Friday, January 20, 2012

ஜனவரி 20, 2012

நற்செய்தி அறிவிப்பில் இளம் அருட்பணியாளரிடமிருந்து திருச்சபை அதிகம் எதிர்பார்க்கிறது - திருத்தந்தை

   கர்தினால் தொமினிக்கோ காப்ரானிக்காவால் 555 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட ரோம் காப்ரனிக்கா குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் சுமார் எழுபது உறுப்பினர்களை இந்த வெள்ளிக் கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பின்வரும் கருத்துக் களை எடுத்துரைத்தார்:
    எந்தவிதப் பாரபட்சமுமின்றி, சகோதரத்துவத் திற்கும் திருச்சபையின் உணர்வுக்கும் திறந்த மனம் கொண்டதாய், தூய வாழ்வில் வளர்வதற்கு மிகுந்த ஆவல் கொண்டதாய் ஓர் அருட்பணியாளரின் வாழ்வு அமைய வேண்டும்.
   விசுவாசத்திற்கு வீரமுடன் சாட்சியம் பகரும் ஒரு மனிதர், கிறிஸ்துவுக்காக, கிறிஸ்துவில், கிறிஸ்துவோடு வாழும் ஒருவராக இருக்க வேண்டும் என்பதை,
இப் பயிற்சி நிறுவனத்தின் பாதுகாவலியும் கன்னி மறைசாட்சியுமான புனித ஆக்னசின் வாழ்வு உணர்த்துகின்றது.
   குருத்துவ வாழ்வுக்கானப் பயிற்சியும், எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந் ததாய், இறைவனோடும், தன்னோடும் தான் வாழும் குழுவோடும் ஓர் உறுதியான ஆன்மீக வாழ்வால் வழிநடத்தப்பட்டதாய் இருக்க வேண்டும். நற்செய்தி மற்றும் புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியில் திருச்சபை, இளம் அருட்பணியாளரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கிறது.
   இந்நிறுவனத்தில் வாழ்வோர், தங்களது அன்றாட வாழ்வில் கிறிஸ்துவோடு ஆழமாக ஒன்றித்திருப்பதன் மூலம், உண்மை மற்றும் மகிழ்வோடு குழுவில் வாழ முடியும்; அவற்றின் மூலம் இக்குருத்துவப் பயிற்சி நிறுவனத்தின் மரபுகளைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்.