Monday, February 20, 2012

பிப்ரவரி 19, 2012

மக்களை இயேசுவிடம் கொணரும் நோக்கத்திற்காகவே கத்தோலிக்க திருச்சபை இருக்கிறது - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத் தில் இஞ்ஞாயிறு காலை 22 புதிய கர்தினால் களுடன் இணைந்து, தூய பேதுருவின் தலைமைப் பீடம் விழாவை சிறப்பிக்கும் திருப்பலியை திருத் தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றினார். வழக்க மாக பிப்ரவரி 22ந்தேதி சிறப்பிக்கப்படும் இவ்விழா, இவ்வாண்டு சாம்பல் புதனன்று வருவதால் இந்த ஞாயிறு கொண்டாடப்பட்டது. அந்த திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரையில் பின்வரும் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
   தூய பேதுருவின் தலைமைப்பீடத்தை உண்மையின் அரியணை என்று நாம் கூறலாம்; இது பிலிப்புச் செசரியா பகுதியில் பேதுருவின் மறுமொழிக்கு பின் கிறிஸ்துவால் வழங்கப்பட்டது (மத்தேயு 16:18). இந்த நீதிபதி இருக்கைப் பீடம் இறுதி இரவுணவு வேளையில் பேதுருவிடம் கூறிய வார்த்தைகளையும் நமக்கு நினை வூட்டுகிறது: "நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பிய பின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" (லூக்கா 22:32).
   கிறிஸ்துவின் மந்தையை விசுவாசத்திலும் பிறரன்பிலும் ஒன்றிணைப்பதற்கான பேதுரு மற்றும் அவரின் வழிவருபவருடைய சிறப்புப்பணியின் அடையாளமாகவும் தூய பேதுருவின் தலைமைப்பீடம் உள்ளது. பாறை என்ற பெயர் பேதுருவின் தனிப் பண்பை அல்ல, மாறாக இயேசுவால் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட மறைபொருள் அலுவலைச் சார்ந்தது. தனக்காக அல்ல, மாறாக, மக்களை இயேசுவிடம் கொண்டு ரும் நோக்கத்திற்காகவே கத்தோலிக்கத் திருச்சபை இருந்து வருகிறது. யாரிட மிருந்து வந்ததோ, யாரால் வழிநடத்தப்படுகிறதோ அவரைத் தன் வழியாக ஒளிரச் செய்வதற்காகவே திருச்சபை இவ்வுலகில் செயல்படுகின்றது.
   (17ம் நூற்றாண்டைச் சார்ந்த பெர்னினி உருவாக் கிய தூய பேதுருவின் தலைமையைக் குறிக்கும்) பேதுருவின் இருக்கை திருச்சபைத் தந்தையரால் தாங்கப்படும் சிற்பம், திருச்சபையின் பாரம்பரியத் தையும், ஒரே திருச்சபை பற்றிய உண்மை விசு வாசத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த பீடத்தில் அன்பு விசுவாசத்தின் மேல் அமர்ந்திருக் கிறது. மனிதர் கடவுள் மீதான நம்பிக்கையினை விடுத்து, அவருக்கு கீழ்ப்படிய மறுத்தால் அன்பு சிதைந்துவிடும். திருவருட்சாதனங்கள், திருவழி பாடு, நற்செய்தி அறிவிப்பு, பிறரன்பு என திருச் சபையில் உள்ள ஒவ்வொன்றும் விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது. விசுவாசம் அன்பைச் சார்ந்ததாக உள்ளது. கிறிஸ் தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் அன்பு என்ற இந்த கொடை தரப்பட்டுள்ளது. நமது சாட்சிய வாழ்வால் இக்கொடை மற்றவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
   இவ்வாறு மறையுரை ஆற்றிய திருத்தந்தை, திருப்பலியின் இறுதியில் மக்க ளோடு இணைந்து மூவேளை செபத்தைச் செபித்து அவர்களுக்கு வழங்கிய உரை யில், புதிய கர்தினால்களுக்குத் தன் சிறப்பான வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.