியமான போதனையையக் கொண்டுள்ளது.
   மேலும், இறைவார்த்தை மனிதஉரு எடுப்பதற்கு மரியாவிடம் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில் மற்றுமொரு முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொள்கிறோம். மனித சமுதாயத்தின் ஆகட்டும் என்ற சொல்லைக் கடவுள் கேட்கிறார். இதனை நாம் முழு சுதந்திரத்துடன் சொல்வதற்கு நம்மைக் கேட்கிறார். இறையருள் நமது சுதந்திரத்தை அகற்றிவிடாது. மாறாக அது நம்மைப் படைத்து பாதுகாக்கிறது.

Wednesday, October 3, 2012

அக்டோபர் 3, 2012

திருவழிபாட்டிலேயே இறைவன் நம்மை நோக்கி
வந்து நம் வாழ்வில் நுழைகிறார் - திருத்தந்தை

   காஸ்தல் கந்தல்போவிலிருந்து வத்திக்கான் தூய பேதுரு பேராலயத்திற்கு வந்து புதன் பொது மறை போதகம் வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாரமும் செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
   திருவழிபாட்டுச் செபம் குறித்த திருச்சபையின் இயல்புநிலை குறித்து இன்று நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். திருவழிபாடு என்பது தூய ஆவியில் தந்தையாம் இறைவனை நோக்கி இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய செபத்தில் பங்குபெறுவ தாகும். இயேசுவில் ஒன்றிணைந்திருக்கும் அவ ரின் மறையுடலாம் திருச்சபை, தந்தையாம் இறைவனுக்கு தன் வழிபாட்டை செலுத் துகிறது. தந்தைக்கான இயேசுவின் செபத்தில் நம்மை நாம் அடையாளம் கண்டு கொள்ளும்போது, வானகத்தில் இருக்கிற தந்தையாம் இறைவனின் குழந்தைகளாக, கிறிஸ்தவர்களாக இருப்பதன் ஆழமான தன்மையை நாம் மீண்டும் கண்டுகொள் கிறோம்.
   திருவழிபாடு என்பது இயேசுவை முழுமையாக, முகம் முகமாக எதிர்கொள்வதும், அவரோடும் அவரின் மறையுடலாம் திருச்சபையோடும் ஒன்றித்திருப்பதும் ஆகும். இவ்வாறு, திருவழிபாடு என்பது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொண்ட, உயி ருள்ள அனைத்துலகச் சமூகத்தில் பங்குபெறுவதாகும். திருச்சபையில், திருச்சபை வழியாக திருச்சபையின் வார்த்தைகளை நம்முடையதாக மாற்றி நாம் உரையாடக் கற்றுக்கொள்ளும்போது, இறைவனின் உடனிருப்பை முழுமையாக உணர்ந்துகொள் ளும் நிலையாக செபம் மாறுகிறது.
   திருவழிபாட்டில் திருச்சபை, தன்னிலையில் உண்மைத்தன்மையுடையதாக இருக் கிறது. ஏனெனில், திருவழிபாட்டிலேயே இறைவன் நம்மை நோக்கி வந்து நம் வாழ் வில் நுழைகிறார். திருவழிபாடு என்பது நமக்காக அல்ல, மாறாக இறைவ னுக்காக கொண்டாடப்படும் ஒன்று என்பதை மனதில் நிறுத்துவோம். இது அவரின் செயல் பாடு, அவரே அதன் முக்கியக் கருப்பொருள். திருவழிபாட்டில் நம் பங்கு என்னவெ னில், கிறிஸ்துவாலும் அவரின் மறையுடலாம் திருச்சபையோடும் நாம் வழிநடத்தப் படும் வகையில் நம்மையேத் திறந்தவர்களாகச் செயல்படுவதாகும்.
   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திறக்கப்படுவதற்கும் ஒரு வாரத்திற்கு முன் னால் மரியன்னை திருத்தலம் இருக்கும் லொரெத்தோவிற்கு அருளாளர் திருத் தந்தை 23ம் அருளப்பர் திருப்பயணம் மேற்கொண்டதன் 50ம் ஆண்டை நினைவு கூரும் விதமாக நாளை (4ந்தேதி) அதே இடத்திற்கான என் திருப்பயணத்தை மேற்கொள்கின்றேன். அன்னை மரியாவின் பரிந்துரையை நோக்கிய என் செபத்தில் என்னோடு இணைந்திருக்குமாறு உங்களை நான் வேண்டுகிறேன். புதிய நற்செய்தி அறிவித்தல் குறித்த ஆயர் மாமன்றமும், விசுவாச ஆண்டும் தொடங்க உள்ளன. நம் காலத்தின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நற்செய்தியை எடுத்துரைக்கும் திருச் சபையின் பணியில் அன்னை மரியா உடன் வந்து உதவுவாராக!
   இவ்வாறு, தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இறுதியில் அனைவ ருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.