Sunday, October 21, 2012

அக்டோபர் 21, 2012

புதிய நற்செய்திப் பணிக்கு இன்றைய ஏழு புனிதர்களும்
சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றனர் - திருத்தந்தை

   மறைபரப்பு பணி ஞாயிறான இன்று வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் ஏழு அருளாளர்களைப் புனிதர்களாக அறிவித்தத் திருச்சடங்கை நிகழ்த்திய திருத்தந்தை, அவர்க ளின் புனித வாழ்வைப் பற்றி தனது மறையுரையில் எடுத்துரைத்தார்.
   ஆண்டவர் இயேசு தனது திருப்பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகியவற்றின் மறைபொருளை நிறைவு செய்ய எருசலேம் செல்லும் வழியில் கூறிய வார்த் தைகளுக்கு திருச்சபை இன்று மீண்டும் செவிமடுக் கிறது. இவ்வார்த்தைகள் கிறிஸ்துவின் தியாகத்தா லும், முழுமையான தற்கையளிப்பாலும் குறிக்கப் பட்ட அவரது மண்ணகப் பணியின் பொருளைத் தருகின்றன. அக்டோபர் மாதத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று, உலக மறைபரப்பு ஞாயிறை சிறப்பிக்கும் நாளில், இந்த வார்த்தைகளுக்கு சிறப்பு கவனத்துடன் செவிமடுத்து, தன்னை முழுவதும் கொடுத்து, தனது வாழ்வையே பலியாக்கிய கிறிஸ்துவின் எடுத்துக்காட்டைப் பின் பற்றி மனித குலத்துக்கும், நற்செய்திக்கும் சேவை புரிவதற்கான முழுமையான அர்ப் பணிப்பைப் புதுப்பிக்கிறது.
   “மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பல ருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்.” இந்த வார்த் தைகளே இன்று திருச்சபை மாட்சிக்குரிய புனிதர் பட்டியலில் இணைக்கும் ஏழு ஆண், பெண் அருளாளர்களின் வாழ்வுக்கு அடிப்படையாக இருந்தது. பல்வேறு நாடு களைச் சார்ந்த ஜாக்வஸ் பெர்தியூ, பேத்ரோ கலுங்சோட், ஜியோவன்னி பாட்டிஸ்டா பியமார்ட்டா, மரியா டெல் கார்மெலோ, மரியானே கோப், கேத்தரி தெகக்வித்தா, அன்னா ஸ்காபர் ஆகிய 7 பேரும் உலக மறைபரப்பு பணி நாளன்று புனிதர் நிலைக்கு உயர்த்தப்பெறுவது பொருத்தமானது. தொன்றுதொட்டு திருச்சபை ஆற்றி வருகின்ற நற்செய்திப் பணிக்கும், தற்போது நாம் சிந்திக்கும் புதிய நற்செய்திப் பணிக்கும் இன் றைய ஏழு புனிதர்களும் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கின்றனர்.