Wednesday, October 31, 2012

அக்டோபர் 31, 2012

திருச்சபையைத் தாயாக கொள்ளாத எவரும் கடவுளைத்
தந்தையாகக் கொண்டிருக்க முடியாது - திருத்தந்தை

   வத்திக்கானில் மழை தூறிக் கொண்டிருந் ததால், தூய பேதுரு பேராலய வளாகத்தில் குடைகளைத் தாங்கியவர்களாக திருப்பய ணிகள் கூடியிருக்க, திருத்தந்தை 16ம் பென டிக்ட் அவர்களுக்கு இவ்வார புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார்.
   நம்பிக்கை ஆண்டு தொடர்புடைய நம் மறைக்கல்வித் தொடரில், விசுவாசம் என் பது தனிப்பட்ட மனிதரின் ஆழ்ந்த அனுப வம் என்பதைக் கண்டோம். நம் வாழ்வை மாற்றியமைத்து அதனை வளப்படுத்தும் இறைவனின் கொடையே விசுவாசம். அதேவேளை, விசுவாசம் எனும் கொடையா னது திருச்சபை சமூகத்தில், அச்சமூகம் வழியாகவே வழங்கப்படுகிறது. திருமுழுக் கில் நான் திருச்சபையின் விசுவாசத்தைப் பெற்று அதை என்னுடையதாக உரிமை யாக்கி கொள்கிறேன். விசுவாச அறிக்கையை வெளியிடுவதிலும், திருவருட்சாதனங் களை ஒன்றிணைந்து கொண்டாடுவதிலும் என்னுடைய தனிப்பட்ட விசுவாசம், தன் வெளிப்பாட்டைக் கண்டுகொள்கிறது. தூய ஆவி எனும் கொடை வழியாக கிறிஸ்து வில் நாம் வாழும் புதிய வாழ்வு, திருச்சபை சமூகத்துக்குள் பெறப்பட்டு ஊட்டமளிக் கப்படுகிறது. இவ்வகையில் பார்த்தால், திருச்சபை நம் தாயாக உள்ளது. புனித சிப்ரியன் கூறுவதுபோல், "திருச்சபையைத் தாயாகக் கொண்டிராத எவரும், கடவு ளைத் தந்தையாகக் கொண்டிருக்க முடியாது." திருச்சபையின் உயிருள்ள பாரம்பரி யத்தில் உறைந்திருக்கும் நாம், பெற்ற விசுவாசத்தை செயல்படுத்தி அதில் வளர்வ துடன், இவ்வுலகில் இயேசுவின் ஒளி மற்றும் அமைதியின் கலங்கரை விளக்குக ளாகத் திகழ்வோமாக!
   இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அதன் இறுதியில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் வீசிய புய லால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செபங்களுக்கு உறுதி கூறியதுடன், அவர்களுக் காக உழைக்கும் அனைத்து தரப்பினருடன் தனது ஒருமைப்பாட்டையும் வெளியிட் டார். பல்வேறு மொழிகளில் புதன் மறைபோதகத்தை வழங்கிய பின், திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.