Saturday, February 18, 2012

பிப்ரவரி 18, 2012

புதிய கர்தினால்கள், அன்பு, ஆர்வம், ஞானம் மற்றும்
மறைசாட்சிகளுக்குரிய துணிவுடனும் திருச்சபைக்கு
பணிபுரிய வேண்டும் - திருத்தந்தை

   வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத் தில் 22 புதிய கர்தினால்களுக்கு சிவப்புத் தொப்பி யும், மோதிரமும் வழங்கி, அவர்களுக்குரிய ஆல யத்தையும் குறித்த திருவழிபாட்டை இச்சனிக் கிழமை நிகழ்த்திய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அத்திருவழிபாட்டில் புதிய கர்தினால்களுக்கு பின் வருமாறு பேருரை ஆற்றினார்.
   “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” (மத்தேயு 16:18) என்று இயேசு புனித பேதுருவிடம் சொன்ன திருச்சொற்களுடன் இப்பேருரையைத் தொடங்கிய திருத்தந்தை, இச்சொற்கள் இன்றைய திருச்சபை நிகழ்ச்சியின் பண்பை விளக்குகின்றன என்று கூறினார்.
   ஒன்றிப்பின் காணக்கூடிய அடித்தளமாகிய பேதுருவில் வெளிப்படும் திருச்சபை யின் சிறந்த பணியாளர்களாக இருக்குமாறு புதிய கர்தினால்களைக் கேட்டுக் கொண்ட திருத்தந்தை, கிறிஸ்து சிலுவையில் தம்மையே முழுவதும் கொடையாக அளித்தது, புதிய கர்தினால்களின் வாழ்வுக்கு அடித்தளமாகவும், பிறரன்பில் விசுவா சத்துடன் செயல்படக்கூடிய தூண்டுதலையும் வலிமையையும் கொடுப்பதாகவும் இருக்கட்டும் எனவும் கூறினார்.
   அடக்கி ஆள்தலும் சேவையும், தன்னலக்கோட்பாடும் பிறர்க்கென வாழும் தகைமையும், பொருள்களைக் கொண்டிருத்தலும் கொடையும், சுயநலமும் கைம் மாறு கருதாத தன்மையும், ஆகிய இவை ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் ஒன்றுக்கொன்று, மிகவும் முரணாக அமைகின்றன. ஆயினும், இயேசு காட்டிய வழி, பிறருக்குத் தொண்டு செய்யவும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்குமானது (மாற்கு 10:45) என்றுரைத்த திருத்தந்தை, புதிய கர்தினால் களும் இயேசுவின் இவ்வழியில் நடக்கத் தூண்டப்படுகிறார்கள் என்று கூறினார்.
    அன்புடனும் ஆர்வத்துடனும், வெளிப்படையாகவும் ஆசிரியர்களின் ஞானத்துட னும், மேய்ப்பர்களின் சக்தி மற்றும் பலத்துடனும், மறைசாட்சிகளுக்குரிய பற்றுறுதி மற்றும் துணிவுடனும் திருச்சபைக்கு பணிபுரியுமாறு புதிய கர்தினால்ளை கேட்டுக் கொண்ட திருத்தந்தை, எவ்வளவுக்குப் பணியாளராய் இருக்க முடியுமோ அந்த அளவுக்கே அதிகாரமும் மகிமையும் வந்தடைகின்றது என்றும், மனித குலத்திற்கு முழுவதும் விசுவாசமாய் இருப்பதிலும், மனித குலத்தின்மீது முழுவதும் பொறுப்பு டன் நடந்து கொள்வதிலும் இயேசுவின் சேவை உண்மைவடிவம் பெற்றது என்றும் தெரிவித்தார்.
   பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்ட இவ் வழிபாட்டில், புதிய கர்தினால்களுக்குரிய சிவப்புத் தொப்பி, மோதிரம், அவர்களுக் குரிய ஆலயம் ஆகியவற்றின் அர்த்தங்களையும் விளக்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்துவின் நற்செய்தியினால் எப்பொழுதும் வழிநடத்தப்பட்டவர்க ளாய், எல்லாக் காலத்திலும் கிறிஸ்துவுக்குப் பிரமாணிக்கம் உள்ளவர்களாக வாழக் கர்தினால்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்காக விசுவாசிகள் அனைவரும் செபிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.