Friday, February 3, 2012

பிப்ரவரி 2, 2012

கடவுளோடு கொண்டிருக்கும் உறுதியான உறவே துறவு வாழ்வின் தன்மையை விளக்குகின்றது - திருத்தந்தை

   அர்ப்பண வாழ்வை சிறப்பிக்கும் அனைத்துலக துறவியர் தினமான இவ்வியாழன் மாலை, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆயிரக்கணக்கான இருபால் துறவி யருடன் சேர்ந்து திருப்புகழ்மாலை செபித்து மறையுரையாற் றினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். பிப்ரவரி 2ம் தேதியன்று இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வு திருச்சபையால் சிறப்பிக்கப்படுகின்றது. அருளாளரான திருத் தந்தை 2ம் ஜான் பால், 1997ம் ஆண்டில் முதன் முறையாக இந்நாளை அனைத்துலக துறவியர் தினமாக அறிவித்து, இத் தினத்தைச் சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   மறையுரையில்  இயேசுவின் ஆலய அர்ப்பணத்தைப் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, "வரலாற்று காலத்தைப் பின்பற்றி சிறப்பிக்கப்படும் இவ்விழா, கிறிஸ்து பிறப்பில் இருந்து சரியாக நாற்பதாம் நாளில் கொண்டாடப் படுகிறது. திருக்காட்சி விழாவில் நிறைவு பெறும் கிறிஸ்துமஸ் கால விழாக்களின் பண்பான கிறிஸ்துவே உலகின் ஒளி என்ற மையக்கருத்து இன்றைய கொண்டாட் டத்திலும் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.
   இறைவனோடு தனக்குள்ள உறவை உறுதிப்படுத்துவது, ஒருவரது வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் பெற வேண்டும் என்றும், இது துறவற வாழ்க்கையின் தன்மையை அதிக ஆழமாக விளக்குவதாகவும் இருக்கின்றது எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து இருபால் துறவியரின் விசுவாசத் தின் சான்றுக்கு இந்நாள் அதிக கவனம் செலுத்துகின்றது என்றும், துறவிகள் தங்களையே இறைவனுக்குக் கையளிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் எண்ணங் களையும் உணர்வுகளையும் மீண்டும் தூண்டுவதாக இத்தினம் அமைகின்றது என வும் எடுத்து கூறினார்.
   ஏழ்மை, கற்பு, பணிவு ஆகிய நற்செய்தி அறிவுரைகள், நம்பிக்கை, பற்றுறுதி, பிறரன்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, மக்களை இறைவனிடம் நெருக்கமாகக் கொண்டு வருகின்றன என்று கூறிய அவர், துறவிகள் தங்களது சபைகளின் தனி வரம் மூலம், திருச்சபைக்கும் இன்றைய உலகுக்கும் நம்பத்தகுந்த சாட்சிகளாகத் திகழவும், திருச்சபையின் போதனைகளுக்கு விசுவாசமாக இருக்கவும், விசுவாசத் துக்கு எடுத்துக்காட்டுகளாக செயல்படவும் அவர்களை வலியுறுத்தினார். 
   வருகிற அக்டோபரில் தொடங்கும் விசுவாச ஆண்டு, அனைத்து விசுவாசிகளுக் கும், சிறப்பாக துறவியர் அனைருக்கும், அகப் புதுப்பித்தலுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது என்றும், துறவிகள் சாட்சிய வாழ்வு வாழ்வதற்கும், நற்செய்தி அறி விப்பதற்கும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.