Monday, February 13, 2012

பிப்ரவரி 12, 2012

நமது ஆழ்ந்த குணம்பெறலும், புது வாழ்வுக்கான நமது உயிர்ப்புமே கிறிஸ்துவின் வெற்றி! - திருத்தந்தை

   இஞ்ஞாயிறு காலை தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஞாயிறு நற்செய்தியில் இடம் பெற் றுள்ள குணமளித்தலை மையப்படுத்தி பேசினார்.
   ஒரு தொழுநோயாளி குணமான பின்னரும்கூட, அவர் சமுதாயத்தோடு எப்போது மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது யூதக் குருக்களின் வேலையாக இருந்தச் சூழலில், ஒரு தொழுநோயாளி இயேசுவிடம் வந்து, "நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று வேண்டியதை திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.
   அக்காலத்தில் மனிதரைத் தூய்மையற்றவர் என்று சொல்லி சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு காரணமாக இந்நோய் இருந்தபோதும், தொழுநோயாளியைத் தொடுவது யூதச் சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், இயேசு அந்நோயாளி யைத் தொடுவதைத் தவிர்க்கவில்லை; "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று கூறி அவரைத் தொட்டு குணமாக்கினார் என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.
   தொழுநோயாளியை இயேசு தொட்டது, இறைவனுக்கும் மனிதக் கறைகளுக்கும் இடையேயும், தூய்மைக்கும் தூய்மையற்றத்தன்மைக்கும் இடையேயும் இருக்கும் ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிகின்றது என்றுரைத்த திருத்தந்தை, இயேசு வின் இச்செயலானது, தீமை மற்றும் அதன் எதிர்மறை சக்தியைப் புறக்கணிக்க வில்லை, ஆனால் மிகக் கொடுமையான, தொற்றிக்கொள்ளும் தன்மையுடைய நிலையிலும்கூட, தீமையைவிட இறைவனின் அன்பு உறுதியானது என்பதை அவ ருடைய செயல் காட்டுகின்றது என திருத்தந்தை விளக்கினார்.
   "கிறிஸ்துவின் அந்த செய்கையிலும், அந்த வார்த்தைகளிலும் மீட்பின் முழு வரலாறும் காணப்படுகிறது; அதாவது நம்மை சிதைத்து, நம் உறவுகளை அழிக்கும் அனைத்து தீமைகளிலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்தி, குணமாக்கும் கடவுளின் திருவுளம் உள்ளடங்கி இருக்கிறது" என்று திருத்தந்தை கூறினார்.
   தொழுநோயாரில் கிறிஸ்துவைக் கண்ட புனித பிரான்சிசின் வாழ்க்கையை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, "தொடக்க பிரிவில் இருந்து மீண்டபோது, பிரான்சிஸ் தொழுநோயாரை அணைத்துக் கொண்ட போதிலும், இயேசு அவரது தொழுநோயை அதாவது தற்பெருமையை குணப்படுத்தி, அவரை கடவுளின் அன்பு கருவியாக மாற்றினார். அவ்வாறே நமது ஆழ்ந்த கும்பெறலும், புது வாழ்வுக்கான நமது உயிர்ப்புமே கிறிஸ்துவின் வெற்றி!" என்று எடுத்துரைத்தார்.
   முன் தினம், நினைவுகூரப்பட்ட லூர்து நகரில் காட்சியளித்த கன்னி மரியாவிடம் செபித்து தனது கருத்துக்களை நிறைவு செய்த திருத்தந்தை, "நம் அன்னை திருக் காட்சியாரான புனித பெர்னதெத்துக்கு வழங்கிய எக்காலத்துக்கும் ஏற்ற செய்தி, செபம் மற்றும் தபத்திற்கான அழைப்பு" என்றார்.
   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது உரையின் இறுதியில், சிரியாவில் நடைபெறும் வன்முறைகளும் இரத்தம் சிந்துதலும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று அவசர அழைப்புவிடுத்தார். மோதலில் பாதிக்கப்பட்டோரை செபத்தில் நினைவு கூருமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அவர், உரையாடல், ஒப்புரவு மற்றும் அமைதிக்கான அர்ப்பணத்தின் பாதையைத் தேர்ந்து கொள்ளுமாறும், சிரியா மக்க ளின் நியாயமான கோரிக்கைகளுக்கும், சர்வதேச சமுதாயத்தின் வேண்டுகோளுக் கும் செவிமடுக்குமாறும் சிரியா அரசு அதிகாரிகளை வலியுறுத்தினார்.