Sunday, September 16, 2012

செப்டம்பர் 15, 2012

இளையோர் ஒன்று சேர்ந்து லெபனானின் எதிர்
காலத்தைச் கட்டியெழுப்ப வேண்டும் - திருத்தந்தை

   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இச்சனிக் கிழமை உள்ளூர் நேரம் மாலை 5 மணிக்கு, மார னைட் ரீதி முதுபெரும் தலைவர் இல்ல வளாகத் தில் கடலெனத் திரண்டிருந்த இளையோரை சந் தித்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வருமாறு உரை நிகழ்த்தினார்.
   மத்திய கிழக்கில் கிறிஸ்தவரும் இசுலாமியரும் ஒன்றிணைந்து வாழ்வது சாத்தியமே என்பதை லெபனான் இளையோர் வெளிப்படுத்த வேண்டும். கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் இளையோர் ஒன்று சேர்ந்து, லெபனானின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில், உங் களை எதிர்பார்த்திருக்கும் மத்திய கிழக்குப் பகுதி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண் டும். முஸ்லீம்களும் கிறிஸ்தவரும், இசுலாமும் கிறிஸ்தவமும் ஒருவர் ஒருவரின் மத நம்பிக்கையை மதித்து வெறுப்பின்றி சேர்ந்து வாழ முடியும். இதன்மூலம் சுதந்திரமான மனித சமுதாயத்தை ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்ப முடியும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். லெபனானில் இருந்து மட்டுமல்ல சிரியாவில் இருந்தும் இளையோர் வந்திருப்பதைப் புரிந்து கொள்கிறேன். உங்களது துணிச்சலை நான் எவ் வளவு தூரம் வியக்கிறேன் எனச் சொல்ல விரும்புகிறேன். திருத்தந்தை உங்களை மறக்கவில்லை என்று நீங்கள் வீடு திரும்பும்போது, உங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடம் சொல்லுங்கள். உங்களது துன்பங்களையும் துயரங்களையும் கண்டு திருத்தந்தை மிகவும் மனவேதனை அடைந்துள்ளார், திருத்தந்தை தனது செபங்க ளில் சிரியாவை மறக்கவில்லை, சிரியா மக்கள்மீது அக்கறையாய் இருக்கிறார் என, உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் கூறுங்கள்.
   துன்புறும் மத்திய கிழக்குப் பகுதி மக்களையும் நான் மறக்கவில்லை. வன்முறை யையும் போரையும் நிறுத்துவதற்கு கிறிஸ்தவரும் இசுலாமியரும் ஒன்றிணைந்து வாழ்வதற்கு வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிச்சயமற்ற எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்புகளைத் தேடி நீங்கள் வேறு நாடுகளில் குடியேறுகின்றீர்கள். ஆனால் நீங்களே உங்கள் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவர்கள். நீங்கள் சமுதாயத்தி லும் திருச்சபையிலும் உங்கள் இடத்தை எடுக்க வேண்டியவர்கள். உண்மையான உறவுகளைத் தேடுங்கள். உங்கள் வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் வழிகளைத் தேடுங்கள். போலித்தனங்களைத் தகர்த்தெறியுங்கள். கடவுளின் மன்னிப்பையும் இரக்கத்தையும் உண்மையிலே கண்டுகொள்வது புதிய வாழ்வைத் தொடங்க உத வும். மன்னிப்பது எளிதானது அல்ல. எனினும் கடவுளின் மன்னிப்பு, மனமாற்ற வல் லமையை வழங்கும், மேலும் மன்னிப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். உண்மை வாழ்விலிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்க வேண்டாம், போதைப் பொருள் களையும், நுகர்வுத் தன்மையையும் பணத்தின் மீதான அன்பையும் புறக்கணியுங்கள். மன்னிப்பும் ஒப்புரவுமே அமைதிக்கானப் பாதைகளாகும். இவையே எதிர்காலத்தைத் திறந்து வைக்கும்.